RamaswamyAnnamali
ShareChat
click to see wallet page
@swamy_6943
swamy_6943
RamaswamyAnnamali
@swamy_6943
💝💋காதல் 💞 💋ஒரு 🖤 💘 இனிப்பான 💕 வாழ்க்கை💔
#📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️ #🚹உளவியல் சிந்தனை நாம் கெடுக்க நினைத்தால் முதலில் நாம் கெடுவோம்*
📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️ - ShareChat
00:11
#📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️ #🚹உளவியல் சிந்தனை
📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️ - ஒவ்வொரு வினைக்கும் அதற்கு ணையான எதிர் வினை உண்டு. ஒவ்வொரு வினைக்கும் அதற்கு ணையான எதிர் வினை உண்டு. - ShareChat
#🙏 ஓம் நமசிவாய வழிபாட்டின் முக்கியத்துவம் ...!* ஒரு சிறு புல்லைக்கூட சிருஷ்டிக்கத் திறனற்ற மனிதனுக்கு இத்தனை உணவும், உடையும், மற்ற உபகரணங்களும் வழங்கும் ஆண்டவனுக்கு நன்றி கூறும் அடையாளமாகவே நாம் நிவேதனம் செய்கிறோம்; ஆபரணங்களையும் வஸ்திரங்களையும் சமர்ப்பிக்கிறோம். எல்லாருமே வீட்டில் இவ்வாறு பூஜை செய்து, திரவியங்களை ஈசுவரார்ப்பணம் செய்ய இயலாது. எனவே, சமுதாயம் முழுவதும் சேர்ந்து இப்படி சமர்ப்பணம் பண்ணும்படியான பொது வழிபாட்டு நிலையங்களாக ஆலயங்கள் எழுந்துள்ளன. இறைவனுக்கு நன்றி செலுத்துவதைத்தான் பரார்த்த பூஜையாக, நிஷ்காம்ய வழிபாடாக, ஆலயங்களில் செய்கிறோம். அரணிக்கட்டையுள் நெருப்பு மறைந்துள்ளது போல, மலரில் மணம் மறைந்துள்ளது போல ஈச்வரன் பிம்பத்தில் (லிங்கத்தில்) உள்ளார். பாலை விட, தயிரிலிருக்கும் நெய்யைக் கண்டெடுப்பது எளிது. உலகெங்கிலும் பாலில் மறைந்துள்ள நெய் போல் உறையும் இறைவன், ஆலயத்தில் தயிரினுள் மறைந்திருக்கும் நெய் போல எளிதில் நமக்கு முன் வந்து அருளக் காத்திருக்கிறான். ஆகமங்களில் விதித்துள்ள சிற்ப சாஸ்திரங்களுக்கொப்ப அமைந்துள்ள திருக்கோவில்களே பரம்பொருள் வீற்றிருக்கும் தேவாலயங்கள். ஆகம விதிப்படி அமையாத ஆலயங்கள் மடாலயங்கள் எனப்படும். சிவலிங்கம் இருக்கும் இடத்திலிருந்து நான்கு புறமும் 150 முழ தூரம் சிவஷேத்ரம் ஆகும். இங்கு வசிப்பதும சிவலோகவாசத்திற்கு காரணமாகும் என்று சுப்ரபேத ஆகமம் கூறுகிறது மனத்தை ஒருவழிப் படுத்தவும், கீழ்ப்படிவு, நீதி வழி நிற்றல், தன்னலம் மறுப்பு, பணிவு, இரக்கம் ஆகிய பல சிறந்த பண்படுகளை உண்டாக்கி வளர்க்கவும், இறுதியாக மோக்ஷ ஸாம்ராஜ்யம் அடைந்திட வழி வகுக்கவும் திருக்கோயில் வழிபாட்டைத் தவிர வேறு மார்க்கம் இல்லை. சாதாரணமாக, நம் கைகள் இரண்டு விரிந்து, வளைந்து, பற்பல செய்கைகளைச் செய்கின்றன. இறைவனுடைய ஸந்நிதானத்தில் கும்பிடும்போது, அத்தகைய செய்கைகள் எல்லாம் ஒழிந்து, கைகள் ஒன்று சேர்ந்து குவிகின்றன. அவ்வாறு குவிந்திடும் கைகள் ஆண்டவனே ! இனி என் செயல் என்று ஏதும் இல்லை என்பதை உணர்ந்துவிட்டேன். எல்லாம் உன் அருட் செயலே என்ற சரணாகதி தத்துவத்தை உணர்த்துகின்றது... .
🙏 ஓம் நமசிவாய - கங்கை பிறை நிலா நெற்றிக்கண் தோடுகள் திரிசூலம் நாகம் உத்திராட்சம் காவியுடை புலித்தோல் கமண்டலம் லிங்கம் கங்கை பிறை நிலா நெற்றிக்கண் தோடுகள் திரிசூலம் நாகம் உத்திராட்சம் காவியுடை புலித்தோல் கமண்டலம் லிங்கம் - ShareChat
#🙏ஆன்மீகம் #🙏கோவில் #தெரிந்து கொள்வோம் “ஒரே நாளில் ஐந்து நிறங்களில்* அருள்பாலிக்கும் அதிசய லிங்கம்! *திருநல்லூர் பஞ்சவர்ணேஸ்வரரின் தெய்வீக இரகசியம்!” *✨ 📜 விரிவான தெய்வீக கதை “நிறங்கள் ஓர் ஐந்து உடையாய்! விண்ணோர்கள் ஏத்த!” என்று மாணிக்கவாசகர் சிவபுராணத்தில் ஈசனைப் புகழ்ந்து பாடிய அந்த வரிகள், உண்மையான தரிசனமாகக் காணப்படும் ஒரே தலம் – திருநல்லூர்! தமிழ்நாட்டின் நெஞ்சில் தவழும் பெருமையும் அதிசயமும் கூடிக் கலந்த திருநல்லூர் பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில், இன்றும் பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்திக் கொண்டே இருக்கிறது. 🌈 ஒரே நாளில் ஐந்து முறை நிறம் மாறும் சுயம்பு லிங்கம்! இத்தலத்தில் எழுந்தருளியுள்ள பஞ்சவர்ணேஸ்வரர் – சுயம்பு மூர்த்தி! ஒரே நாளில் ஆறு நாழிகைக்கு ஒருமுறை அவர் லிங்கத் திருமேனி ஐந்து வித நிறங்களில் மாறி மாறி அருள்காட்சியளிக்கிறது! 🕉️ 🔸 காலை 8 மணி வரை – தாமிர நிறம் 🔸 அதன் பிறகு – இளஞ்சிவப்பு நிறம் 🔸 மதியம் 2.30 மணி வரை – பொன் நிறம் 🔸 அதன் பின்னர் – உருகிய தங்க நிறம் 🔸 மாலை நேரம் – நவரத்தின பச்சை நிறம் ஒரே லிங்கம்… ஐந்து நிறங்கள்… ஒரே இறைவன்… ஐந்து வேத சக்திகள்! இதனால்தான் இவருக்கு “பஞ்சவர்ணேஸ்வரர்” என்ற திருநாமம்! 🙏 சடாரி வைக்கப்படும் ஒரே சிவாலயம் – காரணம் என்ன? வைணவத் தலங்களில் போல இந்த சிவாலயத்திலும் பக்தர்கள் தலைமேல் சடாரி வைக்கப்படுகிறது! இதற்குப் பின்னால் மறைந்திருக்கும் அப்பர் நாயனாரின் உன்னத பக்தி வரலாறு இதோ… 🕉️ நாவுக்கரசருக்கு சிவன் திருவடி சூட்டிய தலம்! அப்பர் பெருமான், “மரணம் என்னை அணுகுவதற்கு முன் உன் திருவடியை என் தலைமேல் வைத்து அருள வேண்டும்!” என்று இறைவனை உருகி வேண்டினார். அப்பொழுது ஈசன், “திருநல்லூருக்கு வா… உன் வேண்டுதல் அங்கே நிறைவேறும்!” என்று அருளினார். அப்பரும் திருநல்லூருக்கு வந்து, பஞ்சவர்ணேஸ்வரரை வழிபட்டார்! அப்போது— ❗️ ஈசன் தன் திருவடியை அப்பரின் சிரசில் வைத்து ஆசீர்வதித்தார்! இதன் நினைவாகத்தான் இன்றும் பக்தர்களுக்கு சடாரி சாற்றும் வழக்கம் தொடர்கிறது! 💍 அகத்தியருக்கு கல்யாண கோலம் காட்டிய தலம் அகத்திய முனிவருக்கு சிவன் – பார்வதி திருமணக் கோலத்தில் அருள்புரிந்த புனிதத் திருத்தலம் இதுவே! அந்த திருமணக் கோலத்தை இன்றும் கருவறையின் பின்புறம் மூல லிங்கத்தின் பின்திசையில் தரிசிக்கலாம்! அகத்தியர் பூஜித்த இரண்டாவது சிறிய லிங்கமும் இங்கே இன்றும் உள்ளது! 🐝 பிருங்கி முனிவர் வண்டு வடிவில் ஆராதித்த இடம் பிருங்கி முனிவர் வண்டு வடிவில் பறந்து வந்து இறைவனை பூஜித்ததால், இன்றும் லிங்கத் திருமேனியில் சிறு சிறு துளைகள் காணப்படுகின்றன! 🌾 அமர்நீதி நாயனார் – தராசில் குடும்பத்தையே தந்த தியாகம் பழையாறையில் வாழ்ந்த அமர்நீதி நாயனார் – அன்னதானப் பெருந்தகை! திருநல்லூரில் அவர் கட்டிய அன்னதான மடம் இன்றும் உள்ளது! ஒருநாள், வேதியர் ரூபத்தில் வந்த ஈசன், ஒரு கோவணத்தை ஒப்படைத்து “இதனை பத்திரமாக வைத்திரு!” என்று கூறிச் சென்றார். மழையில் நனைந்து திரும்பி வந்து அந்த கோவணத்தை கேட்டபோது— அது மாயமாக மறைந்திருந்தது! தராசு கொண்டு வந்து இழந்த கோவணத்திற்கு ஈடாக ஒவ்வொன்றாக துணிகள்… ஆபரணங்கள்… சொத்துகள்… வைக்கப்பட்டன… எதுவும் சமமானதே இல்லை! இறுதியில்— 👉 அமர்நீதி நாயனரும், அவரின் மனைவியும், மகனும் தங்களையே தராசில் ஏற்றினர்! அந்த நொடியில்— 🌺 ஈசன் பஞ்சவர்ணேஸ்வரராக, கல்யாணசுந்தரராக, வானில் காட்சி தந்து மூவரையும் கைலாயம் அழைத்துச் சென்றார்! இத்தகைய தியாகம் நிகழ்ந்த புனிதத் தலம் – திருநல்லூர்! 🌺 முடிவுச் செய்தி: ஒரே நாளில் ஐந்து நிறங்களில் அருள் புரியும் பஞ்சவர்ணேஸ்வரர், பக்தியைப் பரிசாகவும், தியாகத்தை வாழ்வாக்கவும் கற்றுத் தரும் ஒரு அற்புத தெய்வீக தலம்✍️🌹
🙏ஆன்மீகம் - ரே நாளில் ஐந்து நிறங்களில் அருள்பாலிக்கும் அதிசய லிங்கம்! திருநல்லூர் பஞ்சவர்ணேஸ்வரரின் தெய்வீக இரகசியம்! ரே நாளில் ஐந்து நிறங்களில் அருள்பாலிக்கும் அதிசய லிங்கம்! திருநல்லூர் பஞ்சவர்ணேஸ்வரரின் தெய்வீக இரகசியம்! - ShareChat
#🙏கோவில் #தெரிந்து கொள்வோம் விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் திருக்கோயில் ​இது தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டத்தில் பாலாற்றின் தென்கரையில் அமைந்துள்ள மிகச் சிறப்பான மற்றும் தொன்மையான சிவன் கோயிலாகும். சுமார் 1300 ஆண்டுகள் பழமையானது என்று கருதப்படுகிறது. ​✨ முக்கிய அம்சங்கள் ​மூலவர்: மார்க்கபந்தீஸ்வரர் (அல்லது வழித்துணைநாதர்). ​சிறப்பு: இங்குள்ள சிவலிங்கம் சுயம்பு லிங்கம் ஆகும். இது சிறுவனாகப் பிறந்த பிரம்மனுக்கு அபிஷேகம் செய்ய உதவுவதற்காகச் சற்றே முன்னோக்கி சாய்ந்துள்ளது என்று நம்பப்படுகிறது. ​அம்மன்: மரகதாம்பிகை (மரகதவல்லி). ​தல விருட்சம் (மரம்): பனை மரம். ​தீர்த்தம்: சிம்ம தீர்த்தம், பாலாறு, பிரம்ம தீர்த்தம். ​சிறப்பு: இது தேவார வைப்புத் தலங்களில் ஒன்றாகும். திருஞானசம்பந்தர், அப்பர், திருமூலர், பட்டினத்தார் போன்றோரால் பாடல் பெற்ற தலம். ​📜 தல வரலாறு மற்றும் சிறப்புகள் ​வழித்துணை நாதர்: மைசூரைச் சேர்ந்த தனபாலன் என்ற மிளகு வணிகன் திருடர்களிடமிருந்து தன்னைக் காக்க சிவபெருமானை வேண்ட, இறைவன் வேடன் வடிவில் வந்து வணிகனுக்கு வழித்துணையாகச் சென்று காப்பாற்றினார். அதனாலேயே இவருக்கு வழித்துணைநாதர் அல்லது மார்க்கபந்தீஸ்வரர் (வழித்துணை) என்ற பெயர்கள் வந்தன. இதன் நினைவாக இன்றும் "பார் வேட்டை" என்ற விழா நடைபெறுகிறது. ​பிரம்ம உபதேசத் தலம்: லிங்கோத்பவத்தின் போது பொய் சொன்ன பிரம்மா, இத்தலத்தில் மனிதப் பிறப்பெடுத்து சிவபிரானை வழிபட்டார். சிவசர்மன் என்ற பெயரில் பிறந்த பிரம்மனுக்குச் சிவபெருமானே குருவாக வந்து உபநயனம், பிரம்மோபதேசம், சிவதீட்சை ஆகியவற்றை அருளினார். பிரம்மா வழிபட்டதால் இத்தலத்திற்கு விரிஞ்சிபுரம் என்று பெயர் வந்தது (விரிஞ்சன் என்பது பிரம்மாவின் மற்றொரு பெயர்). ​குழந்தை வரம்: இத்தலத்தில் உள்ள சிம்ம தீர்த்தம் மிகவும் விசேஷமானது. ஆதிசங்கரரால் பீஜாட்சர யந்திரம் ஸ்தாபனம் செய்யப்பட்ட இச்சிம்மக்குளத்தில் கார்த்திகை கடைசி ஞாயிறு நள்ளிரவில் நீராடி ஆலயத்தில் படுத்துறங்கினால், கனவில் முதியவர் (சிவன்) மலர்கள், பழங்கள், புத்தாடைகள் தாங்கியபடி காட்சி தந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது தொன்நம்பிக்கை. ​🏛️ கட்டிடக்கலை ​இக்கோயில் பல்லவர், முற்காலச் சோழர், விஜயநகர மன்னர்கள் எனப் பலரால் கட்டப்பட்டதற்கான கல்வெட்டுகளைக் கொண்டுள்ளது. ​"தஞ்சைக் கோயிலின் அழகு, திருவாரூர் தேர் அழகு, திருவிரிஞ்சை மதிலழகு" என்று இக்கோயிலின் மதில் சுவரின் சிறப்பு போற்றப்படுகிறது. ​கோபுரங்களும், முக மண்டபத்தில் உள்ள சிற்பங்களும், தூண்களில் உள்ள குதிரை வீரர்களின் சிற்பங்களும் கலைநயம் மிக்கவை. ​இந்த விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயிலுக்கு நீங்களும் சென்று வழித்துணை நாதரின் அருளைப் பெறலாம்✍️🌹
🙏கோவில் - ShareChat
#📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️ #🚹உளவியல் சிந்தனை
📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️ - 62 | 107770] ரே முகத்துடன் வாருங்கள். . உலா வ்வொருவருக்காகவும் முகங்களை மாற்றிக்கொள்ளாதீர்கள் . நீங்கள் மாற்றி பேசிய முகங்கள் சந்தித்துக் கொண்டால். உங்களுக்கு முகமே இருக்காது யாரிடமும் முகம் காட்ட.. 62 | 107770] ரே முகத்துடன் வாருங்கள். . உலா வ்வொருவருக்காகவும் முகங்களை மாற்றிக்கொள்ளாதீர்கள் . நீங்கள் மாற்றி பேசிய முகங்கள் சந்தித்துக் கொண்டால். உங்களுக்கு முகமே இருக்காது யாரிடமும் முகம் காட்ட.. - ShareChat
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் - ShareChat
00:13
#👉வாழ்க்கை பாடங்கள் #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️ #😇வாழ்க்கையின் எதார்த்தங்கள்
👉வாழ்க்கை பாடங்கள் - யாரையும் கேவலமாக நினைக்காதே ! காலம் எப்படி வேண்டுமானாலும் மாறும் புறக்கணிக்கப்பட்ட பலர் இந்த தான் உலகத்தையே உலுக்கி பார்த்தவர்கள் யாரையும் கேவலமாக நினைக்காதே ! காலம் எப்படி வேண்டுமானாலும் மாறும் புறக்கணிக்கப்பட்ட பலர் இந்த தான் உலகத்தையே உலுக்கி பார்த்தவர்கள் - ShareChat
#🙏ஆன்மீகம் #பத்தி #தெரிந்து கொள்வோம் #🙏கோவில்
🙏ஆன்மீகம் - ShareChat
00:26