பண்டரிபுரம்--பாண்டுரங்கன்.
255 Posts • 60K views
ரங்கனுக்கு திருவடி அழகு வரதனுக்கு கடுக்கன் அழகு திருவேங்டவனுக்கு சொருபம் அழகு திருநாரயணனுக்கு வைர முடி அழகு விட்டலுக்கு திரு சூரணம் அழகு ஆரா அமுதனுக்கு அழகோ அழகு ஒப்பிலா அப்பனுக்கு அபயம் அழகு பார்த்த சாரதிக்கு திருமுகம் அழகு ஜகந்நாதனுக்கு உருண்டை கண்கள் அழகு குருவாயூரப்பனுக்கு கௌபீனம் அழகு உடுப்பி நவநீதனுக்கு மத்து அழகு ரெங்கமன்னாருக்கு ஆண்டாள் அழகு ஆமுருவியப்பனுக்கு‌ கருணை அழகு ராஜகோபாலனுக்கு எத்தனை அழகு அப்பப்பா சொல்ல இயலா அழகு நாமமே பலம் நாமமே சாதனம் ராம கிருஷ்ண ஹரி பாண்டுரங்க ஹரி 🚩🕉🪷🙏🏻 #💙ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா🙏🏻 #பண்டரிபுரம்--பாண்டுரங்கன். #🌼ஸ்ரீ கிருஷ்ண பகவான்🌼 #🙏🏻ராதாகிருஷ்ணன்✨ #கிருஷ்ணன் பாடல் #🙏கிருஷ்ண உபதேசம்🙏 #🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏 #🙏பெருமாள்
10 likes
13 shares
தெவிட்டாத விட்டலா - 9 குழந்தையும் தெய்வமும்! 🌼🌼🌼🌼🌼🌼 ரொம்ப சின்ன பெண் ஒருவளை உங்களுக்கு இந்தக் கதையில் அறிமுகப்படுத்துகிறேன்.. அவள் யார்? பெயர் என்ன? அவள் பெற்றோர் யார்? எங்கிருந்து வந்தவள்? இது போன்ற கேள்விகளுக்கு எல்லாம் பதிலே தெரியாது. பின் என்னதான் தெரியும் என்றால் அவள் பண்டரிநாதன் சந்நிதியிலேயே வசித்தாள் என்ற ஒரே விஷயம் தான். அவன் நிழலில், அவன் தந்த பிரசாதத்திலேயே உயிர் வாழ்ந்தாள். அங்கு ஒலிக்கும் விட்டலன் பஜனையில் தனை மறந்து ஆடுவாள். கூட சேர்ந்து பாடுவாள். இது பல நாள் நடந்தும் ஒருவரும் அவளைப் பற்றி எந்த அக்கறையும் ஆதரவும் விருப்பு வெறுப்போ காட்டவில்லை. நாமதேவர் பற்றி நிறைய இனி சொல்லப்போகிறேன். பாண்டுரங்கன் என்று சொல்லும்போது நாமதேவர் பெயர் சொல்லாமலே இருக்க முடியாதே. அடிக்கடி பண்டரிபுரத்தில் விட்டலனை தரிசித்துவிட்டு விட்டல நாம சங்கீர்த்தனத்தில் ஈடுபடுபவர். அவர் எப்போதெல்லாம் ஆலயத்தில் இருக்கிறாரோ அன்றெல்லாம் அப்போதெல்லாம் கூட்டம் நிரம்பி வழியும். பக்தர்கள் ஆனந்த பரவசமாக அவரது நாம சங்கிர்த்தனத்தில், பாடும் அபங்கத்தில், தன்னிலை மறந்து சுகானுபவத்தில் வாழ்வார்கள். மிக சிறப்பாக அமைந்தது அன்று நாமதேவரின் விட்டல் பஜன். மணிக்கணக்காக நடந்த அந்த பஜனை முழுதும் தாளத்துக் கேற்ற வகையில் அந்த சிறுமி ஆடினாள். கூடவே வாங்கி பாடினாள். அவளுடைய பக்தி பூர்வமான ஈடுபாடு நாமதேவரை ரொம்பவே ஈர்த்தது. பஜனை முடிந்ததும் தன் கையாலேயே அந்த குழந்தையின் சிரசை தடவி அவளுக்கு விட்டலன் பிரசாதம் வழங்கினார் "குழந்தே, நீ யாரம்மா?" "நீங்க சொன்ன ஒரு குழந்தை தான்? "எந்தவூர்?" "பாண்டுரங்கன் இருக்கும் இடமெல்லாம் என் ஊர். தனியாக எந்த ஊரும் இல்லை" "உனது பெற்றோர்கள் யார் எங்கிருக்கிறார்கள்?" "என்னைப் பெற்றவன் பாண்டுரங்கன். அவன் இந்த ஊரில்தான் இருக்கிறான்!" "உனது வீடு எங்குள்ளது. யாருடன் வசிக்கிறாய்?" "வீடு இந்த கோவிலே. பாண்டுரங்கனுடன் தான் வசிக்கிறேன்". "உன் பெயர் என்ன குழந்தே?" "பாண்டுரங்கன் வைத்த பெயர் ஜனா பாய்" இந்த சிறு வயதில் இத்தனை பக்தியா?? பிரமித்தார் நாமதேவர். "என்னோடு வருகிறாயா? உனக்கு நிறைய நாம சங்கீர்த்தனமேல்லாம் சொல்லித் தருகிறேன்." "தாரளமாக" அன்று முதல் ஜனா பாய் நாமதேவர் மகளாக வளர்ந்தாள். நாமதேவருடன் சேர்ந்து பூஜை செய்தாள். அவருடன் பாடினாள் அவர் பஜனைக்கு ஆடினாள். அவரது நிழலாக தொடர்ந்தாள். அவருக்கு எல்லா பணிவிடைகளும் செய்தாள். அவளது நினைவு, மூச்சு, கனவு எல்லாமே பாண்டுரங்கன், பாண்டுரங்கன், பாண்டுரங்கனே! . இயற்கையிலேயே அந்த இளம் வயதிலும் முதிர்ந்த விட்டல பக்தி கொண்ட அந்த சிறுமியை போற்றினார் நாமதேவர். அவளுக்கு தன்னுடைய பக்தி பூர்வ அபங்கங்கள், பஜனைகள் எல்லாம் சொல்லிக்கொடுத்தார் . விட்டலன் அந்த இருவரையும் தன்னிரு கண்களாக பாவித்ததில் என்ன ஆச்சர்யம்? ஒரு நாள் கொட்டு கொட்டு என்று கொட்டியது மழை. நிற்கவேயில்லை. நாமதேவர் இருந்த மண் வீடு வெள்ளத்தில் மூழ்கி கரையும் நிலை. பாண்டுரங்கனே கொட்டும் மழையில் அவர்கள் இருவரும் வசித்த மண் குடிசைக்கு வந்தான். நாமதேவர் ஸ்ரீமத் பாகவதம் ஸ்லோகங்களை ஒரு சிறு அகல் விளக்கின் ஒளியில் ரசித்து படித்து கொண்டிருந்தார். ஜனா பாய் அதை ஆனந்தமாக கேட்டு கொண்டே ஒரு கல் இயந்திரத்தில் மாவு அரைத்து கொண்டிருந்தாள். அன்று இரவு அந்த மாவில் செய்த ரொட்டியே விட்டலனுக்கு நெய்வேத்யமான பிறகு அவர்களது உணவு. வேறொன்றுமே இல்லை அன்று அந்த ஏழை பக்தர் வீட்டில். விட்டலன் வரவால் மண் வீடு கரையாமல் வெள்ளத்தில் மூழ்கி அடித்து செல்லப்படாமல் தப்பித்தது. "வா பாண்டுரங்கா, வா! எதற்கப்பா இந்த கொட்டும் மழையில் நனைந்து வந்தாய்?" "என்னவோ உங்களைப் பார்த்து அளவலாவலாமே என்று ஒரு ஆர்வம். மழையை லட்சியம் செய்யவில்லை." ஒரே ஒரு வஸ்த்ரம் தான் இருந்தது நாமதேவரிடம். அதைக் கொடுத்தார். அதால் தன்னை துடைத்து கொண்ட விட்டலன் தனது ஈர உடையை களைந்து மாற்றுடை ஏதாவது இருக்கிறதா என்று தேடியதில் ஜனாபாயுடைய உடை ஒன்று கண்ணில் பட அதையே உடுத்திக் கொண்டான். ஜனா பாய் பாண்டுரங்கன் வரவால் மிக்க மகிழ்ந்தாள். விட்டலனும் நாமதேவரும் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தனர். ஜனா பாய் விட்டலன் தன்னோடு பேசமாட்டானா என்று ஏங்கினாள். அவள் மனதை புரிந்து கொண்டவன் போல விட்டலன் எழுந்து அவளிடம் சென்றான். அவளருகில் தரையில் அமர்ந்து அவளிடமிருந்து அந்த கல் இயந்திரத்தை விலக்கி தானே மாவை அரைத்தான். எல்லா மாவும் அரைத்து தீர்த்த பிறகு மூவரும் ரொட்டி தயார் செய்து மிக்க மகிழ்ச்சியோடு பாண்டுரங்கன் அவர்களோடு உணவை பகிர்ந்து கொண்டான். விட்டலன் அடிக்கடி அவர்கள் இல்லம் வந்தான். ஜனா பாய் இப்போதெல்லாம் மிக அழகாக பக்தி பூர்வமான அபங்கங்கள் இயற்றினாள். அவள் மனம் எப்போதும் பாண்டுரங்கனோடு ஒன்றி இருந்ததாலும் நாமதேவரின் அருளாலும் பயிற்சியாலும் சிறந்த காவியங்கள் உருவாயின. விட்டலனே அவள் சொல்ல சொல்ல அவற்றை எழுதினான் சில சமயம். . எப்படிப்பட்ட பெண் பார்த்தீர்களா ஜனா பாய்? தனது வாழ்க்கையினால் அவள் நமக்கு சொல்லாமல் சொல்லும் அறிவுரை என்னவாக இருக்க முடியும்? எல்லாம் அவனே, அவனன்றி ஒரு அணுவும் இல்லை, இருந்தாலும் அது அவனன்றி இம்மியும் அசையாது, நமக்கு ஏன் ''என்னால் தான் எதுவும் நடக்கும் என்ற எண்ணம்? அவன் நினைப்பதே என் செயல்'' என்ற சரணாகதித்வம் நமக்கு தேவை. இராம் க்ருஷ்ண ஹரி பாண்டுரங்க ஹரி 🚩🕉🪷🙏🏻 #💙ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா🙏🏻 #பண்டரிபுரம்--பாண்டுரங்கன். #பக்தி கதைகள் #ஆன்மீக கதைகள் #புராண கதைகள்
14 likes
4 shares
தெவிட்டாத விட்டலா - 8 சேட்டு வந்தார் 🌼🌼🌼🌼🌼🌼🌼 ஒருவரது வாழ்க்கை மற்றவர்களால் நினைவு கூறப்படுகிறது என்பது எதனால்? அவரிடம் எல்லோரும் போல் அல்லாது ஏதோ ஒரு சிறப்பு தன்மை இருந்து அது அவரால் வெளிப்படுத்தப் படுவதால் தானே?! அது பணத்தால், அழகால், எளிமையால், த்யாகத்தால் என்றெல்லாம் பலவகைப் படலாம். நாமதேவர் வாழ்க்கை நம்மால் சிறப்பாக நினைக்கப் படுவது அவரது எளிமையான, பரிசுத்தமான, சிம்பிள், பக்தியினால் தான். உள்ளத்தை கபடு இன்றி பரிசுத்தமான பீடமாக மாற்றி அதில் விட்டலனை பரிபூர்ணமாக ஏந்தி, தோழனாக, ஆசானாக, சகலமும் நீயே என்ற சரணாகதித்வமுடன் வாழ்ந்த தன்மையால் தான். சரி, கதைக்கு வருவோம். நாமதேவர் இப்போது இளைஞர். ராஜாய் அவர் மனைவியானாள். கல்யாணமாகி விட்டதால் அவர் ஒன்றும் மாறிவிடவில்லை. 24 மணி நேரமும் பாண்டுரங்கன்தான், அவன் கோவில் தான், அவன் பக்தர்கள் கூட்டம்தான். நாம சங்கீர்த்தனம் ஒன்றே மூச்சு. அவருக்கு ஒரு மகன். நாராயணன் என்று பேர். வருமானம் ஈட்டிக் கொண்டிருந்த அப்பா தாமாஜி காலமாகி விட்டதால் அம்மா கோனை, மனைவி, குழந்தை ஆகியோரும் நாமதேவரின் வருமானத்தையே நம்பி வாழ்ந்த போதிலும் நாமதேவர் இதெல்லாம் பற்றி ஸ்மரணையே இல்லாமல் இருந்தாரே!! உடுக்க உடையோ ஒருவேளை உணவோ கூட இல்லாத நிலைமை. மனைவி ராஜாய் அவர் தாய் கோனை அனைவரும் வருந்தி "விட்டலா, நீயாவது எதாவது செய்யேன். நாமதேவரைக் கொஞ்சம் எங்களைப் பற்றியும் நினைக்கச் செய்யேன் வேறே கதியின்றி நிற்கிறோமே" என்று அழுதனர். ரெண்டு மூணு நாள் கழித்து பண்டரிபுரத்துக்கு ஒரு வேற்று ஊர்க்காரர் வந்தார். அவர் பெயர் கேஷவ் சேத். பணக்கார சேட்டு. விட்டலன் கோயில் சென்று பார்த்து விட்டு நாமதேவர் வீட்டுக்கு வந்தார். வீட்டில் ராஜாய் மட்டும் தான் இருந்தாள். "இது தானே அம்மா நாமதேவர் வீடு? "ஆம். ஆனால் அவர் இல்லையே" நீங்கள் யார்? "நான் அவர் நண்பன். கேசவ் சேத். அவரைத்தான் பார்க்க வந்தேன்" "சாயந்திரமாக வந்தால் அவரை பார்க்கலாம்" "ஏதாவது சாப்பிட இருக்கிறதா?" "அய்யா, எங்களுக்கே ஆகாரத்துக்கு வழியில்லை. நாமதேவர் ஊரிலுள்ள சாதுக்களை அழைத்து வந்து உணவு கேட்கும் போது என்ன செய்வது என்பதே கவலையா யிருக்கிறதே" "அம்மா இது விஷயமாகத்தான் நான் அவரைப் பார்க்க வந்தேன். அவருக்கு ஊரெல்லாம் கடன் இருக்கிறது. கடனுக்கு சாமான் வாங்கி உணவு படைத்து சாதுக்களை திருப்தி படுத்துகிறார் ஆனால் வீட்டிலிருப்பவர்களின் ஞாபகம் கூட கிடையாது என்று கேள்விப்பட்டேன். அதனாலேயே அவருக்கு உபயோகமாயிருக்கட்டும் என்று இந்த பை நிறைய தங்கக் காசுகள் கொண்டுவந்தேன். இந்தாருங்கள் இதை அவரிடம் சேர்ப்பியுங்கள்". பை கை மாறியது. "உள்ளே வாருங்கள் தீர்த்தமாவது சாப்பிடுங்கள்." "பரவாயில்லை அம்மா. நான் வருகிறேன்" சேட்டு நகர்ந்தார் நாமதேவரின் தாய் கோனை எங்கோ சென்று கொஞ்சம் அரிசி பருப்பு கடன் வாங்க சென்றவள் அது கிடைக்காமல் வருத்ததோடு விட்டலன் ஆலயம் சென்று கண்களில் நீர் பெருக குமுறினாள்: "விட்டலா, இன்னும் எத்தனை நாள் எங்களை இப்படி வாட்டி வதைக்கப் போகிறாய்?" அங்கே அமர்ந்து பக்தர்களோடு பாடிக் களித்துகொண்டிருந்த நாமதேவைச் சபித்து வீட்டுக்கு கூட்டிக் கொண்டு வந்தாள். வீட்டு வாசலிலேயே உள்ளிருந்து கமகமென்று மணம் மிக்க உணவுப் பண்டங்களின் வாசனை. குழந்தையும் ராஜாயியும் நல்ல உடை அணிந்திருந்தனர். அவர்கள் மேல் நகை ஆபரணங்களும் மின்னிற்று. இதை கவனித்த நாமதேவர் "எதற்கு இந்த வழக்கமில்லாத பகட்டும் ஆடம்பரமும்'' என்று வருந்தினார் "ஏது இதெல்லாம்? என்று கேட்டபோது "எனக்கு ஒன்றுமே தெரியவில்லை" என்றாள் தாய். ராஜாய் பதிலே பேசவில்லை. அவள் அவரோடு பேசியே எத்தனையோ காலம் ஆச்சே!! . வீட்டில் உதவி செய்துகொண்டிருந்த ஜானி என்ற பணியாளன் விவரம் எல்லாம் சொன்னான் "விட்டலா, ஏன் என்னை மாற்றிவிட சோதனை செய்கிறாய்? . நீ கொண்டு வந்ததெல்லாம் உன் பக்தர்களுக்கல்லவோ போய் சேரவேண்டும் என்று அனைத்து பொருள்களையும் ஆலயத்துக்கு எடுத்து சென்று எல்லாருக்குமாக தானம் செய்தவர் நாமதேவர். இப்படி ஒருவரை நாம் பார்க்கமுடியுமா? முடியுமே, யார் யார் எல்லாம்? என்று வரும் கதைகளே சொல்லட்டும். இராம் க்ருஷ்ண ஹரி பாண்டுரங்க ஹரி 🚩🕉🪷🙏🏻 #💙ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா🙏🏻 #பண்டரிபுரம்--பாண்டுரங்கன். #ஆன்மீக கதைகள் #பக்தி கதைகள் #புராண கதைகள்
11 likes
13 shares
தெவிட்டாத விட்டலா - 7 பணமா பக்தியா? 🌼🌼🌼🌼🌼🌼 உத்தவா, என்னை வந்து பார் என்றான் நாராயணன். உத்தவன் திருப்பாற்கடல் சென்ற போது ''நீ பூ லோகத்தில் மானுடனாகப் பிறக்க வேண்டும்.'' ''உன் வார்த்தை தட்டுவேனா. ஆனால்...'' ''என்ன ஆனால் என்று இழுக்கிறாய். சொல்?'' "எல்லா மானிடர் போலவும் பிறக்க பிடிக்கவில்லை பிரபோ!'' சிரித்துக்கொண்டே நாராயணன் ஒரு கிளிஞ்சலில் உத்தவனை வானிலிருந்து பீமாவதி ஆற்றில் மிதக்க விட்டான். அவனும் ''விட்டல விட்டல'' என்று உச்சரித்துக்கொண்டே மிதந்தான். சிறந்த பாண்டுரங்க பக்தனானான். ஒரு துணி தைப்பவர் அன்றாடம் சந்திரபாகா நதியில் ஸ்நானம் செய்து விட்டல தரிசனம் செய்பவரால் எடுத்து வளர்க்கபட்டான். நாம தேவர் என்று பெயரும் பெற்றவிஷயம் ஏற்கனவே தெரிந்ததுதான். விட்டலன் நிழலாகவே வளர்ந்தான் நாம்தேவ். விட்டலனும் ஒருநாளும் நாமதேவர் இன்றி இருக்க முடியாது என்ற அளவுக்கு அவன் மனதில் நிறைந்தார். நாமதேவர் வீட்டில் அவருக்கு புண்யாஹவசனம் நாள் அன்று விட்டலனே நேரில் வந்து ஒரு சொக்காயும் குல்லாவும் கொடுத்தான். நாமதேவ் வளர்ந்தார். அவர் சதா சர்வ காலமும் விட்டலன் நினைவில் காலம் கடத்துவது அவரது பெற்றோருக்கு வருத்தத்தை அளித்தது. பிழைப்புக்கு வழி தேடவேண்டாமா. வேலை செய்ய வேண்டாமா? வறுமையிலிருந்து மீள என்ன வழி? நாமதேவரிடம் எவ்வளவோ சொல்லி மன்றாடினார்கள் பெற்றோர்கள். ஒருநாள் அவர்கள் சொல்வது பொருக்க முடியாமல் நேரே பண்டரிநாதன் முன் போய் நின்றார். ''விட்டலா என்னை ஏன் இந்த சம்சார சாகரத்தில் தள்ளி வேடிக்கை பார்க்கிறாய்? ''ஏன் உனக்கு என்ன கஷ்டம்?'' ''எல்லாம் என் அம்மா தான். சதா சர்வ காலமும் வேலைக்கு போ சம்பாதி, பணம் கொண்டுவா! எனக்கோ உன்னை நினைப்பதிலும் பாடுவதிலும் தான் மனம் விழைகிறது. இருதலைக்கொள்ளி என்பது நான் தானோ?" ''நாமா, நீ எப்போது என்னோடு தான் இருக்கவேண்டும். நாம் இருவரும் வேறு வேறு அல்ல. கடலில் கலந்த உப்பும் கரையில் காய்ந்த உப்புக்கட்டியும் ஒன்றா வேறா? உருவத்தால் வேறு பட்டிருக்கிறோம் அவ்வளவே?!" "விட்டலா, எனக்கு நீ வேண்டும். நீயே என் எண்ணம், செயல் எல்லாம். வேறு ஒன்றுக்கும் என்னிடம் இடம் இல்லை. நீ என்னோடு வந்து இரு. உன் பக்தனாக இருக்கும் இந்த இன்பம் ஒன்றே போதுமே?! விட்டலன் சிரித்தான். அருகே ருக்மணியிடம் சொன்னான்: ''ருக்மணி, பார்த்தாயா நாமாவை. உருவத்தோடு அவரிடம் நான் கண்களால் பார்க்கும்படி இருக்க வேண்டுமாம்." விட்டலன் நாமதேவை அணைத்தான். "நாமா உன் வீட்டு நடப்பைப் பற்றி வெட்கப்படாமல் சொல் கேட்கிறேன்" "விட்டலா, உன் அருளால் எனக்கு ஒரு குறையும் வீட்டில் தோன்றவில்லை. வீடு என்று பார்த்தால் நாங்கள் இருப்பது ஒரு தொத்தல் குடிசை. உன் வைகுண்ட மாளிகையில் அஷ்டமா சித்திகளும் நிறைந்திருக்கலாம். என் வீட்டில் எலிகள் அதைக்காட்டிலும் அதிகம். நீ பீதாம்பரம் அணிபவன். நாங்கள் கந்தல் கிழிசல் ஆடை ஒன்றே ஒன்றுடன் காலம் தள்ளுபவர்கள். நீ பாற்கடலில் சேஷ நாக பாம்பணை மேல் மெத்து மெத்து படுக்கை கொண்டவன். ஒரு வைக்கோல் வைத்து தைத்த கோணிப்பாய் கூட இல்லாதவர்கள் நாங்கள். நீ தங்க வட்டிலில் உண்பவன். நான் சாப்பாடே இல்லாததால் இலையும் இல்லாதவர்கள். உன்னிடம் நவ நிதியும் இருக்கலாம். எனக்கோ என் மனம் பூரா நீ நிரம்பியவன். அவ்வளவே என் வீட்டு விஷயம்." இவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்போது நாமா வீட்டில் அவர் மனைவி ராஜாயையும் நாமாவின் தாய் கோனையும் சம்பாஷித்துக்கொண்டிருப்பது காதில் விழுகிறதா? "அம்மா... ஒரு முத்தைப் பெற்று என்னிடம் கொடுத்தீர்கள். தெய்வ ஸ்வரூபம். சதா அந்த விட்டலனையே நினைப்பே தவிர வீடு வாசல், குடும்பம், குழந்தை என்ற எண்ணமே இல்லையே. எனக்கு உடுத்த இந்த கிழிசலைத் தவிர வேறு துணிகூட இல்லையே . உன்ன ஒரு மணி அரிசி வீட்டில் இல்லையே. எல்லோரும் பட்டினியைத் தவிர வேறு ஒன்றும் அறியோமே. என்னை இப்படி ஏன் சோதிக்க வேண்டும்? இனி இதிலிருந்து மரணம் ஒன்று தான் மீட்கும் என்று நினைக்க தோன்றுகிறது." நாமாவின் தாய் தலை ஆட்டி ஒப்புதல் தெரிவித்தாள். ஒன்றும் பேசவில்லை. விடுவிடுவென்று வெளியே சென்றாள். தெரிந்தவர்களிடம் எல்லாம் அரிசி பருப்பு சர்க்கரை எண்ணெய் யாசகம், கடனாகக் கேட்டும் ஒன்றும் தேறவில்லை. ''எல்லாம் என் மகன் நாமா இப்படி பொறுப்பு இல்லாமல் எப்போதும் 'விட்டலா விட்டலா' என்று அவனே கதியாக கிடப்பதால் தானே இன்று அந்த விட்டலனை நானே இதென்ன ஞாயம் என்று கேட்கிறேன்'' என முடிவோடு, நேரே விட்டலன் ஆலயம் சென்றாள். விட்டலனும் நாமாவும் பேசிக்கொண்டிருந்த நேரம் அது. தன் முன்னே வந்து நின்ற கோனையைப் பார்த்ததும் விட்டலன் சிரித்துக்கொண்டே நாமாவைத் தனக்கு பின்னே நிற்க வைத்துக்கொண்டான். அவள் கண்ணுக்குத் தோன்றினான். ''இதோ பார் விட்டலா! என் மகன் நாமா நீயே எல்லாம் என்று பைத்தியமாக அலைந்து கொண்டிருக்கிறான். வீட்டுக்கு அவனால் ஒரு பிரயோசனமும் இல்லை. வீட்டிலோ வேறு யாரும் இல்லை. நாங்கள் எப்படி வாழ்வது? நீயே வழி சொல்! நீ ஏன்அவனை இப்படி உன் மந்திரப்பிடியில் உலக வாழ்க்கை சிந்தனையே இல்லாமல் வைத்துக்கொண்டிருக்கிறாய்? எங்களை துன்ப நிலையில் நிறுத்தி உன்னிடம் அவன் இன்பம் தேடுவது ஞாயமா? பிள்ளை, கணவன், தந்தை என்ற பொறுப்பு கொஞ்சமாவது அவனிடம் வைக்கக் கூடாதா? என் குடும்பம் வறுமையில் அழிவது தான் உன் விருப்பமா? நீ தானே குசேலன் வறுமையை துடைத்தவன். அவனைப்போல் நாமாவும் உன் நண்பன் இல்லையா? குசேலனுக்கு வேறு நாமாவுக்கு வேறு நியாயமா? இடுப்பில் துணி இல்லாத நிலை வரக்கூடாது என்று தானே திரௌபதிக்கு உதவினாய்? எங்கள் வீட்டில் ரெண்டு திரௌபதிகள் துணி இல்லாமல் நிற்கிறோமே உன் கண்ணில் படவில்லையா?" விட்டலன் அமைதியா புன்முருவலித்தான். "என் மேல் எதற்கு கோபப்படுகிறாய்? உன் பிள்ளை உங்கள் நினைவே இன்றி என் மேல் பாசம் கொண்டதற்கு நான் பொறுப்பா? உனக்கு உதவ வில்லை என்பதற்காக என்னிடம் நட்பு நேசம் எல்லாம் தவறு! நாமாவை என்னிடம் இருந்து பிரிக்கவேண்டும் என்கிறாயா? உன் மகனை கூட்டிப்போ, நானா தடுத்தேன்? கனி முற்றி கிளையிலிருந்து விடுபட்டால் அது இயற்கை. என் மீது உண்மை பக்தி கொண்டதால் நான் நாமாவின் கண்ணுக்கு தெரிகிறேன். பேசுகிறேன். அதனாலேயே நாமாவின் பக்தியால் உன்னிடமும் பேசுகிறேன். நாமாவைப் பெற்றதற்கு நீ கொடுத்து வைத்தவள். கையில் அமிர்தத்தை வைத்துக்கொண்டு அடுத்த வேளை சோற்றுக்கு ஏனோ அலைகிறாய்?" "என்னவோ விட்டலா, உன் பேச்சு திருப்தியாக இல்லை. சிறுவயது முதல் நாமாவை எடுத்து வளர்த்து ஆளாக்கி என்று நிர்கதியாக ஒரு உதவியுமின்றி நிற்கிறோம். உனக்கே இது சம்மதம் என்கிறாயோ?" "நீ செய்த புண்ணியத்தின் பலனாக நாம்தேவ் உன் மகன் என்பதைப் புரிந்துகொள். நீ தான் சகல ஐஸ்வர்யமும் படைத்தவள். அதிர்ஷ்டசாலி. பக்குவப்படு!" கோனை பெருமூச்சு விட்டாள். அருகிலே இருந்த ருக்மணி சத்யபாமாவிடம் முறையிட்டாள் . ''நீங்களாவது நான் சொல்வதை புரிந்துகொள்வீர்களா? நாமா எனது ஒரே மகன். நாங்கள் பரம ஏழைகள், திக்கற்றவர்கள். உண்ண உணவில்லை. படுக்க பாயில்லை. கட்ட துணியில்லை. விட்டலன் என் மகனோடு நேசமாக இருக்கிறானே. என் நாமாவை என்னிடமிருந்து தனக்கு எடுத்துக்கொண்டானே. குடும்ப தெய்வமாக இருப்பவன் எங்களை கஷ்டத்திலிருந்து விடுபட வைக்க வேண்டாமா? விட்டலனோடு என் வீடு வந்து நிலைமையைப் பார்த்து நியாயம் புரியவேண்டும்.'' அவள் பார்வை இப்போது பேசாமல் நின்றிருந்த நாமாவின் மேல் பாய்ந்தது. ''எதற்கு இங்கே நிற்கிறாய்? வா என்னோடு வீட்டுக்கு! விட்டலன் இடுப்பில் கையைக்கட்டிக்கொண்டு செங்கல் மீது நின்று கொண்டிருக்கட்டும். நீ கிளம்பு. உன்னை இங்கு இனி விட்டு விட்டு நான் வீடு திரும்ப மாட்டேன்." ருக்மணி பதில் சொன்னாள்: "கோனை, உன் மகன் நாமாவோடு வீடு திரும்பு. எங்களை குறை சொல்லாதே. கோனை புரிந்து கொள். நாமா பந்த பாசம் எல்லாம் விட்டு, என்னை அணுகியது தவறா என்று நீயே உணர்வாய் என்றான் விட்டலன். அவனைக் கையைப் பிடித்து கூட்டிக்கொண்டு போ!" கோனை அவ்வாறே செய்தாள். நாமா ஒன்றும் பேசவில்லை. அவரது கண்களில் நீர் வழிந்தது ஒன்றே பதில். அவர்கள் வீடு திரும்பி உள்ளே நுழையும்போது கம கம வென்று நாமாவின் மனைவியின் சமையல் தயாராகிக் கொண்டிருந்தது. சற்று நேரம் முன்பு தானே ஒரு பணக்கார் சேட்டு, யாரோ நாமாவின் நண்பராம், வந்து நிறைய பொற்காசு, துணி மணி, மூட்டை மூட்டையாக சாமான்கள் எல்லாம் கொடுத்துவிட்டு சென்றிருந்தார். இராம் க்ருஷ்ண ஹரி பாண்டுரங்க ஹரி 🚩🕉🪷🙏🏻 #💙ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா🙏🏻 #பண்டரிபுரம்--பாண்டுரங்கன். #ஆன்மீக கதைகள் #பக்தி கதைகள் #புராண கதைகள்
12 likes
11 shares