வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔
33 Posts • 627K views
சேலம் ராமகிருஷ்ணா சாலை பகுதியில் வசித்து வந்தவர் பாரதி.. இவரது அப்பாவின் பெயர் டெல்லி ஆறுமுகம். அதிமுக முக்கிய பிரமுகர் ஆவார்.. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேரடி பழக்கம் உள்ளவர்... ஆனால், சில வருடங்களுக்கு முன்பு டெல்லி ஆறுமுகம் இறந்துவிட்டார். 38 வயது பாரதி ஆனால், மகள் பாரதியை பிடெக் இன்ஜினியரிங் படிக்க வைத்துள்ளார்.. 38 வயதான பாரதி இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.. சேலம் சங்கர் நகரில் டியூஷன் சென்டர் ஒன்றில் வேலை பார்த்து வந்தார், அங்கேயே தங்கியும் வந்தார்.. இதற்கு முன்பு பெங்களூரில் வேரை பார்த்து வந்தாராம் பாரதி.. அப்போது சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது போன்ற பழக்கம் ஏற்பட்டுள்ளது.. அது இப்போது சேலம் டியூஷன் சென்டர்வரை தொடர்ந்து வருகிறது.. சொந்தபந்தமும் யாரும் தட்டிக்கேட்காத முடியாத சூழலில், பாரதி சுதந்திர பறவையாகவே வாழ்ந்து வந்துள்ளார். சிஇஓ உதய சரண் இந்நிலையில்தான், பல்வேறு தொழில்களுக்கான நிகழ்ச்சி சேலத்தில் பிரபல ஓட்டல் ஒன்றில் நடந்தபோதுதான், உதயசரண் என்ற 49 வயது நபர் அறிமுகமானார்.. சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் CEO-வாக பணியாற்றி வருகிறார் உதயசரண்.. இவரும் சேலம் நாழிக்கல்பட்டியை சேர்ந்தவர்தான்.. நாளடைவில் பாரதியுடன் தகாத முறையில் பழக ஆரம்பித்தார்.. உதயசரணுக்கு ஏற்கனவே கல்யாணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர்.. ஆனால், பாரதியிடம் தனக்கு திருமணமாகி குழந்தைகள் இருப்பதையே உதயசரண் மறைத்துவிட்டாராம். 10 பவுன் பிரேஸ்லெட் இதனால் உதயசரணை உயிருக்கு உயிராக காதலித்ததுடன், அவரையே திருமணம் செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு பாரதியும் வந்து நெருங்கி பழகி உள்ளார்.. உதயசரண் மீது பாரதிக்கு கூடுதல் பிரியம் இருந்து வந்துள்ளது.. 10 சவரனில் பிரேஸ்லெட் வாங்கி காதலனுக்கு கிஃப்ட் தந்துள்ளார்.. ஆனால் ஆசை ஆசையாக பாரதி போட்ட பிரெஸ்லெட்டை, உதயசரண் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு விற்று செலவு செய்துவிட்டாராம்,. அப்போது முதல் கள்ளக்காதலர்கள் இடையே தகராறு வெடிக்க துவங்கியது.. மேலும், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பாரதி நெருக்கடியும் தந்துவிட்டதால், இதனாலும் கள்ளக்காதலர்களுக்குள் மோதல் அதிகரித்தது. போதாக்குறைக்கு உதயசரணின் வீட்டிலும் இந்த கள்ளக்காதல் விவகாரம் தெரிந்து அவரது மனைவி கொந்தளித்துவிட்டார். மனைவி தகராறு விரைவில் கள்ளக்காதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக மனைவியை ஒருவழியாக சமாதானம் செய்துள்ளார் உதயசரண்.. இதற்கு பிறகுதான் தனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளதை பாரதியிடம் உதயசரண் சொன்னாராம். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பாரதி, மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டுள்ளார்.. இதற்கும் உதயசரண் மறுத்துள்ளார்.. இதனால் இவர்களுக்குள் சண்டை இன்னும் அதிகரிக்க துவங்கியது. ஒவ்வொருமுறை சண்டை வரும்போதும், பாரதியை உதயசரண் சமாதானப்படுத்தி வந்துள்ளார்.. 2 நாளைக்கு முன்பு இருவரும் நைட்ஷோ சினிமாவுக்கு சென்றுள்ளனர்.. அன்றைய இரவு பாரதி தங்கியிருக்கும் ரூமிலேயே உதயகிரணும் தங்கியிருக்கிறார்.. 2 சிகரெட் ஒன்றாக ஊதிய பாரதி பாரதி எப்போதும் 2 சிகரெட்டை ஒரே நேரத்தில் அடிப்பாராம்.. அப்படித்தான் அன்றைய தினமும் 2 சிகரெட்டுகளை ஊதி கொண்டிருந்தபோது, இந்த ஜோடிக்குள் திருமண பேச்சு எழுந்துள்ளது.. மீண்டும் தகராறு, சண்டை, வாக்குவாதம், கைகலப்பு வரை சென்றுள்ளது.. அப்போது ஆத்திரத்தில், பாரதியை கடுமையாக தாக்கிவிட்டாராம் உதயசரண்.. இதில் நிலை தடுமாறி பாரதி கீழே விழுந்தபோது, தலையணையால் அவரை அமுக்கியிருக்கிறார்.. அப்போது பாரதியின் பின்கழுத்து எலும்பு உடைந்துள்ளது.. மூச்சுத்திணறல் இதனால் அதிகாலையில், உதயசரண் தான் வேலை செய்யும் சீலநாயக்கன்பட்டி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்சை வரவழைத்து பாரதியை கொண்டு சென்றார்.. ஆனால், பாரதி ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் அறிவித்துவிட்டனர். இதற்கு பிறகு, பாரதியின் உறவினர்களுக்கு போன் செய்த பாரதி, மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக கூறியிருக்கிறார்கள்.. அவர்கள் விரைந்து வந்து பார்த்தபோது பாரதி பிணமாக கிடந்தார்.. மேலும் அவர் அணிந்திருந்த நகையும் காணாமல் போயிருந்தது.. எனவே பாரதியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் போராட்டம் செய்தனர்.. பிறகு அதிகாரிகள் விரைந்து வந்து, அவர்களை சமாதானம் செய்து, சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கினர்.. போஸ்ட் மார்ட்டம் அம்பலம் பாரதியின் உடலை போஸ்ட் மார்ட்டத்துக்கும் அனுப்பி வைத்தனர். அப்போதுதான், போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் பாரதி கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது... இதற்கு பிறகே உதயசரணை போலீசார் கைது செய்தனர். இதில் இன்னொரு ட்விஸ்ட் என்னவென்றால், டியூஷன் சென்டர் பகுதியிலுள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்த போது இன்னொரு நபரும் அங்கு வந்து சென்றிருப்பது தெரியவந்துள்ளது.. அந்த நபர் யார்? என்ற விசாரணையும் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.. அதிமுக பிரமுகரின் மகள் கொலை செய்யப்பட்டுள்ளதால், இந்த விவகாரம் சேலத்தை பரபரப்பை தந்து கொண்டிருக்கிறது. #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #📺டிசம்பர் 11 முக்கிய தகவல் 📢
5 likes
12 shares
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகில் உள்ளது உத்தமபாளையம்.. இங்குள்ள வட்டமலை அணைப் பகுதியில் கடந்த 6ம் தேதி ஒரு பெண் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வெள்ளகோவில் போலீசுக்கு விஷயம் சென்றது.. திருப்பூர் வடிவுக்கரசி விரைந்து வந்த காவல்துறையினர் இந்த கொடூரக் கொலை குறித்து உடனடியாக விசாரணையை தொடங்கினர்... மேலும் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்தனர்.. அப்போதுதான், கொலை செய்யப்பட்டவர் வடிவுக்கரசி என்ற 45 வயது பெண் என்பது தெரியவந்தது. திண்டுக்கல் மாவட்டம் பழனி, நெய்க்காரப்பட்டிப் பகுதியைச் சேர்ந்தவராம்.. இவரை சம்பவத்தன்று ஸ்கூட்டரில் அழைத்து வந்தது, அதே ஊரை சேர்ந்த முன்னாள் காவல்துறை அதிகாரியான 55 வயது சங்கர் என்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. சங்கருக்கு 4 மனைவிகள் சங்கர் தான் வடிவுக்கரசியை கொலை செய்துள்ளார் என்பது தெரிந்ததுமே, போலீசார் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.. இறுதியில், தாராபுரத்தை அடுத்த அலங்கியம் பகுதியில் மறைந்திருந்தபோது போலீசார் சங்கரை சுற்றி வளைத்து கைது செய்தனர்... விசாரணையையும் துவங்கினர். அப்போது சங்கர் போலீசாருக்கு அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை தந்துவிட்டதாம்,.. அதாவது சங்கருக்கு 4 மனைவிகள், 3 மகள்கள், 3 மகன்கள் இருக்கிறார்களாம்.. சங்கர் போலீசாக பணியாற்றி 1998-ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றவர்.. 4 மனைவிகளையும் தாண்டி, வடிவுக்கரசி என்ற பெண்ணுடன் சங்கருக்கு கள்ளக்காதல் இருந்துள்ளது. அரசு வேலைக்கு பணம் இவர்கள் 2 பேரும் சேர்ந்து, அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி, சிலரிடம் பணம் வாங்கியிருக்கிறார்கள்.. அந்த பணத்தை இருவருமே செலவு செய்துவிட்டார்கள்.. வேலை வாங்கித் தரமுடியாததால், பணம் கொடுத்தவர்கள் வடிவுக்கரசியை நெருக்க ஆரம்பித்தனர். இதனால் வடிவுக்கரசி, சங்கரிடம் பணத்தை திருப்பிக் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதுதான் கள்ளக் காதலர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டைக்கு காரணமாக இருந்து வந்துள்ளது.. வடிவுக்கரசியின் டார்ச்சர் நாளுக்கு நாள் அதிகமாகவும், அவரை எப்படி சமாளிப்பதென தெரியாமல் சங்கர் திணறி வந்துள்ளார். ஸ்கூட்டரில் வடிவுக்கரசி சம்பவத்தன்று வடிவுக்கரசிடம், என்னுடைய 4 மனைவிகளில் ஒருவரின் சொந்த ஊர் வெள்ளகோவில் அருகிலுள்ள தாசநாயக்கன்பட்டி.. இங்கு ஒருவர் எனக்கு பணம் தருவதாக சொல்லி உள்ளார்.. அந்த பணத்தை வாங்கி உனக்கு தருகிறேன் என்று சொல்லி வடிவுக்கரசியை ஸ்கூட்டரில் அழைத்து வந்துள்ளார்... வரும் வழியிலேயே வட்டமலை அணைப்பகுதியில் மது வாங்கி 2 பேரும் குடித்திருக்கிறார்கள்.. அப்போது மறுபடியும் இவர்களுக்குள் பணப்பிரச்சனை எழுந்துள்ளது.. ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த சங்கர், வடிவுக்கரசியின் பேச்சுக்களால் மேலும் ஆவேசமடைந்தார்.. உயிரோடு இருந்தால்தானே பணம் கேட்டுத் தொந்தரவு செய்வாய்? என்று முடிவு செய்து, கீழே கிடந்த கருங்கல்லை எடுத்து வடிவுக்கரசியின் தலையில் போட்டுள்ளார். இதில் துடிதுடித்து வடிவுக்கரசி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். 6 சவரன் தங்க நகை பிறகு, வடிவுக்கரசி அணிந்திருந்த 6 பவுன் நகையை எடுத்துக் கொண்டு, வடிவுக்கரசியை அடையாளம் தெரியாத அளவுக்கு முகத்தை சிதைத்து, தீ வைத்து கொளுத்திவிட்டாராம்.. இவ்வளவும் சங்கர் போலீசில் வாக்குமூலமாக கூறியிருக்கிறார்.. இதையடுத்து, சங்கரிடம் இருந்து 6 பவுன் நகையைப் பறிமுதல் செய்த போலீசார், அவரைக் காங்கயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்... 4 மனைவிகளுடன் சங்கர் வாழ்ந்து வரும் நிலையில், வடிவுக்கரசிக்கும் ஏற்கனவே கல்யாணமாகி கணவர், ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்களாம்...! #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #📺டிசம்பர் 11 முக்கிய தகவல் 📢
9 likes
15 shares
தனது காதல் மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்த நடிகர் ஜெயம் ரவி, குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனுதாக்கலும் செய்தார். அடுத்த சில நாட்களில் ஜெயம் ரவி என்ற தனது பெயரை ரவி மோகன் என்றும் மாற்றிக்கொண்டார். பாடகி கெனிஷா என்பவருடன் அவர் நெருக்கமாக பழகிய நிலையில் பொது இடங்களுக்கும் அவருடன் கைகோர்த்து வந்தார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் ரவிமோகன் ஸ்டுடியோ என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கிய நடிகர் ரவி மோகன் தயாரிப்பாளராகவும் மாறி இருக்கிறார். அந்த தயாரிப்பு நிறுவனத்தில் ஒரு பங்குதாரராக கெனிஷாவையும் இணைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தனது நெருங்கிய தோழி கெனிஷாவுக்காக தனது மனைவி, 2 பிள்ளைகளை விட்டு விலகிச் சென்ற நடிகர் ரவி மோகன், இப்போது தனது குடும்பத்தையே நிராகரிக்கும் ஒருநிலைக்கு வந்திருக்கிறார். சமீபத்தில் ரவிமோகனின் அப்பா எடிட்டர் மோகன் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சிங்கப்பூரில் இருந்த ரவி மோகனுக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, நீ மட்டும் அப்பாவை பார்க்க வா, கெனிஷாவுடன் வர வேண்டாம் என்று குடும்பத்தினர் கூறியிருக்கின்றனர். அதனால் தனது அப்பாவை நேரில் வந்து பார்க்காமல் நடிகர் ரவிமோகன் தவிர்த்து விட்டார். சமீபத்தில் ரவிமோகனின் தங்கை மகளுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. கெனிஷா இல்லாமல் தனியாக நீ மட்டும் வா என்று குடும்பத்தினர் அழைத்துள்ளனர். அந்த நிகழ்ச்சிக்கும் வராமல் ரவி மோகன் புறக்கணித்து விட்டார். இப்படி கெனிஷாவுக்காக மனைவி, பிள்ளைகள் மட்டுமின்றி இப்போது தனது பெற்றோர், சொந்த உறவுகளையும் அவர் நிராகரித்திருப்பது தமிழ் சினிமா வட்டாரத்தில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #📺டிசம்பர் 11 முக்கிய தகவல் 📢 #சினிமா🎬தகவல் #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔
6 likes
18 shares