#குட்டி தம்பிக்கு இன்று பிறந்தநாள்
#குட்டி தம்பிக்கு இன்று பிறந்தநாள்
#சித்தப்பாவின் பிறந்தநாள் கவிதை
இன்று பிறந்தநாள் கொண்டாடும் அபுதல்ஹாவுக்கு
ஷப்பீர் சித்தப்பாவின்.....அன்பு கவிதை
இந்த புதிய நாளில்
மீண்டும் ஒரு முறை பிறந்தாயென கவலைகளை மறந்து உற்சாகமாக பிறந்தநாளை கொண்டாட மனமார
வாழ்த்துகிறேன்.
AbuThalha.. பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
born again on this new day..! I sincerely wish you to forget your worries and celebrate your birthday with enthusiasm...
Happy Birthday...,......அபூதல்ஹா..
#சிந்தனை செய் மனமே
🤔 *சிந்தனை துளிகள்* Thought Drops 🤔
தேடாத ஒன்று தேடி வரும்போது,
*தேவை இருக்காது.
தேவையில்லாத போது தேடும் எதுவும்,
*தேவையாக இருக்காது.
தேவை என்ற போது கிடைத்து விட்டால்,
*தேடலும் இருக்காது..
இருக்கும்போது தேடாவிட்டால்,
*தேடியதே இருக்காது..!!*
When something unfound comes searching,
there will be no need. Anything searched for when not needed,
will not be a necessity. If obtained when needed, *there will be no search.. If you don't search when it's there,
there will be nothing to search for..!!
#முயற்ச்சியின் பலன்கள்
நீங்கள் கடும் முயற்சி செய்தும் ஒரு செயலில் தோற்றுவிடுகிறீர்கள் எனில்...
நீங்கள் வெற்றிக்கு தகுதியற்றவர் என்பதல்ல...
அந்த செயலை வேறு விதமாக முயற்சி செய்து மிக எளிமையாக வெற்றி பெறலாம் என்பதே உண்மை...
ஏனெனில்
வெற்றியை பெறுவதென்பது எளிதான ஒன்றே...
அதற்கான சிறந்த வழியை கண்டறிவதில் தான் உங்களின் திறமை அடங்கியுள்ளது...
#கனிவாக மகிழ்ச்சியாக இருங்கள்
எப்போதும்
கனிவாக
மகிழ்ச்சியாக
சக்தி வாய்ந்தவராக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள்
இதனால்,
எதிர்மறையான விஷயங்கள் உங்களை நெருங்கவே முடியாது..!!
Always be
*Kind - hearted*
Joyful*
Empowered*
Be firm in your resolve in this way.
As a result,
*Negative energies won't be able to reach you..!!*
*சிந்திப்போம் செயல்படுவோம்!*
#மழை வானம்
வானில் இருந்து பெய்யும் மழையானது,
தீவிரப் புயலோடு
பொழிந்துப் பயன் இல்லை,பாதிப்பு தான்...
இடையில் நின்று,
நின்று பொழிந்தாலும் பயன் இல்லை...
தேவை இருப்போருக்கு,
பொழிந்தால் மட்டும் தானே பயன்...
மழைக்குத் தெரியுமா?
ஆதலால், அனைவருக்கும் பெய்கிறது...
செய்கின்ற உதவிகளை,தேவையானவருக்கு
செய்து கொண்டே இரு...
வெற்றி நிச்சயம்!
உற்சாகமான வணக்கம்
#வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள்
டிசம்பர் 07, 1930*
உலகின் முதல் தொலைக்காட்சி விளம்பரம், அமெரிக்காவின் பாஸ்டனிலிருந்த, சோதனை ஒளிபரப்பு நிலையத்திலிருந்து ஒளிபரப்பப்பட்ட நாள்.
சிபிஎஸ் வானொலி நிறுவனத்திற்காகப் பதிவு செய்யப்பட்ட ஃபாக்ஸ் ட்ராப்பர்ஸ் இசை நிகழ்ச்சியின் ஒளிப்பதிவின் ஒரு பகுதியை ஒளிபரப்பும் செலவினை ஏற்ற (ஸ்பான்சர்) ஐ.ஜே.ஃபாக்ஸ் ஃபர்ரியர்ஸ் என்ற நிறுவனத்தின் இவ்விளம்பரத்தை, சோதனை ஒளிபரப்பில் ஒளிபரப்பியதற்காகவும், வானொலி நிகழ்ச்சியில் ஒலிபரப்பியதற்காகவும் இந்நிலையத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இதற்குப் பத்தாண்டுகள் கழித்தே, 1941 ஜூலை 01ல், அரசு அனுமதியுடன் தொலைக்காட்சி விளம்பரம் ஒளிபரப்பப்பட்டதால், அது முதல் விளம்பரமாகக் குறிப்பிடப்படுவதுண்டு.
விளம்பரம் என்பது இன்றைக்குச் சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிவிட்டது. அக்காலத்திலேயே, எகிப்தியர்கள் விற்பனைக்குப் பொருட்களிருப்பதை பேப்பிரஸ் தாளில் எழுதிவைத்தனர். கி.மு.11ம் நூற்றாண்டுக்கும் முன்னரே, சீனாவில் மிட்டாய் விற்க குழலூதியதே உலகின் முதல் ஒலி விளம்பரமாகும்.
#வாழ்க்கை ஒரு அஞ்சல் தலை
நீங்கள் எப்போதும் ஓர் அஞ்சல் தலையைப் போல் இருங்கள
இருங்கள் சென்று சேர வேண்டிய இடத்தை சென்றடையும் வரை
அந்த ஒரு விஷயத்தோடு ஒட்டியே இருங்கள்
அதாவது சில பொழுதாவது சோகப்படுங்கள்
ஆனந்தத்தின் அருமை
புரியும்
யாருக்காவது கண்ணீர் விடுங்கள்
புன்னகையின்
அருமை புரியும்
ஒரு நாளாவது பணம் இல்லாது ஊர் சுற்றுங்கள்
வறுமையின் கொடுமை தெரியும்
மாளிகை விட்டு மண்குடிசைப் பக்கம் போய் வாருங்கள்.
அன்றாடம் காய்ச்சியின் அழுகுரல் கேக்கும்
மொழி புரியாத தேசம் செல்லுங்கள்.
கல்வியின் அவசியம்
தெரியும்
அன்புக்குரியவர்களிடம் இருந்து விலகிப் பாருங்கள்
மரணத்தின் வேதனை
புரியும்
குற்றவாளிகளின் கதறல்கள் கேளுங்கள்
முன் கோபத்தின் பின்விளைவுகள் தெரியும்.
யாருக்கும் ஞானியாக இருக்க வேண்டாம்
மனிதனாக இருக்க முயற்சிப்போம்
#வாழ்த்தும் பண்பு
வாழ்த்தும் பண்பு.
யாரையும் தெரியாமல் கூட சபிக்காதீர்கள், மனதார வாழ்த்துங்கள்.
மற்றவர்களை மனதார வாழ்த்தும் போதெல்லாம், இறைவனும் உங்களை ஆசிர்வதிக்கின்றார்.
நமக்கு இடையூறு செய்பவர்கள் நம் வாழ்க்கை ஓட்டத்தை தடுத்து நிறுத்த நினைப்பவர்களிடம் மல்லுக்கு நிற்கக்கூடாது. வீண் வாதம் செய்து நேரத்தை வீணாக்குவதை விட நம் இலட்சியப் பாதையில் கவனம் செலுத்துங்கள். உங்கள் எதிரிகள் தான் உங்கள் எதிர்காலத்தைக் காட்டுகிறார்கள். அவர்கள் தான் உங்கள் சிகரத்தின் காவலாளிகள்.
வெற்றி பெற வேண்டும் என்று எண்ணுகிற எவரும் செய்ய வேண்டிய முதல் காரியம் வெற்றி பெற்றவர்களைப் பார்த்து பிரமித்து நின்று விடக்கூடாது. தோல்வியில் துவண்டு விழவும் கூடாது.
நம்மை நாமே உற்சாகப்படுத்திக் கொள்ள வேண்டும், எல்லாம் நன்மைக்கே என்று அடிக்கடி சொல்லிக் கொள்ளுங்கள்.
வெற்றி பெற்றால் எல்லோருடனும் சேர்ந்து பகிர்ந்து கொள்ளுங்கள்.
இவைகள் நம் வாழ்வை வளமாக்கி வெற்றிப் படியில் நிற்க வைக்கும்
#எண்ணங்களுக்கும், உணர்வுகளுக்கும்
சிறந்த துணை என்பது உடனிருப்பதோ, உணவளிப்பதோ,உடையளிப்பதோ கிடையாது.
எண்ணங்களுக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளிப்பதாகும்.
உயர்ந்த எண்ணம் உள்ளோருடன் நட்பு கொண்டோர்க்கு ஒருநாளும் தனிமையில்லை.
எண்ணங்கள் நன்றாக இருந்தால் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் நன்றாக அமையும்.
நீங்கள் எப்படி இருந்தாலும் எப்படி வாழ்ந்தாலும், உங்கள் எண்ணம் உயர்வாக இருந்தால் போதும். ஒரு நாள்
உங்கள் எண்ணமே உங்கள் உயர்வுக்கு காரணமாக அமையும்.
மகிழ்ச்சியான ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்....
#சண்டை
எவ்வளவு வேண்டுமென்றாலும் கோவித்து சண்டையிட்டுக்கொள்ளுங்கள்...
ஆனால்..
நாளின் முடிவில் உறுதியெடுத்துக்கொள்ளுங்கள்...
நேசித்தவர்மீதும்... நேசிப்பவர்மீதும்...
கொண்ட அன்பு சண்டையைவிட முக்கியம் என்று ....
அழகான பெட்டமுகிளாளம் கிராமத்தில் மலரும் நினைவுகள் -2021













