Failed to fetch language order
aanmeegam
163 Posts • 913K views
BALAMURALI
3K views 2 days ago
ஒத்த நொடி பிரிய சொன்னா இறந்தே போய்டுவேன் #tamitatus #tamilsriragavendrar #tamilaanmegam #tamilgururagavendrar #tamilguru #tamilgodstaus #tamilgodreels #tamildevotionalvideos #gururagavendrar #guru #appa #ragavendra #amma #tamilmandralayam #god #lord #mandralayam #gururayar #ragavendra swamy mantralayam #ragavendra swamy #guru sri ragavendra #Devotional #Devotional #aanmeegam
71 likes
7 shares
saravanan.
1K views 16 days ago
#aanmeegam 🛕 *_புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடக்கூடாதா? ஏன்?_* _புரட்டாசி மாதமானது ஆன்மீகம் மற்றும் அறிவியல் கலந்த பாரம்பரியத்துடன் அழகாகக் கலந்திருப்பதால் தனித்துவமாகக் கருதப்படுகிறது._ * 🛕🛕🛕புரட்டாசி மாதத்திற்கும் அறிவியலுக்கும் என்ன‌ சம்பந்தம்? புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் மற்றும் நவராத்திரியை அனுசரிக்கும் மாதம் என்றும் நம் எல்லோருக்குமே தெரியும். மேலும் இந்த மாதம் ஒரு சிறந்த மாதமாகவும் கருதப்படுகிறது. ஏன் தெரியுமா? ஏனென்றால் இந்த மாதமானது ஆன்மீகம் மற்றும் அறிவியல் மற்றும் பாரம்பரியத்துடன் அழகாகக் கலந்திருப்பதால் தனித்துவமாகக் கருதப்படுகிறது. இந்த மாதம் பெருமாளை வழிபடுவோம் மேலும் துர்கையையும் சிறப்பாக நவராத்திரி என்கிற ஒன்பது நாட்களில் வணங்கி பூஜை செய்வோம். இவை மட்டுமல்லாமல் இந்த மாதமானது நமக்கு உடல் மற்றும் மன நலனைக் கவனித்துக்கொள்வதன் முக்கியத்துவத்தையும் கற்பிக்கிறது. புரட்டாசி மாதத்தில் முக்கியமாக கடைபிடிக்கும் இரண்டு நடைமுறைகள் என்னவென்று கேட்டால், ஒன்று கோவிலுக்கு சென்று பெருமாளையும் துர்கா தேவியையும் வழிபடுதல், வீட்டில் கொலு வைத்து அம்மனை வழிபடுதல், மற்றொன்று உண்ணாவிரதம் அல்லது மாதம் முழுவதும் சைவ உணவை பின்பற்றுதல் இந்த இரண்டு நடைமுறைகளையும் பல நூற்றாண்டுகளாகவே மக்கள் கடைப்பிடித்து வருகின்றனர். புரட்டாசி மாதம் குறிப்பாக விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டதால் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. 5000 ஆண்டுகளுக்கு முன்பு, உலகை அசுரர்களிடமிருந்து காப்பாற்ற பகவான் விஷ்ணு ஒரு காட்டுப்பன்றி (கூர்ம அவதாரம்) வடிவில் பூமிக்கு அவதரித்தார் என்று மக்கள் நம்புகிறார்கள். கலியுகத்தின் முடிவில் இருந்து கிரகத்தைப் பாதுகாத்ததற்காக விஷ்ணுவுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் இந்துக்கள் இந்த மாதத்தை தெய்வீக மாதமாகக் கருதுகின்றனர். அறிவியலுக்கும் புரட்டாசி மாதத்திற்கும் என்ன சம்பந்தம்? புரட்டாசி மாதத்தில், மக்கள் பொதுவாக அசைவ உணவு சாப்பிடுவதை தவிர்க்கிறார்கள். நவராத்திரி விரதம் இருப்பவர்களும் 9 நாட்களுக்கு முழுவதுமாகவோ அல்லது ஒரு வேளை சாப்பிட்டோ அவரவர் சௌகரியத்திற்கேற்றவாறு விரதம் இருக்கிறார்கள். இந்த நவராத்திரி விரதத்தின் போதும் அசைவத்தை உண்ண மாட்டார்கள். ஆன்மீக நோக்கத்தோடு இந்த மாதத்தில் அசைவம் சாப்பிடுவதில்லை என்கிற காரணம் இருந்தாலும் அசைவத்தை தவிர்ப்பது என்ற நடைமுறையானது, உண்மையில் அறிவியலுடனும் தொடர்பு கொண்டுள்ளது. ஆச்சிரியமாக இருக்கிறதா? வாஸ்தவத்தில் அதற்கான விளக்கமும் இருக்கிறது. செப்டம்பர் மாதத்தின் நடுப்பகுதியானது இலையுதிர்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இதன் காரணமாக, வெப்பநிலை மிதமான குளிர்ச்சியாகவும், பகல் வெளிச்சம் வழக்கத்தை விட அதிகமாகவும் இருக்கும். பகல் வெளிச்சத்துடன் குளிர்ந்த சூழ்நிலையும் சேரும் போது பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டவர்களுக்கு சோர்வு, வெப்பம் தொடர்பான தொற்றுகள் மற்றும் சோம்பலுக்கு வழிவகுக்கும். ஆகவே புரட்டாசி மாதத்தில் நமக்கு சரியான செரிமானம் நிகழாது. குறிப்பாக சிவப்பு இறைச்சியை சாப்பிட்டால், அதை ஜீரணிக்க கடினமாக இருக்கும். ஏனெனில் அதில் நிறைய புரதம் மற்றும் கொழுப்பு உள்ளது. குளிரும் வெயிலும் கலந்திருக்கும் காரணத்தால் இயல்பாகவே நம் உடலில் ஜீரண சக்தி குறைவாகவே இருக்கும் காரணத்தால் அசைவ உணவை ஜீரணிக்க இயலாது. தற்போதைய சூழ்நிலையில் உண்ணாவிரதம் பிரபலமடைந்து வந்தாலும், உண்ணாவிரதமானது பல நூற்றாண்டுகளுக்கு முன்பே துவங்கபட்டது. மேலும் பழமையான மருத்துவ முறைகளில் ஒன்றாகவும் இது கருதப்படுகிறது. உணவு உண்ணாவிட்டாலும் சரி, குறைந்த கலோரி உணவுகளை உட்கொண்டாலும் சரி, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உணவு இல்லாமல் இருப்பதே நம்முடைய உடலிற்கு ஆரோக்கியம் என்று பலர் நம்புகிறார்கள். நல்ல குடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் மக்கள் புரட்டாசி மாதத்தின் போது உண்ணாவிரதத்தை கடைபிடிக்கிறார்கள். இந்த காலகட்டத்தில் உண்ணாவிரதத்தை கடைபிடித்தால் அது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. பதட்டத்தைக் குறைக்க உதவுகிறது மற்றும் இரத்த சர்க்கரை அளவை பராமரிக்கிறது. மக்கள் அரிதாகவே உண்ணாவிரதத்தை மேற்கொள்ள விரும்புவதால், உடல்நலப் பிரச்சினைகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள புரட்டாசி மாதம் சரியானது என்று அவர்கள் கருதுகிறார்கள். ஆனாலும் இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, தைராய்டு, இதய நோய் மற்றும் வேறு சில நோய்களால் பாதிக்கபட்டவர்கள் மருத்துவரின் ஆலோசனைப் படி விரதத்தை மேற்கொள்வது நல்லது. 🍁🍁🍁
11 likes
7 shares
saravanan.
586 views 16 days ago
#aanmeegam 🛕 *_மண் சட்டி நைவேத்திய மகிமை: திருப்பதி பெருமாள் கோயில் ரகசியம்!_* * 🛕🛕🛕பெருமாள் கோயில்களில் புகழ் பெற்றது திருப்பதி வேங்கடாஜலபதி திருக்கோயில். இத்தலத்தின் அருகில் பீமன் என்ற குயவர் ஒருவர் வசித்து வந்தார். இவர் மிகச் சிறந்த பெருமாள் பக்தர். இவர் ஆயுள் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருப்பதாக சங்கல்பம் செய்து கொண்டவர். ஆனால், இவரது ஏழ்மையின் காரணமாக எந்நேரமும் தனது தொழிலிலேயே மூழ்கிக் கிடப்பார். சனிக்கிழமைகளில் கோயிலுக்கு போய் பெருமாளை தரிசிக்க அவருக்கு நேரமே இருக்காது. அப்படியே கோயிலுக்குப் போனாலும் பெருமாளை எப்படி வழிபடுவது என்று அவருக்குத் தெரியாது. ‘பெருமாளே நீயே எல்லாம்’என்ற வார்த்தையை மட்டும் சொல்லிவிட்டு திரும்பி வந்து விடுவார். ஒரு சமயம் அவருக்கு மனதில் ஓர் எண்ணம் உதித்தது. அதோடு அவர் அன்று பெருமாளை தரிசிக்கவும் கோயிலுக்குப் போக நேரமில்லை. ‘பெருமாளை இங்கேயே வரவழைத்தால் என்ன?’ என்று யோசித்தார். படபடவென களிமண்ணால் ஒரு பெருமாள் சிலையை செய்தார். பூ வாங்கும் அளவுக்கு அவரிடம் பணம் கிடையாது. எனவே, தான் வேலை செய்து முடிந்ததும் மீந்து விடும் களிமண்ணை கொண்டு சிறு சிறு பூக்களாக செய்து அதை நூலில் கோர்த்து பெருமாளின் கழுத்தில் போட்டு வணங்கி வந்தார். அதே ஊரைச் சேர்ந்த அரசர் தொண்டைமானும் மிகச் சிறந்த பெருமாள் பக்தர். அவர் ஒவ்வொரு சனிக்கிழமைகளில் ஆலயத்திற்கு வந்து இறைவனுக்கு தங்கப் பூ மாலை ஒன்றை அணிவித்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு சமயம் அவர் இப்படி அணிவித்து விட்டு மறு வாரம் ஆலயத்துக்கு வந்து பார்த்தபோது பெருமாளின் கழுத்தில் களிமண் பூ மாலை கிடந்தது. கோயில் பட்டர்கள்தான் ஏதாவது தவறு செய்கிறார்களோ என குழப்பத்தில் அரசரும் அரண்மனை திரும்பினார். அன்று இரவு அவரது கனவில் தோன்றிய பெருமாள் குயவர் பீமன் தம் மீது கொண்ட தீராத பக்தியைப் பற்றிச் சொன்னார். அதைத் தொடர்ந்து, மறுநாள் அந்தக் குயவரின் இல்லத்திற்கு நேரில் சென்ற அரசர், அவருக்கு வேண்டிய அளவு பொருள் உதவி செய்தார். அப்பொருட்களைக் கண்டு மனம் மயங்காமல் தொடர்ந்து பெருமாள் பணியையே செய்து வந்த குயவர், தனது இறுதிக் காலத்தில் வைகுந்த பதவி அடைந்தார். பெருமாளின் ஆணைப்படி அந்த பக்தரை கௌரவிக்கும் வகையில் இப்போதும் திருப்பதி ஏழுமலையானுக்கு மண் சட்டியில்தான் தயிர் சாத நெய்வேத்தியம் செய்யப்படுகிறது. புரட்டாசி மாத திருவோண நட்சத்திர தினம் திருப்பதி மலையைப்ப ஸ்வாமி தன்னை வெளிப்படுத்திக் கொண்ட தினம். அதேநேரம் புரட்டாசி சனிக்கிழமை சனி பகவான் அவதரித்த நாள். அதன் காரணமாகவே சனி பகவானால் ஏற்படும் கெடு பலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது மரபாகி விட்டது. 🍁🍁🍁
10 likes
10 shares