M.K.Stalin
@mkstalin
Chief Minister of Tamil Nadu | President of the DMK | Belongs to the Dravidian stock
🇨🇦 #Canada-வின் #Winnipeg நகரில் நடந்து முடிந்த 🚓🚒👮🏽♀ #WPFG2023-இல் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு தங்கம் 🥇, வெள்ளி🥈, வெண்கலம்🥉என மூன்று பதக்கங்களைக் குவித்துள்ள தலைமைக் காவலர் லீலாஸ்ரீ அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்!
#WomenPower #செய்தி
மக்கள் திரளால் நிரம்பி வழியும் சென்னையின் வணிக மையமான தியாகராய நகரின் பேருந்து நிலையத்தை மாம்பலம் இரயில் நிலையத்துடன் இணைக்கும் ஆகாய நடைபாதையினை (Skywalk) திறந்து வைத்தேன்.
நகரும் படிக்கட்டுகள், மின்தூக்கி, மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த நடைபாதை நெரிசலைக் குறைப்பதோடு தியாகராய நகரின் வணிகம் மென்மேலும் பெருகவும் வழிவகுக்கும்!
தியாகராய நகரின் புதிய அடையாளமாகத் திகழும்! #செய்தி
சுயமரியாதை, பகுத்தறிவு, இனமானம், சமூகநீதி, மாநில சுயாட்சி உள்ளிட்ட கருத்தியல்களால் தமிழ்நாட்டை வளமாக்க "தம்பி" என தட்டியெழுப்பி திமுக-வை உருவாக்கினார் அண்ணா! "உடன்பிறப்பே" என்றார் கலைஞர்!
நம் கொள்கையில் வென்றிட உங்களில் ஒருவன் அழைக்கிறேன் #உடன்பிறப்புகளாய்_இணைவோம் #JoinDMKonline #செய்தி
எங்கள் தாய்மொழியைத் தள்ளிவைக்கச் சொல்லும் #FSSAI, தாய்மொழி காக்கும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்!மக்களின் உணர்வுகளை மதியுங்கள்! #StopHindiImpositionகுழந்தையைக் கிள்ளிவிட்டுச் சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம்! தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்துவிடுவீர்கள்! #செய்தி
சொன்னதைச் செய்வோம்! சொல்லாமலும் செய்வோம்!
Golden Hours-இல் மருத்துவ உதவி கிடைக்காமல் யாரும் பாதிக்கப்படக்கூடாதென #இன்னுயிர்காப்போம் திட்டம் தொடங்கினோம். இன்று அரிகிருஷ்ணன் என்பவர் 1,50,000-வது பேராகப் பயனடைந்துள்ளார்.
அத்தனை குடும்பங்கள் காக்கப்பட்ட நெகிழ்வோடு பகிர்கிறேன். #செய்தி
#TheElephantWhisperers #AcademyAwards பெற்று, நம் வனத்துறை செயல்பாடுகளை உலகறிய செய்துள்ளது.
திருமிகு.பொம்மன் - பெள்ளியைப் பாராட்டி ரூ.1 லட்சம் வழங்கி, தெப்பக்காடு & கோழிகமுத்தி யானைகள் முகாம் 91 பணியாளர்களுக்கு தலா 1 லட்சமும், வீடுகள் கட்ட ரூ.9.10 கோடி நிதியுதவியும் அறிவித்தேன். #செய்தி
பொதுத்தேர்வை எதிர்கொள்ளவுள்ள என் பேரன்புக்குரிய மாணவர்களே! #AllTheBest #செய்தி
அடுத்தடுத்து மண்டல அளவிலான #களஆய்வில்_முதலமைச்சர் திட்டத்துக்குச் சென்ற நிலையில், இன்று #KolathurVisit!
என் கொளத்தூர் மக்கள் அளித்த வாஞ்சையான வரவேற்பில் அகம் மகிழ்ந்தேன்!
அந்த மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கிக் கொள்ளும் விதமாக, பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு சிகிச்சைப் பிரிவுகளுடன் ரூ.71.81 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள சிறப்பு மருத்துவமனைக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினேன்.
அடுத்து, ரூ.3.49 கோடியில் நிறைவுற்ற பணிகளைத் திறந்து வைத்தும், ரூ.1.14 கோடியிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.61.98 கோடியில் நடைபெறும் இரயில்வே மேம்பாலப் பணிகளைப் பார்வையிட்டும் நலத்திட்ட உதவிகள் வழங்கினேன். #kolathur visit
மூத்த இனமாம் நம் தமிழினத்தின் பெருமையை விளக்கும் கீழடி அருங்காட்சியகத்தைத் திறந்துவைத்தேன்.
கீழடியின் வயது 2600. தோண்டத் தோண்டப் புதையல்கள்! அனைத்தும் அருங்காட்சியகத்தில்!
ஈராயிரம் ஆண்டு வரலாற்றின் சின்னம் கீழடி! அனைவரும் வந்து பாருங்கள்.
வரலாறு படிப்போம்! வரலாறு படைப்போம்! #செய்தி
Migrant workers in Tamil Nadu are as safe as in their native states and my government is steadfast in protecting their rights.
I warn of strict action against the Anti-Indian forces spreading hatred with the vile intention of disturbing the peace and harmony of our country. #செய்தி