RamaswamyAnnamali
ShareChat
click to see wallet page
@swamy_6943
swamy_6943
RamaswamyAnnamali
@swamy_6943
💝💋காதல் 💞 💋ஒரு 🖤 💘 இனிப்பான 💔 💕விஷம் 💔
#தீபாவளி #பத்தி #தெரிந்து கொள்வோம் என்றால் பலகாரம் சாப்பிட வேண்டும், பட்டாசு வெடிக்க வேண்டும். இத்தோடு நம் கடமை முடிந்து விட்டது என்று தான் இன்றைய நிலைமை இருக்கிறது. *நாளை தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிப்பது மிக மிக முக்கியமான கடமை.* இதை கங்கா ஸ்நானம் என்பர். காசியில் இருக்கும் கங்கை நதி இந்த நாளில் அனைத்து நீர் நிலைகளிலும் நிறைந்து இருப்பாள். நம் வீட்டு வெந்நீர் பானைக்கு கூட அவள் வந்து விடுவாள். தன்மகன் என்று அறியாமல் நரகாசுரனை கொன்றுவிட்ட சத்தியபாமா, பூமாதேவியின் அவதாரம் ஆவாள். பொறுமையின் சின்னம் அவள். விஷ்ணுவிடம் சென்று, "ஐயனே! என் மகன் தவறு செய்து விட்டான். அதற்காக அவன் யார் என்றே அறியாமல் அவனை கொன்று விட்டேன். இருப்பினும் மக்கள் அவனது மரணத்தை கொண்டாடுவதை பார்த்தால், அவன் செய்த தவறுகளின் அளவு எனக்கு புரிகிறது. இப்போது குளிர்காலம். இந்த மக்கள் நாளை கங்கா ஸ்நானம் செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள். குளிரில் அவர்கள் நடுங்கிப் போவார்கள். எனவே அவர்கள் வெந்நீரில் குளிக்க அனுமதி அளியுங்கள்" என கேட்டாளாம். அவளது தயாள குணத்தை அறிந்து நெகிழ்ந்து போன விஷ்ணு, அனைத்து மக்களும் சுடுநீரில் குளிக்க அனுமதி அளித்தார். சுடுநீரில் குளிப்பதையும், ஏனோ தானோ என்று செய்யக்கூடாது. மண்பானை அல்லது செம்பு பானையில் வெந்நீர் வைப்பது சிறப்பு வாய்ந்தது. எந்த பானையில் வைத்தாலும் பாத்திரத்தை சுத்தமாக தேய்த்து இருக்க வேண்டும். பானை மீது மாக்கோலம் போட்டிருக்க வேண்டும். சமையலறை மற்றும் குளிக்கும் இடம் ஆகியவற்றை முன்கூட்டியே சுத்தப்படுத்தி இருக்க வேண்டும். ஒருவர் குளித்து முடித்து மற்றொருவர் குளிக்கச் செல்லும் முன் மீண்டும் குளியலறையை சுத்தப்படுத்த வேண்டும். நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதால் நமது வீட்டுக்கு லட்சுமி தாயார் வருவாள் என்பது ஐதீகம்? அவள் சுத்தத்தை மிகவும் விரும்புவாள். எனவே சுத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். குளிக்கும்போது காசி விஸ்வநாதரையும் கங்காதேவியையும் மனதில் நினைத்தபடியே பக்தி உணர்வுடன் நீராட வேண்டும். இது ஒன்றும் கடினமான செயல் அல்ல. மனம் இருந்தால் இது போன்ற சடங்குகள் மீண்டும் நமது இல்லங்களில் துளிர் விட இந்த ஆண்டே விதை விதைக்கலாம்.
தீபாவளி - ன்றையஆன்மீகசிந்தனை கங்கா ஸ்நானம் எப்படி செய்ய வேண்டும் தெரியுமா? Ramaswamy ன்றையஆன்மீகசிந்தனை கங்கா ஸ்நானம் எப்படி செய்ய வேண்டும் தெரியுமா? Ramaswamy - ShareChat
#தீபாவளி #தெரிந்து கொள்வோம் தத்துவம்* 🌹 பாரத தேசத்தில் கொண்டாடப்படும் ஒவ்வொரு பண்டிகைக்குப் பின்னாலும் ஆழமான தத்துவார்த்தம் உண்டு. முதல் பார்வையில் சமூக ஒற்றுமையும், கொண்டாட்டத்திற்கான நாளாகவும் பண்டிகை இருக்கும். ஆனால், ஏன் இதை கொண்டாடுகின்றோம் என்று புராணங்கள் அதை கதையாக சொல்லும்போது கூட என்னவோ பெரியவர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள் என்று நகர்ந்து விடுவோம். ஆனால், ஆர அமர உட்கார்ந்து தேடுதலை மேற்கொண்டால் தனி மனித சுதந்திரம், வீடு பேறு, ஜீவன் முக்தி என்று பண்டிகைகள் ஒரு ஜீவனை நகர்த்திச் செல்வது தெரியும். தேவேந்திரன் என்பவனுடைய பதவியை நரகாசுரன் பறித்தான். அவனை கிருஷ்ணரின் மனைவியான சத்யபாமா கொன்றாள் என்கிற தீபாவளி உண்டான கதை நம் எல்லோருக்கும் தெரியும். அசல்பதிவேற்றியவருக்கு நன்றி. இதில் வரும் நரகாசுரன் என்பவன் யார்? நரன் என்றால் தேகமே நான் என்று மயங்கும் மாயைக்கு உட்பட்டவன். தேகத்தினால் வரும் இன்பங்களையே சத்தியம் என்று நினைத்து மயங்குபவன். பஞ்ச இந்திரியங்களால் தொடர்ந்து தான் என்ன தேடுகிறோம் என்று தெரியாது உலகியல் விஷயங்களிலேயே உழல்பவன். தேவேந்திர பதவியை ஜீவன் முக்தியில் இருத்தல் என்பதாகவும், அந்த ஆத்மாவின் சொரூபத்தை மாயையான நரகாசுரன் மறைத்தான் என்றும் பொருள் கொள்ள வேண்டும். அதாவது ஞானியர் நம்மை நோக்கி எப்போதும் உபதேசமாக சொல்லும் மாயையிலேயே மயங்கியிராதே, விழித்துக் கொள். நீ யார் என அறிந்து கொள் என்பதுதான் இது. இதில் ஒவ்வொரு ஜீவனும் ஜனனம், மரணம் என்று மாறிமாறி துன்புறுகின்றன. இதிலிருந்து மேலெழ தெய்வ வழிபாட்டை மேற்கொள்கிறான். அந்த வழிபாட்டையே இந்திரன் தன்னை நரகாசுரன் சூழ்ந்தான் என்னை அதிலிருந்து மீளச் செய்யுங்கள் என்பதாகும். தீபாவளிப் பண்டிகை என்பது ஐப்பசி மாதம், சதுர்த்தசி திதியில் நிகழ்ந்தது. இதில் ஐப்பசி என்பதற்கு மறைபொருளான பொருள் உண்டு. ஐப்பசி என்பது சித்திரையை முதலாவதாகக் கொண்ட ஏழாவது மாதம் ஐப்பசி ஆகும். வேதாந்த அர்த்தத்தில் ஐப்பசி என்பது ஏழாவது ஞான பூமி ஆகும். அதாவது துரீயம் ஆகும். சதுர்த்தசி என்பது பதினான்காவது திதியாகும். வேதாந்தத்தில் ஞான யாத்திரையை மேற்கொள்ளும் ஜீவன் தனது ஆன்மிக வாழ்வில் குருவின் அடிபணிந்து சிரவணம், மனனம்.... என்று ஒவ்வொரு சாதனங்களைச் செய்து இறுதியாக நிர்விகற்ப சமாதியை அடைகின்றான். இங்கும் நரகாசுரன் எத்தனை ஆன்மிக சாதனைகளில் ஈடுபட்டாலும் தன்னுடைய அகங்காரத்தை அழித்துக் கொள்ள முடியாது வழுக்கியபடியே இருந்தான். அதாவது நான் எனும் அகங்காரம் கிளைத்து வந்தபடியே இருந்தது. அப்போதுதான் சத்யபாமை எனும் குரு நிர்விகற்ப சமாதி என்கிற ஆயுதத்தை எய்து ஜீவனை மோட்சம் எனும் பெரும் நிலையை எய்துவித்தாள். இங்கு ஏன் கிருஷ்ணர் வதம் செய்யவில்லையெனில், கிருஷ்ணர் ஜீவன் முக்தர். அவருக்கு ஞானி, அஞ்ஞானி என்கிற பேதமில்லை. ஏனெனில், தனக்கு அந்நியமாக இன்னொருவரே இல்லை. அதனால், தன்னிலிருந்து அதாவது கிருஷ்ணரிலிருந்து தனக்கு வேறல்லாத சத்யபாமை எனும் ஞானக் கருணையைக் கொண்டு இந்த ஞான வதத்தை நிகழ்த்தினார்.இப்போது கூறுங்கள். தீபாவளி என்பது தனிப்பட்ட ஜீவனுடைய ஞான யாத்திரையில் பிரம்மானந்த நிலையை எய்திய விஷயமே ஆகும். அப்போது அங்கிங்கெனாதபடிக்கு எங்கும் ஒளி வெள்ளம்தான். அதையே நாம் வெளிப்புறத்தில் தீபமேற்றி கொண்டாடுகின்றோம். வெளியே உள்ள தீபம் உள்ளேயும் அணையாமல் இருப்பதை அறிந்து கொள்வதே தித்திக்கும் தீபாவளியின் தத்துவமாகும்.🌹
தீபாவளி - ShareChat
#தீபாவளி #தெரிந்து கொள்வோம் #பத்தி தீபாவளி சீர்!* 🌹 *தீபாவளி என்றாலே* மாப்பிள்ளைகளுக்கு கொண்டாட்டம்தான். புது மாப்பிள்ளை என்றால் கேட்கவே வேண்டாம். அதில் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமாள் ஸ்ரீரங்கநாதரும் அடங்குவார். ஒவ்வொரு வருடமும் ஸ்ரீரங்கநாதர் தீபாவளி கொண்டாடும் விதம் அலாதியானது. தீபாவளிக்கு முதல் நாள் மாலை எண்ணெய் அலங்காரம் மேளதாளத்தோடு பெருமாளுக்கு சாத்தப்படும். மேலும், கோயில் சிப்பந்திகளுக்கும் நல்லெண்ணெய், சீயக்காய்த்தூள் பெருமாள் சார்பாக வழங்கப்படும். அசல்பதிவேற்றியவருக்கு நன்றி. தொடர்ந்து கோயிலில் அருள்பாலிக்கும் ஆழ்வார், ஆசார்யர் சந்நதிகளுக்கு நல்லெண்ணெய், சீயக்காய்த்தூள், விரலிமஞ்சள் பெருமாள் சார்பாக அந்தந்த சந்நதிகளில் உள்ள அர்ச்சகர் மூலம் அனுப்பி வைக்கப்படும்.தீபாவளியன்று அதிகாலை தாயார் மற்றும் ஆழ்வாருக்கு ஆசார்யர் சந்நதிகளில் எண்ணெய் அலங்காரம் செய்யப்பட்டு திருமஞ்சனம் நடைபெறும். அதைத் தொடர்ந்து மூலவர் மற்றும் உற்சவர்களுக்கு புத்தாடை, மலர்மாலை அணிவித்து அலங்காரம் செய்வார்கள். அலங்காரம் முடிந்ததும் ஆழ்வார்கள், ஆசார்யர்களின் உற்சவமூர்த்திகள் அனைவரும் புறப்பட்டு, மூலஸ்தானத்துக்கு கிழக்கில் உள்ள கிளி மண்டபத்துக்கு வந்து பெருமாள் வருகைக்காக காத்திருப்பார்கள். அப்போது பெருமாளின் மாமனார் பெரியாழ்வாரும் ஸ்ரீரங்கநாதருக்காக தீபாவளி சீர் தருவதற்காகத் காத்திருப்பார். உற்சவர் நம்பெருமாள் சந்தன மண்டபத்திற்கு எழுந்தருள்வார். அங்கு அவருக்கு திருமஞ்சனம் நடைபெற்றதும் சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்புரிவார்.இந்த நிகழ்ச்சியெல்லாம் முடிந்த பின் ஸ்ரீரங்கநாதரை மாப்பிள்ளையாக அடைந்த பெரியாழ்வார் தீபாவளி சீர் தரும் நிகழ்ச்சி நடைபெறும். இவ்வழக்கம் இன்று வரை கடைபிடிக்கப்படுகிறது. நம்பெருமாள் திருவடிகளைச் சுற்றி சீர்வரிசையான நாணய மூட்டைகள் வைக்கப்படும். அப்போது வேதபாராயணங்கள் முழங்க மங்கள வாத்தியம் வாசிக்கப்படும். இதை ஜாலி (சாளி) அலங்காரம் என்பர். ஜாலி அலங்காரம் என்பது ஆயிரம் ஒரு ரூபாய் நாணயங்களை இரண்டு புது கைலிகளில் மூட்டையாகக் கட்டி பெருமாள் திருவடிகளில் சமர்ப்பிப்பது. நிகழ்ச்சிக்கு பிறகு பெருமாள் கோயிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சிஅளிப்பார். அதன்பின் கிளிமண்டபத்தில் காத்திருக்கும் ஆழ்வார்கள், ஆசார்யர்கள் அனைவருக்கும் பெருமாள் புது வஸ்திரம், சந்தனம், தாம்பூலம், மலர், பழங்கள் ஆகியவற்றை தீபாவளிப் பரிசாகக் கொடுத்து கௌரவிப்பார். இந்த திருக்காட்சியை தீபாவளித் திருநாளில் தரிசித்தால் ஆடைகளுக்கும் பண வரவுக்கும் தட்டுப்பாடு உண்டாகாது. குடும்பத்தில் மகிழச்சி பொங்கும். ஆரோக்கியமான வாழ்வும், செல்வமும் கிட்டும்.🌹
தீபாவளி - AU0I60000000'  LAVANYA AU0I60000000'  LAVANYA - ShareChat
#🙏கோவில் #தெரிந்து கொள்வோம்*மலைக்கோயில்* *கடற்கரை* *கோயில் ரகசியம்*: மலைகளிலும், கடற்கரை, அருவிக்கரை ஓரங்களிலும் கோயில்கள் அமைக்கப்பட்டதற்கான காரணம் தெரியுமா! நம் முன்னோர் ஆன்மிகத்தில் மட்டுமல்ல! அறிவியலிலும் கைதேர்ந்தவர்களாக இருந்துள்ளனர். ஒரு மலையைக் காட்டி, ""இதன் மேல் ஏறு! நன்றாக மூச்சு வாங்கும், மூச்சு வாங்குவது என்பது மிகச்சிறந்த பிராணாயாமப் பயிற்சி,'' என்று யாரிடமாவது சொன்னால் கேட்பார்களா! ""வேறு வேலை இல்லையா! போங்க சாமி!'' என்று ஒருமாதிரியாகப் பார்த்து விட்டு போய் விடுவார்கள். அதேநேரம், ""அந்த மலையில் தங்கப்புதையல் இருக்கிறதாம்! அங்கே நிரூற்று இருக்கிறதாம். அதில் நீராடினால், கருப்பாய் இருப்பவர் கூட சிவப்பாகி விடுவாராம்,'' என்றால் என்னாகும்! அடித்துப் பிடித்து ஏறி மலை உச்சியை அடைந்து விடுவார். இதுதான் மனிதனின் மனநிலை. அதனால் தான் மலையிலும், கடற்கரையிலும் கோயில்களை அமைத்து வழிபாட்டு தலமாக்கினர் முன்னோர். மலையில் ஏறும்போதும், கடற்கரையில் சுத்தமான காற்று வாங்கும்போதும், நமது ரத்தத்தில் ஆக்சிஜன் கலக்கிறது. இது ஹீமோகுளோபின் என்னும் ரத்த அணுக்களை விருத்தியாக்குகிறது. தரையில் இருக்கும் கோயில்களில் உள்ள கருவறைகளை விட, மலைக்கோயில், கடற்கரை கோயில் கருவறைகளில் இருந்தும் நமக்கு சுத்தமான காற்று கிடைக்கிறது. இதனால் தான் திருப்பதி, பழநி, திருச்செந்தூர், குற்றாலத்தில் மக்கள் கூட்டம் மொய்க்கிறது. இந்தக் கோயில்களுக்குச் சென்றால் செல்வவளம் கிடைப்பதாக மக்கள் நம்புகின்றனர். இது எப்படி என்றால், இங்கே அடிக்கடி சென்றால் நோய்களின் தாக்கம் குறையும். "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்'. நோய் இல்லாதவர்களுக்கு மருத்துவச்செலவு மிச்சம். விடுமுறை எடுக்க வேண்டிவராததால், பணி, தொழிலில் கிடைக்கும் சம்பளம் குறையாது. உடல்நிலை நன்றாக இருந்தால், மனம் முன்னேற்றம் குறித்துசிந்திக்கும். இது ப
🙏கோவில் - B0Er மலை கோயில் கடற்கரை கோயிலின் ரகசியம் B0Er மலை கோயில் கடற்கரை கோயிலின் ரகசியம் - ShareChat
#பத்தி #🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏 #🙏கோவில் #தெரிந்து கொள்வோம் சாதனை படைக்குமா அயோத்தி தீப உற்சவம்...? சரயு நதிக்கரையில் 26 லட்சம் விளக்குகள்* ..... 😟😯😟😯😟 ராமர் பிறந்த இடமான அயோத்தியில், ஆண்டு தோறும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் தீபோற்சவம், இந்த ஆண்டு கின்னஸ் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 18ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி வரை சரயு நதிக்கரையில் இந்த தீபோத்சவம் நடைபெறவிருக்கிறது. இந்த நாளில், சுமார் 26 லட்சம் விளக்குகள் ஏற்று சாதனை உடைத்து கின்னஸ் சாதனை படைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனுடன், டிரோன்கள் பறக்கவிடுவது, லேசர் விளக்குகள், கலாசார நிகழ்வுகளுடன் அயோத்தி மாநகரம் களைகட்டும். 14 ஆண்டுகள் வனவாசம் முடிந்து, ராவணனை வதம் செய்துவிட்டு அயோத்தியா திரும்பும் ராமனை வரவேற்கும் வகையில், அயோத்தி மக்கள் நகரம் முழுவதையும் விளக்குகளால் அலங்கரித்ததை நினைவுகூரும் வகையில் இந்த தீபோத்சவம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்த தீபோற்சவத்தின்போது, புதிய கின்னஸ் சாதனை படைக்க அனைத்து ஏற்பாடுகளையும் அதிகாரிகள் செய்து வருகிறார்கள். தேவையான பொருள்களை வாங்க ஒப்பந்தங்கள் விடப்பட்டு, அனைத்து பொருள்களும் வாங்கப்பட்டுள்ளன. விளக்கேற்றும் தன்னார்வலர்கள், அடிப்படை வசதிகள் என அனைத்தும் தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அகல் விளக்குகள், எண்ணெய், திரி, வத்திப்பட்டி என அனைத்தும் வாங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 26 லட்சம் விளக்குகளை ஏற்ற திட்டமிடப்பட்டுள்ளது. சரயு நதிக் கரைக்கு வர பல்வேறு நுழைவுப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 100 கலைஞர்கள் பங்கேற்று பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படவிருக்கின்றன. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், இந்த தீபோற்சவம் பல்வேறு சாதனைகளைப் படைக்கும் வகையில் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருப்பதாகவும் அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். இந்த தீபோற்சவத்தைப் பார்க்கும் எவர் ஒருவருக்கும், அது வாழ்நாள் அனுபவமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நாளில் நதிகரையைச் சுற்றிலும் ஏராளமான மக்கள் திரண்டு வந்து விளக்குகளை ஏற்றி, நகரையே நட்சத்திரம் போல ஜொலிக்க வைப்பது வழக்கம். தெரிந்து கொள்வோம்.... 🙏🙏🙏🙏🙏
பத்தி - ShareChat
#🙏ஆன்மீகம் #பத்தி#ஐப்பசிமாதம் ஸ்பெஷல் *இன்று ஐப்பசி மாதம் பிறக்கிறது : இந்த நாட்களை மறந்து* *விடாதீர்கள் !!* ஐப்பசி மாதத்தில் என்னென்ன விசேஷங்கள்? ஐப்பசி மாதம் தமிழ் மாதங்களில் சித்திரை தொடங்கி 7வது மாதமாகும். ஐப்பசி மாதத்தில் சிறப்புமிக்க பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. ஐப்பசி மாதத்தில் பௌர்ணமியில் சிவாலயங்களில் அன்னாபிஷேகம், தீபாவளிப் பண்டிகை, கந்தசஷ்டி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. ஐப்பசி மாதத்தில் பல்வேறு சிறப்புகள் நிறைந்துள்ளது. *ஐப்பசி பௌர்ணமி* : சிவனின் லிங்க திருமேனிக்கு ஐப்பசி மாதம் வரக்கூடிய பௌர்ணமி அன்று வருடந்தோறும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கர்ப்ப கிரகத்தில் உள்ள சிவலிங்கத்திற்கு சமைத்த சாதங்கள், காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. நாம் உண்ணுவதற்கு உணவளித்த சிவனுக்கு நன்றி கூறும் விதமாக இந்த அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. எல்லா சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றாலும் பெயர் பெற்ற தலமான தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயம் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயங்களில் சிறப்பாக வழிபாடு செய்யப்படுகிறது. சிறப்புவாய்ந்த அன்னாபிஷேக வழிபாட்டில் கலந்துக்கொண்டு இறைவனின் பரிபூரண அருளைப் பெற்று நமது குறைகளை நீக்கி பேறு அடையலாம். *ஐப்பசி சதயம் :* ஐப்பசி மாதம் சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர் மா மன்னர் ராஜராஜசோழன். அவரை சிறப்பிக்கும் வகையில் சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. *வளர்பிறை ஏகாதசி :* ஐப்பசி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி 'பாபாங்குசா" என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் ஏகாதசி விரதத்தை கடைபிடித்தால் வறுமை அகலும், பசிப்பிணி நீங்கும், பாவ விமோச்சனம் பெறலாம். *தேய்பிறை ஏகாதசி :* ஐப்பசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி 'இந்திரா ஏகாதசி" என்று அழைக்கப்படுகிறது. இந்திரா ஏகாதசியில் விரதமிருந்தால் நாம் செய்த பாவம் மட்டுமின்றி நம் முன்னோர்களின் பாவங்களும் நீங்கும். *கடைமுகம் :* ஐப்பசி மாதக்கடைசி நாள் கடைமுகம் என்று அழைக்கப்படுகிறது. ஐப்பசி மாதத்தில் அனைத்துப் புண்ணிய நதிகளும் கலந்து புனிதத்தை அள்ளி வழங்கும் என்பர். இந்த மாதத்தில், காவிரி நீராடல் புண்ணியம் மிகுந்தது. அதுவும், ஐப்பசி கடைசி நாளன்று மேற்கொள்ளப்படும் புனித நீராடலை கடை முழுக்கு என்பர். ஐப்பசி மாதம் கடைசி நாளில் காவிரியில் முழுகி, மயூரநாதரை வழிபட்டால் நன்மை உண்டாகும். மேலும் நம் பாவங்கள் கரைந்தோடும். *தீபாவளி :* தீபாவளி பண்டிகை ஐப்பசி மாதத்தில் திரயோதசி, சதுர்த்தசி, அமாவாசை மற்றும் அதற்கடுத்த சுக்கிலப்பட்ச பிரதமை நாட்களில் கொண்டாடப்படுகிறது. *கந்த சஷ்டி :* கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை கொண்டாடும் ஒரு விழாவாகும். சஷ்டி என்றால் ஆறு ஆகும். ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி வரை உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும். 🙏🪷🙏
🙏ஆன்மீகம் - ShareChat
#🙏ஆன்மீகம் #பத்திஸ்டேட்ஸ்
🙏ஆன்மீகம் - ShareChat
00:59
#🙏ஆன்மீகம் #பத்திஸ்டேட்ஸ்
🙏ஆன்மீகம் - ShareChat
00:30
#தெரிந்து கொள்வோம் #🙏ஆன்மீகம் போக கூடாத கோவில்கள் *தெரிந்து கொள்வோம்*
தெரிந்து கொள்வோம் - ShareChat
01:13
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💝இதயத்தின் துடிப்பு நீ
😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் - ShareChat
00:08