அம்பாளின் மந்திரங்கள்.
85 Posts • 34K views
🎏🎏 ஸ்ரீ காமாக்ஷி மூகபஞ்சசதீ 🎏🎏 ♣️ ஆர்யா சதகம் - பகுதி 4 16. मधुरधनुषा महीधरजनुषा नन्दामि सुरभिबाणजुषा । चिद्वपुषा काञ्चिपुरे केलिजुषा बन्धुजीवकान्तिमुषा ॥16॥ மதுரதனுஷா மஹீதரஜனுஷா நந்தாமி ஸுரபி பணஜுஷா | சித்வபுஷா காஞ்சிபுரே கேளிஜுஷா பந்துஜீவ காந்திமுஷா || 16 || இனிமையோடு (கரும்பு வில்லாகையால்) கூடிய வில்லையுடையதும், பர்வதராஜன் வழியாக பிறப்புற்றதும், மணமுள்ள (புஷ்பபாண சாபா!) பாணங்களை உடையதும், காஞ்சீபுரியில் விளையாடிக் கொண்டிருப்பதும், குளிர்ச்சியூட்டும் செம்பரத்தம் (பரத்தம்பூ) பூவின் காந்தியை தோற்கடிக்கக்கூடியதும், சித்ஸ்வரூபத்தோடு கூடிய ஒரு பொருளினால் ஆனந்தமடைகிறேன். "இனியவில் லுற்ற, இமவான் விரும்பி இகத்துதித்த நனிமண வம்புடை நாரியால், சித்தாய நற்பொருளால், புனிதமாம் காஞ்சீ புரத்தினில் கேளி புரியுமொன்றால், பனிக்கும் பரத்தம் பகர்வென் றதாலே பரவசமே" 17. मधुरस्मितेन रमते मांसलकुचभारमन्दगमनेन । मध्येकाञ्चि मनो मे मनसिजसाम्राज्यगर्वबीजेन ॥17॥ மதுர ஸ்மிதேன ரமதே மாம்ஸல குசபார மந்த கமனேன | மத்யே காஞ்சி மனோ மே மனஸிஜ ஸாம்ராஜ்ய கர்வ பீஜேன || 17 || இனிய புன்சிரிப்போடு கூடியதும், பருத்த தனபாரத்தினால், மெதுவான நடையோடு கூடியதும், காஞ்சீ நகரின் மத்தியில், மன்மதனுடைய அரசாட்சி செய்வதினால், அவனுக்கு உண்டான அகந்தைக்கு, மூல வித்தாக இருக்கும் பரம்பொருளால் என்னுடைய மனமானது களித்துக்கொண்டிருக்கிறது. "இன்னகை ஏந்தி, இடைச்சுமை கூடும் எழில்தனத்தால் மென்னடை கொண்டது, மேவிடும் காஞ்சி மிசையினிலே! மன்மத னாட்சி மமதைக்கே காரண மாயதுவாம் உன்முகி யாமதால் உள்ளம் மகிழ்ந்து உவக்கிறதே" 18. धरणिमयीं तरणिमयीं पवनमयीं गगनदहनहोतृमयीम् । अम्बुमयीमिन्दुमयीमम्बामनुकम्पमादिमामीक्षे ॥18॥ தரணிமயீம் தரணிமயீம் பவனமயீம் ககன தஹன ஹோத்ருமயீம் | அம்புமயீம் இந்துமயீம் அம்பாம் அனுகம்பம் ஆதமாம் ஈஷே || 18 || உலகம், சூரியன், வாயு, வானம், தீ, நீர் (சலம்), கர்தன் (வேள்வி செய்பவன்), சந்திரன் இவர்கள் வடிவிலெலாம், சகலமாயும் இருக்கிற, இவ்வண்டத்திற்கெல்லாம் முதலாய் உலவுகின்ற அன்னையை ஓடுகின்ற கம்பை நதிக்கரையில் உணர்ந்து கண்டேனே. "உலகின் உருவில், உதிக்கும் உதயன் உருவிலுமாய் வலமிடு வாயு வடிவினில் வான வடிவிலுமாய் சலம்தீ கருத்தனாய் சந்திர னோடு செகமுதலாய் உலவுமம் மையை உரவுகம் பைத்தீரம் ஓர்ந்தனனே" 19. लीनस्थिति मुनिहृदये ध्यानस्तिमितं तपस्यदुपकम्पम् । पीनस्तनभरमीडे मीनध्वजतन्त्रपरमतात्पर्यम् ॥19॥ லீன ஸ்திதி முனிஹ்ருதயே த்யான ஸ்திமிதம் தபஸ்யத் உபகம்யம் | பீனஸ்தனபரம் ஈடே மீனத்வஜ தந்த்ர பரம் தாத்பர்யம் || 19 || முனீச்வரர்களின் இதயத்தில் இலயமுற்றதும், கம்பை நதிக்கரையில் தியானத்தில் அசைவற்று தவம் செய்வதுவும், பருத்த தனபாரங்களை உடையதுமான, மன்மதச் சாத்திரத்தின் சாரமாயும், இரசமாயும் இருப்பதை துதிக்கிறேன். "முனிகள் இதயத்தில் முற்றும் இலயத்தில் மோதமுறும் தனியே தியானத் தவத்தில்கம் பைக்கரை தானமரும் நனிமார் பகங்களும் நற்சார மாய்மாரன் நற்றிறமும் இனிதே இணைந்த இருப்பை துதிப்பேன் இசைவுடனே" 20. श्वेता मन्थरहसिते शाता मध्ये च वाड्भनो‌உतीता । शीता लोचनपाते स्फीता कुचसीम्नि शाश्वती माता ॥20॥ ச்வேதா மந்த்ர ஹஸிதே சாதா மத்யே ச வாங்மனோதீதா | சீதா லோசனபாதே ஸ்பீதா குசஸீம்னி சாச்வதீ மாதா || 20 || அழிவில்லாத, சாஸ்வதனமான என் தாயாம் காமாக்ஷியானவள், தன் மென்சிரிப்பில் வெண்ணிறமுள்ளவள்; இடை சிறுத்தவள்; வாக்கிற்கும், எண்ணத்துக்கும் உட்படாதவள்; பார்வையில் குளிர்ந்தவள்; புஷ்டி மிகுந்த மார்பினள். "இளநகை வெண்மை, இளைத்த சிறிய இடையுடைத்தாள் அளப்பிலா வாக்கினள்; அன்னை நினைப்புக்கும் அவ்வருகாம்; குளிர்ந்தயின் பார்வையாள்; குன்றெனப் பூத்த குசத்தவளாம்; உளத்தினில் தாயவள் உத்தமி நித்தியள் ஊன்றினளே" தொடரும்... ஓம் ஸ்ரீ களின்கார்யை நமஹ! 🚩🕉🪷🙏🏻 #🔱காமாட்சி அம்மன்🙏 #ஸ்ரீ காமாட்சி பரமேஸ்வரி அம்மன் ஆலயம் சிங்கம்புணரி🙏 #🔯 மகத்தான மந்திரங்கள்📿 #அம்பாளின் மந்திரங்கள். #சுலோகம் மற்றும் மந்திரங்கள்
16 likes
40 shares
🎏🎏 ஸ்ரீ காமாக்ஷி மூகபஞ்சசதீ 🎏🎏 ♣️ ஆர்யா சதகம் - பகுதி 8 36. अङ्कुरितस्तनकोरकमङ्कालङ्कारमेकचूतपतेः । आलोकेमहि कोमलमागमसंलापसारयाथार्थ्यम् ॥36॥ அங்குரித ஸ்தனகோரகம் அங்காலங்காரம் ஏக சூதபதே: | ஆலோகேமஹி கோமளம் ஆகம ஸம்லாப ஸார யாதார்த்யாம் || 36 || மொட்டுக்களை போன்ற தனங்களை உடையதும், மிருதுவான (மென்மையான) இயல்பினதும், வேதவாக்குகளின் சாரமான உண்மையாக இருப்பதும், ஏகாம்ரநாதருடைய மடியில் அலங்காரமாகயிருப்பதுமான, ஒன்றைக் காண்கிறோம். "மலர்மொட் டினைபோலும் மார்புடை மஞ்சுள மாயதுவாம் நலமாம் மறைவாக்கின் நற்பொருட் சாரமும் ஞானமுமாம் தலமாய் ஒருமா தரும்தரு கீழமர் தம்பிரானைக் கலந்தே மடியமர் கண்கவர் ஒப்பத்தைக் காண்கிறோமே" 37. पुञ्जितकरुणमुदञ्चितशिञ्जितमणिकाञ्चि किमपि काञ्चिपुरे । मञ्जरितमृदुलहासं पिञ्जरतनुरुचि पिनाकिमूलधनम् ॥37॥ புஞ்சித கருணம் உதஞ்சித சிஞ்சித மணி காஞ்சி கிமபி காஞ்சிபுரே | மஞ்ஜரித ம்ருதுள ஹாஸம் பிஞ்சர தனுருசி பினாகி மூலதனம் || 37 || கருணை நிரம்பியதும், ரத்தின மயமான ஒட்டியாணத்தின் சலங்கையொலி நிரம்பியதும் பூத்துப் பூத்துவரும் மென்சிரிப்பு நிறைந்ததும், பொன்னே போன்ற மேனியொளி உடையதும் பிநாகபாணியின் (சிவனுடைய வில் - பிநாகம்) மூலதனமுமாகவும் இருக்கின்றவொன்று காஞ்சீபுரத்தில் விளங்குகிறது. "இரக்கம் உடைத்தாம் இரத்தினக் காஞ்சி இசையுடைத்தாம் புரந்திடப் பூத்திடும் புன்னகை மிக்கதாம் பொன்னொளியாய் விரவிய மேனியாம் வேதன் பிநாகி விழையுமொரு திரவிய மாயது திண்ணமாய் காஞ்சீ திகழுமதே" 38. लोलहृदयो‌உस्ति शम्भोर्लोचनयुगलेन लेह्यमानायाम् । ललितपरमशिवायां लावण्यामृततरङ्गमालायाम् ॥38॥ லோல ஹ்ருதயோVஸ்மி சம்போ: லோசந யுகளேன லேஹ்யமானாயாம் | லாலித பரமசிவாயாம் லாவண்யாம்ருத தரங்க மாலாயாம் || 38 || பரமசிவனின் இருகண்களாளும் ஆசையுடன் பருகப்படுவதும், பரமசிவனை மோகம் கொள்ளச் செய்வதும், அழகாம் அமுதக் கடலின் அலைகளின் கூட்டம் போலிருப்பதுமான ஒன்றில் ஈடுபடும் மனத்துடையேனாக இருக்கிறேன். "சிவனார் விழிகளால் தேடிப் பருகித் திளைப்பதனில் சிவனார் தமைதன்மேல் தீரா திருத்திடச் செய்வதனில் அவமில் அழகாம் அமுதக் கடலின் அலைகளது நிவகம் தனையேபோல் நிற்பதில் நெஞ்சம் நிலைபெறுதே" 39. मधुकरसहचरचिकुरैर्मदनागमसमयदीक्षितकटाक्षैः । मण्डितकम्पातीरैर्मङ्गलकन्दैर्ममास्तु सारूप्यम् ॥39॥ மதுகர ஸஹசர சிகுரை: மதநாகம ஸமயதீக்ஷித கடாக்ஷை: | மண்டித கம்பா தீரைர் மங்கள கந்தைர் மமாஸ்து ஸாரூப்யம் || 39 || தேனைத்தரும் வண்டுகளைப்போல் கரிய நிறத்து கூந்தலுடையதும், காம சாத்திரத்தைக் கருதும் கடைக்கண் பார்வை கொண்டதும், கம்பாநதிக் கரையை அழகுசெய்வதும், மங்களத்தின் கிழங்குமாய் (கிழங்குவொன்றே விதையாகவும் விதைப் பயனாகவும் இருப்பது) இருப்பதுமான ஒன்றோடு ஒன்றிய உருவம் எனக்கு உண்டாகட்டும். "வண்டின வண்ணம் வளர்ந்த அளகத்தை வைத்ததுவாம் கண்ணின் கடையிலே காமத்து வேதம் கருதுவதாம் புண்ணியக் கம்பையைப் போற்றும் கரையைப் புனைவதுவாம் ஒண்பொருள் மங்கலம் ஒன்றொடு என்னுரு ஒன்றுகவே" 40. वदनारविन्दवक्षोवामाङ्कतटीवशंवदीभूता | पूरुषत्रितये त्रेधा पुरन्ध्रिरूपा त्वमेव कामाक्षि ‖40‖ வதநாரவிந்த வக்ஷோவாமாங்க தடீ வஶம்வதீ பூதா | புருஷ த்ரிதயே த்ரேதா புரந்த்ரீ ரூபா த்வமேவ காமாக்ஷி || 40 || காமாக்ஷி தேவியே! மும்மூர்த்திகளான ப்ரம்ஹா, விஷ்ணு, சிவன் ஆகியவர்களின் முக கமலத்திலும், மார்பிலும், இடது மடியிலுமாக, மூன்று உருவங்களிலும், பத்தினியாக நீயே உள்ளாய். அதாவது ஸரஸ்வதி, லக்ஷ்மீ, பார்வதி என்ற மூன்று தோற்றங்களிலும் இருப்பவள் காமாக்ஷியே என்கிறார் மூககவி. "அன்னையே காமாட்சி அண்டமுதல் மூவராய் ஆனாராம், பன்மன் முகத்தில், பரந்தாமன் நெஞ்சினில், பார்வதீசன் தன்மடி மீதினில், தாரமாய் வீற்றிடும் தாயவளே உன்னுவ தெல்லாம் உனதருள் தோற்றமாம் உண்மையதே" தொடரும்... ஓம் ஸ்ரீ களின்கார்யை நமஹ!🙏 🚩🕉🪷🙏🏻 #🔱காமாட்சி அம்மன்🙏 #ஸ்ரீ காமாட்சி பரமேஸ்வரி அம்மன் ஆலயம் சிங்கம்புணரி🙏 #🙏அம்மன் துணை🔱 #அம்பாளின் மந்திரங்கள். #சுலோகம் மற்றும் மந்திரங்கள்
19 likes
35 shares
*இன்று*(24-9-25) *நவராத்திரி* *மூன்றாம் நாள்*: *பூஜையின் சிறப்பம்சம்*! சக்தியை நோக்கி அனுஷ்டிக்கும் விரதங்களில் மிகவும் முக்கியமானது நவராத்திரி விரதம். தனம், தானியம், நிலையான இன்பம், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், ஸ்வர்க்கம், மோட்சம் என ஒரு மனிதனுக்கு வேண்டிய அனைத்தையும் தரக்கூடிய விரதம் நவராத்திரி விரதம். நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நைவேத்தியம், அம்பாளுக்கு சாற்ற ஒவ்வொரு விதமான மலர், ஒன்பது நாளும் வாசிப்பதற்கு ஒன்பது வகையான வாத்தியங்கள், அம்பாளைப் பூஜிக்க ஒன்பது வகையான மந்திரங்கள் என்று ஏராளமாக இருக்கிறது. நவராத்திரி விழாவில் ஒவ்வொரு தினத்தில் செய்ய வேண்டிய பூஜை மற்றும் பிரசாதங்களின் விபரம்: அந்தவகையில் நவராத்திரியின் மூன்றாம் நாளான இன்று(5-10-24) என்ன செய்ய வேண்டும்? என்பதை பார்க்கலாம்!! நவராத்திரியின் மூன்றாம் நாளான இன்று அம்பிகையை நான்குவயது பெண்ணாகப் பாவித்து வழிபட வேண்டும். இன்று முத்துபோல் விளங்கும் ஜவ்வரிசியினால் மலர்க் கோலம் போட வேண்டும். மூன்றாவது நாளுக்கு உரியதேவி – இந்திராணி. குமாரியின் பெயர் – கல்யாணி. மந்திரம் ஓம் கல்யாண்யை நம: சுவாசினியின் பெயர் – சந்த்ர காண்டா. மந்திரம் ஓம் சந்த்ர கண்டாயை நம:. நைவேத்தியம் – சர்க்கரைப் பொங்கல். வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் – வித்யை, ராஜ்யம், பதவிகள் கிடைக்கும் நவராத்திரி மூன்றாம் நாள் – தீய குணங்களை நீக்கும் ‘சந்திரகாண்டா’ வழிபாடு!! மூன்றாவது தினமான இன்று நமது தீய எண்ணங்களை அடியோடு ஒழிக்க சந்திர கண்டா அம்பாளை வழிபட வேண்டும். சந்திரக்கண்டா துர்க்கையை வழிபடும் முறையை பற்றி இந்த பதிவில் காணலாம். அசுரர்களை அழிக்க தோன்றியவர்கள் நவதுர்க்கைகள் இந்த நவதுர்க்கைகள் சிவபெருமானின் தாண்டவங்களில் இருந்து பிறந்தவர்கள். ஒவ்வொரு நாளும் தாண்டவத்தில் இருந்து ஒவ்வொரு துர்கைகள் அவதரித்தார்கள். இவ்வாறு மூன்றாவது நாள் ஆடிய நடனத்தில் இருந்து பிறந்தவளே சந்திரகாண்டா. நீதியை நிலைநாட்டி சந்திர பிறையை அணிந்து கொண்டவள் சந்திரகாண்டா. சந்திர என்றால் நிலவு, காண்டா என்றால் மணி என்று பொருள். சந்திர பிறையானது இவளது நெற்றியில் மணி போன்று இருப்பதால், சந்திரகாண்டா என்று அழைக்கப்படுகிறாள். சிங்க வாகனத்தில், 3 கண் மற்றும் 10 கரங்களுடன் காட்சி தருகிறாள். சந்திரகாண்டாவின் 2 கரங்கள் பக்தர்களுக்கு அருள் செய்யும் விதமாக உள்ளன. போருக்கு தயாரான கோலத்தில் காட்சி தருவதால், தனது பார்வையின் மூலமாக பக்தர்களின் துன்பங்களை நீக்கி அவர்களுக்கு இன்பத்தை அளிக்கிறாள். கடும் கோபமும், ஆக்ரோஷமும் கொண்டிருக்கும் சந்திரகாண்டா தேவியை வழிபட சிங்கத்தைப் போன்ற வீரம் கிடைக்கும், பாவம் அழியும், அனைத்து சௌகரியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். சந்திரகாண்டா மந்திரம்: ப்ரிடிஞ்சபர வரூதா சந்திரகோபஸ்த கரியுதா பிரசாதம் தந்துனே மகாயும் சந்திரகண்டெதி விஸ்ருதா இந்த மந்திரத்தை சொல்லி சந்திரகாண்டா தேவியை வழிபட அனைத்து நன்மைகளும் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் சந்திரகாண்டா கோயில் உள்ளது. இந்த சந்திரக்கண்டாவை வழிபடுவதற்கு முக்கிய காரணம் மனதில் உள்ள தீய எண்ணங்களை அழித்து மனதில் அமைதியை நிலைநாட்டுவதே. மேலும் நவராத்திரி தொடங்கி முதல் இரண்டு நாட்கள் பூஜையை தவற விட்டவர்கள் இந்த மூன்றாம் நாளில் கொலு வைத்து பூஜையை ஆரம்பிக்கலாம். தேவி ஸ்ரீ சந்திரக்கண்டாவிற்குரிய மந்திர ஒலி வடிவ காணொளிக்காட்சி கீழே!👇👇🚩🕉🪷🙏🏻 #🙏அம்மன் துணை🔱 #✨ இனிய நவராத்திரி நல்வாழ்த்துக்கள் 🎉🪔 #🎵 நவராத்திரி பஜனை ✨ #📿நவராத்திரி பூஜை முறை🪔 #அம்பாளின் மந்திரங்கள்.
14 likes
9 shares
*தே³வீ நாராயணீயம் - த³ஶகம் 11* *ப்³ரஹ்மநாரத³ ஸம்வாத³ம் - ஸ்லோகம் 11* ந மே குருஸ்த்வச்,சரிதஸ்ய வக்தா; ந மே மதிஸ்த்வத்ஸ் மரணை க ஸக்தா; அ வா ச்யவக்தா, ஹ ம கார்ய கர்தா; நமாமி மாதச்,சரணா ம்புஜம் தே *நாரதருக்கு இதைத் தெரிந்து கொள்ள குருவாக ப்ரம்மா இருந்தார். வ்யாஸருக்கு நாரதர் குருவாகக் கிடைத்தார். ஆனால் எனக்கு குருவும் இல்லை. என்னால் தேவியைத் த்யானம் செய்யவும் முடியவில்லை. மனதை அதில் ஈடுபடுத்த முடியவில்லை. நான் மிகவும் கஷ்டப்படுகிறேன். நல்லதைச் செய்யா விட்டாலும் தீயவைகளையாவது செய்யாமல் இருக்க வேண்டும். அதுவும் முடியவில்லை. செய்யக்கூடாததைச் செய்கிறேன். பேசக் கூடாததைப் பேசுகிறேன். இவைகளிலிருந்து என்னைக் காப்பாற்ற உன் கருணை வேண்டும் என்று இந்த கவி தேவியை நமஸ்கரிக்கிறார்.* பதினொன்றாம் தசகம் முடிந்தது 🚩🕉🪷🙏🏻 #🙏அம்மன் துணை🔱 #அம்பாளின் மந்திரங்கள். #சுலோகம் மற்றும் மந்திரங்கள் #🔯 மகத்தான மந்திரங்கள்📿 #மந்திரங்கள்
13 likes
10 shares