
⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
@jai_sree_ramm
🕉 இறைவன்⚛️ இருக்க✡️ பயமேன்🕉
வீரபுருஷோத்தமனின் வனவாசகாலத்தில் நடந்த ஒருசம்பவம்!
..............................................................................
அனைவருக்கும் எனது வினீதம்கூடிய அனேகநமஸ்காரங்கள்!
வனக்காடுகளில் இராமலக்ஷமண குமாரன்மார்களும் சீதையும் சஞ்சரிக்கின்றார்கள்!
இப்போது புனிதமான கங்காநதி தென்படுகிறது.
கங்கையை கடந்துதான் அக்கரைக்கு செல்லவேண்டும்
இராமலக்ஷமண குமாரர்கள்.
அப்போதுதான் குகன் முதல்முதலாக வீரபுருஷோத்தமனை சந்திக்கின்றார்.
இராமரும் முதல்முதலாக குகனை சந்திக்கின்றார்!
இருந்தாலும் குகன் என்கிற ஓடத்தை ஒட்டுகின்ற ஓடக்காரனு க்கு இந்த நிலைமை வீரபுருஷோத்தமனுக்கு வந்தது ஏன்?
என்பதையெல்லாம் அறிந்திருந்தான்!
ஒரு கம்பீரமாக அயோத்திராஜனாக ராஜஆட்சியை நடத்திகொண்டு இருக்கவேண்டியவர்!
இங்கே மரவுரி தரித்துகொண்டு நடப்பதைபார்த்து அந்த ஓடக்காரனால் அந்த கோலத்தை பார்த்து சகிக்கமுடியாமல் அழுகின்றான்!
குகன் கேட்கின்றான்!
அல்லயோ! மகாபிரபுவே!
என்னால் ஏதாவது சிறிய உதவி செய்யமுடியுமா? தாங்களுக்கு! என்றான்!
இந்த கங்காநதியை கடக்கவேண்டும்!
அதற்கு ஒரு ஓடம் வேண்டும்!
ஒரு ஓடக்காரனும் வேண்டும்!
குகன் உடனே அருகேயிருந்த மற்றொரு ஓடக்காரன் ஆகிய கேவத் என்பவனை அழைக்கின்றார்!
கேவத்!
இதோ நிற்கின்றாரே!
இவர்தான் அயோத்தியின் வீரபுருஷோத்தமன்
அருகே இருக்கும் வனிதை அவரின் கெட்டியோளான சீதைபிராட்டி!
கூடவே இருக்கின்ற யௌவனன்
உடன்பிறந்தோன் இலக்ஷ்மணன்!
அவர்களை அக்கரையில் சேர்க்கவேண்டும் என்றான் குகன்!
உத்திரவு குகனே!
சொன்னதுபோலவே செய்கின்றேன்!
அதற்குமுன்னர் வீரபுருஷோத்தமன் திருப்பாதங்களை நான் கழுவவேண்டும் என்றான் கேவத்!
இல்லையில்லை!
அக்கரையில் சேர்த்தபின்னர் பாதபூஜை செய்துகொள்ளலாம் என்றான் குகன்!
கேவத்! மன்னிக்கவேண்டும்!
என் ஓடத்தில் அவர்களின் பாதங்கள் வைப்பதற்கு முன்னே பாதங்களை கழுவித்தான் ஓடத்தில் ஏற்றமுடியும்!
அவர்களின் பாதங்களில் ஒரு மண் ஒட்டியிருந்தாலும் என்னால் ஓடத்தில் அக்கரை சேர்க்கமுடியாது என்றான் கேவத்!
குகனுக்கு கடும்கோபம்கொண்டான்!
அவனின் கோபத்தை உணர்ந்துகொண்ட கேவத்!
அவனை நோக்கி சொன்னான்!
குகனே!
உன்னுடை கோபத்தை உணர்ந்துகொள்கின்றேன்!
இருந்தாலும்!
இந்த மகாபிரபு வீரபுருஷோத்தமன்
காலை வைத்தால் கல்லும் பெண்ணாகும்!
அகலிகை என்கிற ஸ்த்ரீ கல்லாகிபோனாள்
அதன்பிறகு இவரின் திருப்பாதங்களை கொண்டு அவள் மறுபடியும் பெண்ணானாள்!
இந்த தாரீத்யஜீவிதம் நடத்திகொண்டு இருக்கும் எனக்கும் அந்த சம்பவம் அறிந்துள்ளேன்!
ஒருவேளை! என்னுடைய படகும் ஏதாவது முன்ஜென்ம பாபகர்ம்மங்கள் செய்து இந்த புனிதகங்காநதியில் ஓடமாக இருக்கவேண்டும் என்று விதிக்கபட்டு இருக்கலாம்!
இந்த ஓடமும் ஒரு பாபவிமோசனம் வேண்டி காத்திருக்கலாம்!
இவரின் பாதங்கள் என் ஓடத்தின்மீது பட்டு பாபவிமோசனம் பெற்று ஒரு பெண்ணாக மாறிவிட்டால்!
அந்த பெண்ணையும் காப்பாற்றவேண்டும்!
ஏற்கனவே ஒரு கெட்டியோளோடும் ,பிள்ளைகளோடும் கூடி தாரித்யஜீவிதம் நடத்திகொண்டு இருக்கும் இவளை எவ்வாறு காப்பாற்றமுடியும்!
அதுமட்டுமில்லாமல்!
இந்த ஓடம்தான் என் குடும்பத்திற்கு ஜீவாதாரம்!
ஒரு பாபவிமோசனம் கொண்டு இந்த ஓடத்தையும் நஷ்டப்பட்டுபோனால் ஜீவாதாரத்திற்கு என்ன செய்யமுடியும்?
ஆகையினால் தான் வீரபுருஷோத்தமன் திருப்பாதங்களை நன்றாக கழுவி துடைத்த பின்னர்தான் என்னால் ஓடத்தில் ஏற்ற முடியும்! என்றான் கேவத்!
அது தனூர்மாதம்!
கடும்குளிர்காலம் அதிகாலையில்! இந்த சம்பவம் நடக்கின்றது!
அந்த நேரத்தில் அருகேயிருக்கும் குடிசையிலிருந்து கேவத் கெட்டியோளும் வந்துவிட்டாள்!
இராமலக்ஷமண குமாரர்களும் ,சீதையும் அவனின் அக்கறை பேச்சு! பக்தி பயம் ஆகியவற்றை பார்த்து சந்தோஷிக்கின்றார்கள்!
இராமரின் திருப்பாதங்களை கழுவ சம்மதிக்கின்றார்!
கேவத்தும் அவனின் கெட்டியோளும் சேர்ந்துகொண்டு வீரபுருஷோத்தமன் திருப்பாதங்களை கழுவுகின்றனர்!
கங்காநதியில் நீரை எடுத்து இராம பாதங்களை நீராட்டு நடத்திவிட்டு நன்றாக அவரின் பாதங்களை துடைத்துவிட்டு அக்கரையில் சேர்க்கின்றான் கேவத்!
அக்கரையில் அவனின் பயபக்தியோடு கூடிய சேவனம் கண்டு சந்தோஷித்த சீதை ஒரு மோதிரத்தை சன்மானமாக கொடுக்கின்றாள்!
இருந்தாலும் கேவத் அதை ஏற்க மறுக்கின்றான்!
அல்லயோ! தேவியே!
நான் வீரபுருஷோத்தமன் திருப்பாதங்களை நீராட்டு நடத்தியதே முன்ஜென்ம புண்ணிய பாக்கியம்!
அதற்காக சன்மானம் கொடுத்துவிட்டால் அந்த புண்ணியபாக்கியத்தை சக்தி குறைந்துவிடும் என்றான் கேவத்!
சீதை சொன்னாள்!
அப்படியென்றால்
தாங்கள் எங்களையெல்லாம் ஓடத்தில் ஏற்றிகொண்டதற்கு கூலியாக வாங்கிகொள்ளுங்கள் என்றாள்!
அதற்கும் மறுத்துவிடுகின்றான் கேவத்!
அவனின் பேச்சு அனைவரையும் புரியாத சூழ்நிலை ஆகின்றது!
அதை உணர்ந்துகொண்ட கேவத்!
அல்லயோ! மகாபிரபுவே!
ஒரு வண்ணான் இன்னொரு வண்ணானின் அழுக்கு வஸ்திரங்களை துவைப்பதற்கு கூலி வாங்கமாட்டான்!
அதேபோல்தான் ஒரு நாவிதர் இன்னொறு நாவிதருக்கு சவரம் செய்துவிட்டாலும் கூலி வாங்கமாட்டான்!
அதேபோல்தான்!
ஒரு ஓடக்காரன் இன்னொரு ஓடக்காரனை யாத்தை செய்துவித்தால் அதற்கும் கூலி வாங்கமாட்டான்!
அது தொழில் தர்ம்மம்!
மகாபிரபுவே!
தாங்களும் என்னைபோலவே ஓடக்காரன் தான்!
உங்களின் ஓடம் பெரியது!
என்னிடம் சிறியது!
நான் இந்த ஓடத்தைகொண்டு கரையை கடக்க உதவிசெய்கின்றேன்!
அதற்கு கூலியும் வாங்குகின்றேன்!
தாங்களோ! மனுஷ்யன்மார்கள் செய்கின்ற பாபகர்ம்மங்கள் அவர்களின் பாபகர்ம்மங்களில் இருந்து கரையை கடக்க தாங்களின் இராமநாமம் உதவி செய்கின்றது!
ஜென்மஜென்மாந்திரம் செய்த பாபகர்ம்மங்கள் விமோசனம் ஆகின்றது! தாங்களின் நாமம் ஜெபிக்கின்றோர்களுக்கு!
ஆகவே மனுஷ்யன்மார்கள் செய்கின்ற பாபகர்ம்மங்களிலிருந்து விமோசனம் நல்கி புண்ணிய அக்கரைக்கு கொண்டு செல்கின்ற நீங்களும் என்னைபோலவே தாங்களும் ஒரு ஓடக்காரன் தானே!
ஆகவே ஓரு ஓடக்காரன் மற்றொரு ஓடக்காரனிடம் கூலி வாங்குவது,
நியதி அல்லவே!
என்று சொல்லி வீரபுருஷோத்தமனை இரு கரம்கூப்பி நமஸ்கரிக்கின்றான் .
அந்த ஓடக்காரன் இராமதாசன் கேவத்!
இராமஜெயம்!
என்று சொல்கின்றவர்களுக்கு
ஏது பயம்!
இராம்! இராம்! இராம்!
இவன்
ஸ்னேகம்கூடிய
அஜய்குமார் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏பெருமாள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🙏ஜெய் ஆஞ்சநேயா
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏பெருமாள் #✨கடவுள் #✡️ஜோதிட பரிகாரங்கள்
செல்வம் நிலைக்க : 24
1,ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல்படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து கொடுக்க/வாங்க வேண்டும்.
2,செல்வம் நிலைக்க, விருத்தி அடைய, பணம் கொடுக்கல் வாங்கல், செவ்வாய் கிழமை, செவ்வாய் ஹோரையில் நடப்பது உத்தமம். கொடுப்பவருக்கு பணம் திரும்பக் கிடைக்கும். வாங்குபவரால் பணத்தை திரும்பக் கொடுக்க இயலும். திரும்ப கொடுப்பதும் செவ்வாய் ஹோரையில் நடப்பது சிரேஷ்டம்.
3,வாசற்படி, உரல், ஆட்டுக்கல்,அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.
4,இரவு நேரங்களில் பால், மோர், தண்ணீர் அடுத்தவர்கள் எடுத்து செல்ல அனுமதிக்கக் கூடாது.
5,எரியும் குத்துவிளக்கை தானாக அணையவிடக்கூடாது, ஊதியும் அணைக்ககூடாது. புஷ்பத்தினால் அணைக்கவேண்டும்.
6,,வீட்டில் யாரையும் சனியனே என்று திட்டக்கூடாது. எழவு என்றும் கூறக்கூடாது.
7,அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்தக்கூடாது.
துணிமணிகளை உடுத்திக்கொண்டே தைக்கக் கூடாது.
உப்பை தரையில் சிந்தக்கூடாது. அரிசியை கழுவும் போது, தரையில் சிந்தக்கூடாது.
8,உங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் பெருக வெற்றிலை, வாழையிலை இவைகளை வாடவிடக்கூடாது. வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது. சுண்ணாம்பு வெற்றிலையை போடக்கூடாது.
9,,ராம நாமம் உச்சரிக்கப்படும் இடத்திற்கு அனுமன் தேடி வந்துவிடுவான். அங்கு அவனை கூப்பிடவேண்டிய அவசியம் கூட இல்லை. அதே போல, ஸ்ரீமன் நாராயணனின் பெருமை பேசப்படும் இடத்தில், அவன் பாடல்கள் ஒலிக்கும் இடத்தில் அன்னை திருமகள் தானாகவே வந்துவிடுகிறாள். ஆகவே, இல்லந்தோறும், காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலிப்பது அவசியம். அந்த வீடுகளில் செல்வச் செழிப்பு தாமாகவே வந்துவிடும்.
10,வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும். விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு. லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது நெல்லி. நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும் அணுகமுடியாது. நெல்லிமரத்தடியில் கிடைக்கும் தண்ணீர் உவர் தன்மையில்லாமல் மிகவும் சுவையாக இருக்கும்.
11,சுமங்கலிகள், பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் இவை அனைத்தும் லக்ஷ்மிக்கு மிகவும் பிடித்தவை.
12,தினசரி துளசி மாடத்திற்கு விளக்கேற்றி மும்முறை வலம் வர வேண்டும்.
13,பசுக்களுக்கு ஒரு பழம் வாங்கிக் கொடுத்தாலே கோடி புண்ணியம் தேடி வரும் எனும்போது அவற்றுக்கு தீவனங்கள் வாங்கி தந்து போஷித்தால்? பசுக்களிடம் குபேரன் குடிகொண்டிருக்கிறான். கோமாதா பூஜை குபேர பூஜைக்கு சமம்.
14,செல்வம் நிலைத்து நிற்க, நமது வீடுகளில் வெள்ளை புறாக்கள் வளர்க்கலாம்.
15,சங்கு, நெல்லிக்காய், பசு சாணம், கோஜலம், தாமரைப்பூக்கள், சுத்தமான ஆடைகள் வீட்டில் இருப்பது சுபம்.
16,காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப் படம் இவற்றை பார்க்கவேண்டும்
17 தினசரி விளக்கேற்றுவது சிறப்பு. செவ்வாய் மற்றும் வெள்ளிகளில் 5 முகம் கொண்ட விளக்கேற்றுவது இன்னும் சிறப்பு.
18 ,விளக்கை அமர்த்துதல் அல்லது மலையேற்றுதல் என்று தான் சொல்லவேண்டும். ‘அணைப்பது’ என்ற வார்த்தையை உபயோகிக்கவே கூடாது. அது அமங்கலச் சொல்லாகும்.
19,விளக்கை தானாக மலையேற விடக்கூடாது, ஊதியும் அமர்த்தக்கூடாது. புஷ்பத்தினாலும் மலையேற்றக்கூடாது. அப்போ எப்படித் தான் சார் மலையேற்றுவது என்று தானே கேட்க்கிறீர்கள்? அப்படி கேளுங்க…. தீபத்தை எப்போதும் கல்கண்டை கொண்டு தான் அமர்த்தவேண்டும். சரியா?
20,வீட்டில் சண்டை, சச்சரவு இருக்கக்கூடாது. அமங்கலச் சொற்கள் பேசவே கூடாது.
மாலை ஆறுமணிக்கே திருவிளக்கு ஏற்றிவிட வேண்டும்.
ஊனமுற்றவர்களுக்கோ, ஏழை மாணவர்களுக்கோ முடிந்த தர்மத்தை செய்யுங்கள்.
21எந்த வீட்டில் சாப்பாட்டிற்கு ருசியாக ஊறுகாய் இருக்கிறதோ அந்த வீட்டில் தரித்திரம் இருக்காது. எனவே உங்கள் வீட்டில் எப்போதும் பலவித ஊறுகாய்கள் குறைவின்றி இருக்கட்டும்.
22,எந்த வீட்டில் பெண்கள் கௌரவமாக நடத்தப்படுகிறார்களோ, எந்த வீட்டில் பெண்கள் சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்களோ அங்கு திருமகள் குடியேறுவாள்.
23,வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோஷமும் பெருகும்.
24,எந்தப் பொருளையும் இல்லை, இல்லை எனக் கூறக் கூடாது. இந்தப் பொருள் வாங்க வேண்டியதிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். #✨கடவுள் #✡️ஜோதிட பரிகாரங்கள் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #📸பக்தி படம்
#✡️ஜோதிட பரிகாரங்கள் #🔍ஜோதிட உலகம் 🌍 #✨கடவுள் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶
#🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #✡️தோஷ பரிகாரங்கள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏🏼ஓம் நமசிவாய
🌹சபரிமலை ஶ்ரீ ஐயப்பன் 17
*********************************
🚩நேற்றைய தொடர்ச்சி...(இறுதி பகுதி)
🌹ஜோதிவடிவில் காட்சி மகரசங்கராந்தி:
***********************************************
அங்கு குடியிருந்த அனைவரும் தேவர் பெரு மக்களையும், மணிகண்டனையும் மற்றும் மன்னரையும் பார்த்தனர்.
பின்பு மணிகண்டன் தன் பெற்றோரிடம் தனது பிறப்பு பற்றிய ரகசியங்களையும், அவதார நோக்கத்தையும் எடுத்துரைத் தார். மணிகண்டன் கூறிய யாவற்றையு ம் கேட்ட மன்னனும் மகாராணியும் என்ன பாக்கியம் செய்தேனோ? என்று தனது கரங்களை கூப்பி மணிகண்டனின் பாதங்க ளில் விழுந்து வணங்கினார்கள்.
உன்னை இறைவன் அளித்த குழந்தை என்று நினைத்தேன். ஆனால், இறைவ னே எங்களு க்கு குழந்தையாக அவதரித் திருக்கிறார் என்ப தை அறியும்போது இந்த பிறவியில் நாங்கள் செய்த புண்ணியமே என்று தங்களது மனதில் மனம் மகிழ்ந்தனர்.
சிறிது நேரத்திற்குப் பின்பு நிதானத்திற் கு வந்த பந்தள மன்னன், எனக்கு இன்னு ம் ஒரு கடமை மீதம் உள்ளது. அது என்வெ ன்றால் இந்த பந்தள தேசத்திற்குப் தங்களை நான் மன்னனாக பட்டம் சூட்ட வேண்டும் என்பதே அந்த கடமையாகும். அதை உடனே ஏற்பாடு செய்கின்றேன் என்று கூறினார். அவர் கூறவே, தாயும் அதை விரைவாக ஏற்பாடுகளை தொடங்குங்கள் என்று கூறினார்.
மன்னிக்க வேண்டும் தந்தையே, என்னுடைய பிறவி நோக்கமானது இனிதே நிறைவுற்றது. இனி நான் தங்களுடன் இருக்க போவதில்லை என்றும் நான் புறப்படுவதாக கூறினார் மணி கண்டன்.
ஆனால், பந்தள மன்னன், மகனே இனி என்னால் உன்னை காண இயலாதா? என்று மனமுடைந்து தன் மகனிடம் கேட் டார். இல்லையேல் வருடத்தில் ஒருமுறை யாவது நான் உன்னை காண வேண்டுமே அதற்காவ து தாங்கள் எனக்கு வரம் அளிக்க வேண்டுமெ ன்று வேண்டினார்.
தன்னை வளர்த்த தந்தையின் வேண்டு கோளுக்கிணங்கி அவருக்கு அருள் பாவித்தார். நான் வருடத்தில் வரும் மகர சங்கராந்தியன்று ஜோதி வடிவத்தில் உங்களை காண வருவேன் என்று வாக்குறுதி அளித்தார்.
🌹காட்சி அளித்தல் :
***********************
இனி வருடத்தில் ஒருமுறை நான் தங்களுக்கு காட்சியளிப்பேன் என்றும், இனி வரும் நாட்க ளில் நான் மக்களை நல்வழிப்படுத்தவும் அவர்களுக்கு அருள் பாவிப்பதும் தானே முறையா கும். இந்த அகிலத்திற்கும், அகிலத்து மக்களு க்கும் இந்த பலனானது அடைய வேண்டும் அல்லவா? என்று தன் தந்தையிடம் உரைத்து எனக்கென்று தங்களின் ராஜ்ஜியத்தில் ஓரி டம் வேண்டும் என்று கூறினார். நான் அங்கிரு ந்து அனைத்து ஜீவராசிகளையும் காப்பேன் என்று கூறினார்.
மன்னனும் இந்த ராஜ்ஜியமே உன்னுடை யது என்றும், இந்த ராஜ்ஜியத்தில் எந்த பகுதி வேண்டுமோ? அந்த பகுதியை நீ எடுத்துக்கொள்ளலாம் என்றும் கூறினார் ஆனால், எனக்கு ஒரு வரம் வேண்டும் என்றும் கூறினார்.
அதாவது பட்டாபிஷேகம் எப்போது நிகழ் ந்தாலும் அதற்கான ஆபரணங்களை தயார் செய்து வைத்திருப்பதாகவும், அவற்றை எல்லாம் வருடத்திற்கு ஒரு நாளேனும் அணிந்து கொண்டு சிம்மாச னத்தில் அனைவருக்கும் காட்சி அளிக்க வேண்டும். இதுவே எனது, சின்ன விருப்பமாகும். இதை நிறைவேற்றித் தருவாயா? மணிகண்டா என்று கேட்டார்.
🌹இடத்தினை தேர்ந்தெடுத்தல் :
*************************************
மணிகண்டனும் அவ்விதமே ஆகட்டும் தந்தை யே என்று கூறினார். தனக்கான இடத்தை தனது ராஜ்ஜியத்திலிருந்து தேர்ந்தெடுக்க தொடங்கினார்.
அதாவது ஒரு மலையின் மீது இருந்து தனது வில்லினால் ஓர் அம்பினை எய்தார். அந்த அன்பு சென்றடையும் இடத்தில் எனக்கு ஒரு ஆலயம் நிறுவ வேண்டும் என்றும் கூறினார். அந்த ஆலயத்தில் இருந்து என்னை விரதமிரு ந்து காண வரும் பக்தர்களுக்கு காட்சிய ளிப்பேன் என்று தனது தந்தையிடம் கூறினார்.
அம்பு காட்டிய இடத்தை மணிகண்டனும் மன்ன னும் பார்த்தனர். பின்பு பந்தள மன்னன் அவ்விடத்தை வணங்கி, அவ்வி டத்தில் ஆலய ம் எழுப்ப தொடங்கினார். பின்பு மணிகண்ட னை அவ்விடத்தில் பார்த்தபோது அவர் அங்குஇல்லை. மணி கண்டன் தனது அவதார நோக்கத்தை முடித்த பின்பு சிவ-விஷ்ணுவுடன் ஒன்றிணைய புறப்பட்டிருந்தார்.
🌹ஆலயம் எழுப்புதல் :
************************
மணிகண்டன் இருக்கும் ஆலயத்தை எவ்விதம் அமைப்பது என்பது பற்றிய சிந்தனையில் ஆழ்ந்தார் மன்னன். எப்படி வடிவமைப்பது? எதன் அடிப்படையில் அமைப்பது என்று புரியாமல் குழம்பிய மனநிலையில் இருந்த பொழுது ஒரு அசரீரி ஒன்று உருவானது.
அந்த அசரீரி மூலம் மணிகண்டன் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கும் ஆலயமானது இவ்விடத்தில் எவ்விதம் உருவாக வேண்டும் என்றும், அந்த ஆலயத்தில் பதினெட்டு படிகளு ம் அமைத்தல் வேண்டும் என அசரீரி கூறியது.
🌹படிகளின் விளக்கம் :
**************************
மன்னரோ... ஆலய அமைப்பை பற்றி நன்கு அறிந்து கொண்டார். இருப்பினும் அந்த பதினெட்டு படிகளின் விளக்கம் யாதென்று அந்த அசரீரியிடம் கேட்க தொடங்கினார். அசரீரியோ அந்த படிகளி ன் விளக்கத்தைப் பற்றி எடுத்துரைக்க துவங்கியது.
இந்த பதினெட்டு படிகள் ஒவ்வொன்றும் ஒரு பொருளைக் குறிக்கும் என தெரிவி த்து அதை பற்றி கூற துவங்கியது.
🚩முதல் படி கண்களை குறிக்கும். இது நல்லதை மட்டுமே பார்க்க வேண்டும்.
🚩இரண்டாம் படி மூக்கை குறிக்கும். சுத்தமான காற்றை மட்டும் சுவாசிக்க வேண்டும்.
🚩மூன்றாம் படி காதுகளை குறிக்கும். நல்ல வார்த்தைகளைக் கேட்க வேண்டும்.
🚩நான்காம் படி வாயைக் குறிக்கும். நல்ல சொற்களைப் பேச வேண்டும்.
🚩ஐந்தாம் படி உணர்வை குறிக்கும். எப்போதும் மணி மாலையை மட்டுமே தொட வேண்டும்.
🚩ஆறில் இருந்து பதின்மூன்று படி வரை உள்ள எட்டு படிகளும், அஷ்டரகஸ் என்பதைக் குறிக்கும். இது காமம், குரோதம், பேரார்வம், மோகம், கர்வம், போட்டி, பொறாமை, தற்பெ ருமை ஆகியவற்றைக் குறிப்பதாகும்.
🚩பதினான்காம் படி சாத்வீகம் என்பதையும், பதி னைந்தாம் படி ராஜஸம் என்பதையும், பதினா றாம் படி தாமஸம் என்பதையும் குறிக்கும்.
இம்மூன்றும் மூன்று குணங்கள் ஆகும். சோம் பலை விட்டு விட்டு, ஒருவர் சுறுசுறுப்புடன் இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கக்கூடி யது இந்த மூன்று படிகள் என்றும், பதினேழாம் படி வித்யா என்பதைக் குறிக்கும். வித்யா என்றால் அறிவு ஆகும்.
🚩பதினெட்டாம் படி அவித்யா என்பதைக் குறிக் கும். அதாவது மோட்சத்தைப் பெற வேண்டும் என்பதைக் குறிக்கும்.
இந்த பதினெட்டு படிகளின் தத்துவத்தை அறி ந்ததும் மிகவும் மகிழ்ச்சி கொண்டா ர் மன்னன். பின்பு ஆலயத்தில் எவ்விதம் கருவறையில் மணிகண்டனின் விக்கிர கத்தை அமைப்பது என்று கேட்டார்.
அதற்கு அசரீரியோ காலம் கடந்த பின் முனிவ ர் ஒருவரால் மணிகண்டனின் விக்கிரகம் ஆலயத்தை வந்தடையும் என்று கூறியது.
🌹ஆலயப் பணி நிறைவுறுதல் :
************************************
அசரீரி கூறியபடியே மன்னனும் ஆலயத் தை கட்டத் தொடங்கினார். ஆலயத்திற்கு தேவை யான அனைத்து பணிகளும் விரைவாக செய்யப்பட்டு ஆலயப்பணி நிறைவடையும் காலமும் வந்தது. காலம் முடிய முடிய மன்னனு க்கோ ஆலயத்தில் மணிகண்டனின் விக்கிர கம் எவ்வடிவில் வருமோ என்று ஒரு தயக்கம் அவரின் மனதில் இருந்து கொண்டே இருந்த து. ஆலயமும் முழுமையாக கட்டப்பட்டு பிரதி ஷ்டைக்காக காத்து கொண்டிருந்தது.
🌹விக்கிரக பிரதிஷ்டை :
*****************************
யாருமே எதிர்பாராத விதமாக மணிகண் டனி ன் விக்கிரகத்தை வடிவமைத்து அந்த ஆலயத் திற்கு கொண்டு வந்தார் பரசு ராமர். இம்மலை யை உருவாக்கிய பரசுராமர் கரங்களிலேயே இம்மலையி லிருந்து அருள்பாவிக்கும் மணிகண்டனி ன் விக்கிரகம் வருவதை அறிந்த மன்னனுக்கோ எல்லையற்ற ஆனந்தம்.
நம் கண் எதிரே பல யுகங்கள் கடந்து, பல வருடங் க்ள் கடந்து மக்களுக்கு அருள் பாவிக்கும் ஒரு புண்ணிய ஷேத்திரம் உருவாகிக் கொண்டிரு ப்பதை எண்ணி மனதில் ஆனந்தமும் மகிழ்ச்சியும் அடை ந்தார் தனது பிறவிப்பலனை முழுமை யாக இன்று நிறை வேற்றி விட்டோம் என்று மனநிறைவு கொண்டார்.
இரண்டு கால்களையும் குத்திட்டு, யோக நிலையில் உட்கார்ந்திருந்த படி தத்வமஸி என்னும் முத்திரையைக் காட்டியப்படி மணிக ண்ட சுவாமியின் விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்து அருளினார் பரசுராமர்.
வருடா... வருடம்... தனது தந்தையிடம் அளித்த வாக்குறுதியின்படி மகர சங்கராந்தி தினத்த ன்று ஜோதி வடிவில் இன்றளவும் தனது பக்த ர்களை காண வந்து கொண்டிருக்கின்றார் ஐயப்பன்.
அனைவருக்கும் ஐயனே, சாஸ்தாவே என்று மணிகண்டனை பலவிதமாக துதி த்து அர்ச்ச னை செய்து மணிகண்டன் என்னும் திருநாம த்துடன் ஐயப்பன், சாஸ்தா என பல்வேறு நாமங்களால் பின்னாளில் அழைக்கப்பெற்று கலியுக த்தில் இன்றும் மனதார விரதமிருந்து தன்னை காண வரும் பக்தர்களுக்காக காட்சி யளித்து அருள்பாலித்து வருகிறார்.
சபரி பீடத்தில் தர்ம சாஸ்தாவாகவும், மணிக ண்டனாகவும், ஐயப்பனாகவும் அமர்ந்து இன்ற ளவும் நம் மனம் என்னும் பீடத்தில் அமர்ந்து கொண்டிருக்கிறார். ஐயன் ஐயப்பனாக, மணி கண்ட சுவாமி யாக, தர்ம சாஸ்தாவாக, சபரி கிரிவாசனாகவும் அருள் பாவிக்கிறார்.
நாமும் ஐயனை வழிபடுவோம். ஐயனின் அருளைப்பெற்று வாழ்க்கையில் மகிழ்வு டன் வாழ்வோம். என்றும் மனநிறைவுடன் வாழ மணிகண்டனின் பேரருள் நமக்கு எப்போதும் துணை நிற்கட்டும்.
🌹சுபம்..🙏🙏🙏
🌹இனிதே நிறைவு பெற்றது..
🌹ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா...
🌹03.12.2025.. நேசமுடன் விஜயராகவன்.... #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #✡️ஜோதிட பரிகாரங்கள் #🙏🏻சரணம் ஐயப்பா #🛕ஐயப்பன் ஸ்பெஷல் பிரசாதம்🍚 #🛕சபரிமலை தரிசனம்
மதுரை மீனாட்சி அன்னையை தரிசனம் செய்வதில் மறைந்துள்ள தெய்வீக ரகசியம் பற்றி தெரியுமா?
பழனியில் முருகன் காலையில் ஆண்டி கோலத்திலும், மாலையில் ராஜ அலங்காரத்திலும் காட்சி தருவார்.
சோட்டானிக்கரை பகவதி அம்மன் சரஸ்வதி, லட்சுமி, பார்வதிதேவி.. என மூன்று விதமாய் காட்சி தருவாள்.
அந்த வரிசையில், மதுரையில் மீனாட்சி அம்மன் மொத்தம் 8 விதமான அலங்காரங்களில் காட்சி அளிக்கின்றாள்.
சக்தியில்லையேல் சிவமில்லை என சிவனே உணர்ந்திருந்த போதும், சக்தி தலங்களாய் விளங்கும் ஊர்களில் சிவனின் ஆட்சியே நடக்கும்.
ஆனால், மதுரையில் அன்னையின் கையே ஓங்கி இருக்கும். மதுரையின் அரசியாய் மீனாட்சியே ஆட்சி செய்கிறாள்.
முதலில், மீனாட்சி அம்மனுக்கு அபிஷேகம், பூஜைகள் செய்தபின்னரே சுந்தரேஸ்வரருக்கு செய்வது வழக்கம்.
பக்தர்களும் அன்னையை வணங்கிய பின்னரே அப்பனை வணங்கி வருகின்றனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பல அதிசயங்கள் உள்ளது.
மதுரையில் மீனாட்சி தினமும்
8 விதமான சக்திகளாகப் பாவிக்கப்பட்டு ஆராதிக்கப்படுகிறாள்.
இது மற்ற கோவில்களில் இல்லாத ஒரு சிறப்பு.
அவை ..
திருவனந்தல் – பள்ளியறையில் – மஹா ஷோடசி
ப்ராத சந்தியில் – பாலா
6 – 8 நாழிகை வரையில் –
புவனேஸ்வரி
12 – 15 நாழிகை வரையில் – கெளரி
மத்யானத்தில் – சியாமளா
சாயரக்ஷையில் – மாதங்கி
அர்த்த ஜாமத்தில் – பஞ்சதசி
பள்ளியறைக்குப் போகையில் – ஷோடசி
அன்னைக்கு 5 கால பூஜைகள் நடக்கும்போது, மேலே சொன்ன ரூபங்களுக்கு ஏற்றவாறுதான் அலங்காரங்கள் செய்விக்கப்படும்.
காலையில் சின்னஞ்சிறு சிறுமி போன்றும், உச்சிக்காலத்தில் மடிசார் புடவை கட்டியும், மாலை நேரத்தில் தங்க கவசமும், வைரக்கிரீடமும் அணிந்தும், இரவு அர்த்த ஜாமத்தில் வெண்பட்டு புடவை அணிந்தும் அன்னை காட்சி தருகிறாள்.
இது வேறு எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாகும்.
அன்னையின் இந்த ஒவ்வொரு அலங்கார காட்சியையும் காண கண்கோடி வேண்டும்.
*ஒரேநாளில் புவனேஷ்வரி, கௌரி, சியாமளா, மாதங்கி, பஞ்சதசி என அன்னையின் அத்தனை ரூபத்தினையும் தரிசிப்பவர்களும் மறுப்பிறப்பு கிடையாது என்பதே அன்னையை தரிசனம் செய்வதில் மறைந்துள்ள தெய்வீக ரகசியமாகும்*
*வாழ்க்கையில் ஒரு முறையேனும் காணவேண்டிய அன்னை மீனாட்சியின் பள்ளியறை பூஜை*!
எல்லா கோவில்களையும் போல, மதுரை மீனாட்சியம்மன் கோவிலிலும்போல பள்ளியறை அம்மன் சன்னதியில் இருக்கிறது.
இரவு அர்த்த ஜாமத்தில்
மல்லிகை பூவால் கூடாரம் கண்டு, வெண்தாமரைகளால் மீனாட்சியின் பாதங்கள் அலங்கரிக்கப்பட்டு, வெண்பட்டால் அம்மனை அலங்கரித்து கிடைக்கும் அன்னையின் திருக்காட்சி காண கண்கோடி வேண்டும்.
இரவு பள்ளியறைக்கு சுந்தரேஸ்வரரது வெள்ளிப் பாதுகைகள் ஸ்வாமி சன்னதியில் இருந்து பள்ளியறை வரும்.
பாதுகைகள் வந்தபின் அன்னைக்கு விசேஷ ஹாரத்தி (மூக்குத்தி தீபாராதனை ) நடக்கிறது.
உள்ளே இருக்கும் பெரும்பாலான வண்ணம் வெள்ளை.ஆகவே தான் அன்னையின் மூக்குத்தியை மிக தெளிவாக தரிசிக்க இயலும்.
அத்தோடு மூன்று வகையான தீபங்கள் காட்டப்படும் அதில் கடைசி தீபம் அம்மனின் முகத்திற்கு மிக அருகில் காட்டுவர்.
அவ்வாறு காட்டப்படும் போது மிக தெளிவாக அம்மனின் திருமுகத்தினை தரிசிக்கலாம்.
மூன்றாவது தீபாராதனைக்குப் பிறகு அன்னையின் சன்னதியில் திரை போடப்படும்.
அவ்வாறு திரையிட்ட பின்னர் அன்னையின் மூக்குத்தி பின்புறமாக தள்ளப்பட்டுவிடுகிறது.
(மூக்குத்தியானது ஒரு செயினுடன் இணைக்கப்பட்டு அந்த செயினின் இன்னொரு பகுதி அம்மனது பின்புறத்தில் இணைக்கப்பட்டு இருக்கும்)
இவ்வாறு செய்த பிறகே அன்னையின் சார்பாக அன்றைய கட்டளைக்கான பட்டர் ஈசனை வரவேற்று பள்ளியறைக்கு எழுந்தருளச் செய்வார்.
அதாவது மூலஸ்தானத்தில் இருக்கும் மீனாக்ஷி சுந்தரேஸ்வரருக்கு பாதபூஜை செய்து பள்ளியறைக்கு அழைத்துச் செல்வதாக ஐதீகம்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் இந்த பள்ளியறை பூஜை பார்க்கப் பார்க்கத் திகட்டா காட்சியாகும்
பள்ளியறை பூஜை சிவ – சக்தி ஐக்கியத்தை உணர்த்துவதால் இந்த தரிசனத்திற்கு சிறப்பு அதிகம்.
அதன் பின்னர் அம்பிகையின் சன்னதி மூடப்பட்டு பள்ளியறையில் பூஜை, பால், பழங்கள், பாடல்கள், வாத்ய இசை என்று சகல உபசாரங்களுடன் இரவு கோவில் நடை சார்த்தப்படுகிறது.
குறிப்பாக திருமணமாகாதவர்கள் தொடர்ந்து ஐந்து வெள்ளிக்கிழமை பள்ளியறை பூஜையில் கலந்து கொண்டால் உடனே மனம் போல திருமணம் நடப்பது உறுதி.
*மேலும் கணவன் மனைவி ஒற்றுமைக்கு மதுரை மீனாட்சி கோவிலில் தினமும் நடைபெறும் பள்ளியறை பூஜையை தரித்தல் நல்ல பயனைக் கொடுக்கும் என்பதும் மீனாட்சி கோவிலில் மறைந்துள்ள பள்ளியறை பூஜை தரிசன ரகசியமாகும்*
குழந்தை பாக்கியம் இல்லாதோர்,
பிள்ளை வரம் வேண்டுவோர் கட்டாயம் காண வேண்டிய அன்னை மீனாட்சியின் தரிசனம்!
குழந்தை பாக்கியம் இல்லாதோர். பிள்ளை வரம் வேண்டுவோர் காலையில் மீனாட்சி அம்மனின் சின்னஞ்சிறு சிறுமி அலங்காரத்துடன் நடக்கும் ஆராதனையை தரிசித்து மனமுருகி வேண்டினால் அன்னை சந்தான பாக்கிய பலனை கட்டாயம் தருவாள் .
வியாபாரத்தில் நஷ்டம் தொழில் மற்றும் வேலையில் பிரச்சனை உள்ளவர்கள் காண வேண்டிய தரிசனம்.
வியாபார நஷ்டம்,தொழில் மற்றும் வேலையில் பிரச்சனை உள்ளவர்கள் அன்னையின் வைர கிரீட அலங்காரத்தினை கண்டு தரிசித்தால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் பெறலாம்
வாழ்வில் ஒருமுறையேனும் தரிசிக்க வேண்டிய கோவில்களில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்கு முக்கிய இடமுண்டு…
இவையெல்லாவற்றையும்
விட புண்ணியம் செய்தவர்களுக்கு மட்டுமே அன்னை ஸ்ரீமீனாட்சியை *புவனேஷ்வரி*,*கௌரி*,
*சியாமளா*,
*மாதங்கி*,
*பஞ்சதசி*
என எல்லா அலங்காரத்திலும் தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை
மீனாட்சி அன்னையின் பாதம் பணியுங்கள்!!வாழ்வில் எல்லா வளங்களையும் பெறுங்கள்!!!
நன்றி🙏🙏🙏 #✨கடவுள் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🔍ஜோதிட உலகம் 🌍 #📸பக்தி படம் #✡️தோஷ பரிகாரங்கள்
#தெரிந்த_புராணம்... #தெரியாத_கதை...
ஸ்ரீகிருஷ்ணன் கூறியபடி, அவரை துணியில் சுற்றி, கூடை ஒன்றில் வைத்து, தலையில் சுமந்து கோகுலம் நோக்கிச் சென்றார் வசுதேவர். திடீரென இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது. வசுதேவர் யமுனை நதியைக் கடந்துதான் அக்கரையிலுள்ள கோகுலம் அடைய முடியும். அடைமழையால் யமுனையில் வெள்ளம் கரைபுரண்டு ஓட ஆரம்பித்தது. எந்தத் தடையையும் கண்டு அஞ்சாமல் வசுதேவர் யமுனையில் காலெடுத்து வைத்தார். அப்போது ஐந்து தலை நாகம் ஒன்று படமெடுத்து, கூடைக்கு மேல் குடையாகி வசுதேவரைப் பின்தொடர்ந்தது. யமுனையாற்றில் வசுதேவர் நடக்க ஆரம்பித்ததும், ஆற்றின் நீர்மட்டம் மேலும் உயர ஆரம்பித்தது. ‘கட்டளையிட்ட கடவுள் காப்பாற்றுவான்’ என்ற நம்பிக்கையில் வசுதேவர் ஆற்றைக் கடந்து கொண்டிருந்தார். திடீரென நீர்மட்டம் குறைய ஆரம்பித்தது. மழையின் வேகமும் குறைந்தது. யமுனை இரண்டாகப் பிரிந்து, வசுதேவர் நடந்துசெல்ல வழிவிட்டது.
அனைவருக்கும் #தெரிந்த_புராண வரலாறுதான் இது. இதில் பலருக்குத் #தெரியாத_கதை_எது என்று இனி பார்ப்போம்…
ஆவணி மாதத்தில் அஷ்டமி திதியில், ரோகிணி நட்சத்திரத்தில் ஸ்ரீகிருஷ்ணர் பிறந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. பொதுவாக இந்த மாதத்தில், பாரதத்தின் வடக்குப் பகுதியில் பெருமழை பெய்யும் பருவநிலை கிடையாது. வசுதேவர் குழந்தைக் கிருஷ்ணனைச் சுமந்து சென்ற போது, ஏன் இந்த மழை பெய்ய வேண்டும்? யமுனையில் ஏன் வெள்ளம் வர வேண்டும்? வசுதேவருக்கு ஏன் இந்தச் சோதனை ஏற்பட வேண்டும்?
இதற்கெல்லாம் ஓர் அற்புதமான காரணம் இருந்தது. #ரூபகோஸ்வாமி எழுதிய ‘#பிருந்தாவன_கீதை’ எனும் நூலில் இதற்கான விளக்கங்களை அறிய முடிகிறது.
ஒருமுறை, #கந்தர்வன் ஒருவன், ஒரு முனிவரின் சாபத்தால் காளிங்கன் என்ற பெயருடைய ஐந்து தலை நாகமாக மாறினான். ஸ்ரீமகாவிஷ்ணுவின் புனிதப் பாதங்கள் அவன் சிரசில் படும்போது அவன் சாபம் நீங்கும் என்று முனிவர் கூறியிருந்தார். பகவான் விஷ்ணுவின் அவதாரத்துக்காகக் காத்திருந்தான் காளிங்கன்.
பகவான் விஷ்ணுவின் மற்றொரு பக்தை #யமுனை. இவள் சூரியபகவானின் புத்திரி. கங்காதேவியைப் போல விஷ்ணு பாதத்தைத் தொட்டுச் சரணடைய வேண்டுமெனக் கடும் தவம் புரிந்தாள். விஷ்ணு அவள் முன் தோன்றி, தனது கிருஷ்ணாவதார காலத்தில் அவள் விருப்பம் நிறைவேறுமென வாக்களித்தார். அன்றுமுதல், யமுனையாக ஓடிக்கொண்டிருக்கும் சூரிய புத்திரியும், கிருஷ்ணாவதாரம் எப்போது நிகழுமென எதிர்பார்த்துக் காத்திருந்தாள். யமுனையின் தவத்துக்குப் பலன் தரவே, ஸ்ரீகிருஷ்ணன் பிறந்ததும் அதிசயமாக மழை பெய்து, யமுனையில் வெள்ளம் பெருக்கெடுத்தது.
கூடையில் குழந்தை கிருஷ்ணனைச் சுமந்துகொண்டு வசுதேவர் யமுனைக் கரைக்கு வந்ததுமே, இரண்டு பக்தர்கள் அவர் திருவடி தங்கள் மீது படாதா என ஏங்கினர். ஒருவன் காளிங்கன் எனும் நாகம்; மற்றவள் யமுனை. ஆனால், காளிங்கன் சாபம் பெறுவதற்கு முன்பே தவத்தைத் தொடங்கிய யமுனைக்கே முதலில் அருள்தர நினைத்தார் பகவான். ஆற்றில் வசுதேவர் இறங்கி நடந்து செல்கையில், கூடையிலுள்ள கிருஷ்ணனின் பாதங்கள் மேல் நோக்கி உயர்ந்திருந்தால் காளிங்கன் சாப விமோசனம் பெற்றிருப்பான். ஆனால், கிருஷ்ணன் வேறுவிதமாக லீலை புரிந்தார்.
யமுனையில் இறங்கி நடந்த வசுதேவரின் வைராக்கியத்தை முதலில் தெரிந்துகொள்ள விரும்பினார். கடும் மழையாலும், வெள்ளத்தாலும் யமுனையில் நீர்மட்டம் உயர்ந்துகொண்டே இருந்தது. இடுப்புவரை இருந்த வெள்ளநீர் கழுத்துவரை வந்தபோதும்கூட, கவலைப்படாமல் தன் கடமையைச் செய்துகொண்டிருந்த வசுதேவரின் சிரத்தா பக்தியை எண்ணி வியந்தார் ஸ்ரீகிருஷ்ணன். நீர்மட்டம் வசுதேவரின் மூக்கைத் தொடும் நிலை வந்த போது, கண்ணன் கருணை பொழிந்தார். தன் கால்களைக் கூடைக்கு வெளியே போட்டார். அவர் பாதங்கள் யமுனையைத் தொட்டன.
இதன்மூலம் யமுனையின் தவம் நிறைவேறியது. தனக்குக் கருணை புரிந்த கிருஷ்ணனின் சங்கல்பம் நிறைவேற யமுனை தன் வேகத்தைக் குறைத்துக் கொண்டாள். அதனாலேயே நீர்மட்டம் குறைந்தது. அவள் இரண்டாகப் பிரிந்து, வசுதேவர் செல்ல வழியமைத்துத் தந்தாள்.
காளிங்கன் ஏமாற்றம் அடைந்தாலும், நம்பிக்கையைக் கைவிடவில்லை. பிருந்தாவனத்தில் இருந்த பொய்கையில் வாழ ஆரம்பித்தான். அவன் விடும் மூச்சுக் காற்றாலும், கக்கும் விஷத்தாலும் மாசடைந்தது பொய்கை. அதனால், ‘காளிங்கன் பொய்கை’ என அதை அழைத்து, அதன் அருகில் செல்லாமல் ஒதுங்கி இருந்தனர் மக்கள். ஆனால், ஸ்ரீகிருஷ்ணன் காளிங்கனை மறக்கவில்லை. ஒருநாள் கோபாலர்களுடன் மாடு மேய்க்கச் சென்ற அவர், யார் தடுத்தும் கேளாமல் அந்தப் பொய்கையில் குதித்தார். காளிங்கன் தன் படத்தைத் தூக்கி, கிருஷ்ணனை தாங்கிக் கொண்டான். ஸ்ரீகிருஷ்ணன் அதன்மீது நர்த்தனம் செய்தார். காளிங்கன் சாபம் நீங்கியது.
‘எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்’ என்று சொல்வார்கள். இது மனிதர்களுக்கு! ஆனால், இறைவன் மனித வடிவில் அவதாரம் செய்யும்போது, அவர் பாதங்களே பிரதானம். ராமாவதாரத்தில் கங்கைக்கரை வேடன் குஹன் ராமனின் திருவடிகளுக்குப் பூஜை செய்கின்றான். தனக்குத் தன் தாய் கைகேயி வாங்கித் தந்த நாட்டை வேண்டாமெனக் கூறி ராமன் திருவடிகளின் அம்சமான அவனது பாதுகைகளையே பதினான்கு வருடம் பூஜிக்கிறான் பரதன்.
அதுபோல, கிருஷ்ணாவதாரத்திலும் கிருஷ்ணனின் பாதங்களின் பெருமை பல இடங்களில் புகழப்படுகிறது. கிருஷ்ண ஜயந்தி அன்று வீடுகளில் கிருஷ்ணனின் பாதத்தை மாக்கோலமாகப் போட்டு, கிருஷ்ணனை வழிபடும் பழக்கம் தொன்றுதொட்டு நம் நாட்டில் இருந்துவருகிறது. இதுவும் பகவானின் பாத மகிமையைப் போற்றுவதற்காக அமைந்த ஒரு வழிபாட்டு முறைதான்.
இப்படி, இறைவன் திருவடியின் மகிமை எத்தனையோ புராண இதிகாசங்களில் கூறப்பட்டிருந்தாலும், #திருவள்ளுவப் பெருமானின் கீழ்க்காணும் திருக்குறளில் உள்ள ஆழமான கருத்தை வேறெங்கும் காணமுடியாது.
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு
‘பற்றை- அதாவது, ஆசாபாசங்களை உதறுவதற்கு, பற்றேதும் இல்லாத பரம்பொருளான இறைவனின் திருப்பாதங்களைப் பிடித்துக் கொள்ளுங்கள். எக்காரணம் கொண்டும் அந்தப் பிடியை விட்டுவிடாதீர்கள்’ என்பது இதன் பொருள்.
நாமெல்லாம் துன்பம் வரும்போது இறைவனை வேண்டுவது வழக்கம். அந்தத் துன்பம் நீங்கிய பின், அதனை மறந்து விடுவதும் இயல்பு. இந்த முறையை மாற்றி, எப்போதும் இறைவனின் திருவடியையே பற்றி நம்பிக்கையோடு வாழுங்கள் என்பதே வள்ளுவர் காட்டும் வழி.fb share
#🙏பெருமாள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #✨கடவுள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻
#🕉️கந்த சஷ்டி கவசம் #🕉️ஓம் முருகா #✡️ராசிபலன் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #📸பக்தி படம்
#✨கந்தசஷ்டி விரதம் முதல் நாள்🙏 #🙇♀️பக்தி வீடியோஸ்🛐 #🕉️ஓம் முருகா #🕉️கந்த சஷ்டி கவசம் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞










![🙏பெருமாள் - @Vrindavan Chandrodaya Mandir] @Vrindavan Chandrodaya Mandir] - ShareChat 🙏பெருமாள் - @Vrindavan Chandrodaya Mandir] @Vrindavan Chandrodaya Mandir] - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_128496_14e4a2d3_1764751126399_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=399_sc.jpg)
