
பாஸ்கர் இராமாநுஜதாசன் 969 ஓம்திருமூர்த்தி மண்ணு
@baskar3883
ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்
ஸ்ரீ (969)🏹🚩வாட்கலியன் பரகாலன் மங்கையர்கோன் வாழியே #ராமாநுஜர்
ஸ்ரீ (969)🏹🚩நம் அழகிய மணவாளன் #நம்பெருமாள் ஸ்ரீரங்கம் #அரங்கன் ஸ்ரீரங்கம்
ஸ்ரீ (969)🏹🚩 #பெருமாள்
ஸ்ரீ (969)🏹🚩 #ராமாநுஜர்
ஸ்ரீ (969)🏹🚩 #பெருமாள்
ஸ்ரீ (969)🏹🚩 #ராமாநுஜர்
ஸ்ரீ (969)🏹🚩இன்று திருமங்கையாழ்வார் திருநட்சத்திரம்
********************************************
திருமங்கையாழ்வார் பிறந்த இடம் : திருக்குறையலூர் ( நாகப்பட்டினம் மாவட்டமசீர்காழி அருகில்)
தந்தை : ஆலிநாடுடையார்
தாய் : வல்லித்திரு அம்மையார்
பிறந்த காலம் : எட்டாம் நூற்றாண்டு நளஆண்டு கார்த்திகை மாதம்
நட்சத்திரம் : கார்த்திகை
திதி : பவுர்ணமி திதி
கிழமை : வியாழன்
எழுதிய நூல் : பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருஎழுகூற்றிருக்கை, பெரிய திருமடல்,சிறிய திருமடல்.
பாடிய பாடல் : 1253
சிறப்பு : திருமாலின் சார்ங்கம் என்ற வில் லின் அம்சமாக பிறந்தவர், மன்னனாகப் பிறந்து பக்தி மார்க்கத்தில்திளைத்தவர்.
பெற்றோர்கள் இவருக்கு நீலன் என்று பெயரிட்டனர். இவரது வீரத்தில் மகிழ்ந்த மன்னன், நீலனை தன் படைத்தளபதி ஆக்கியதுடன், திருவாலி நாட்டின் மன்னனாகவும் ஆக்கினான்.
அமங்கலை என்ற தேலோக கன்னி, கபில முனிவரின் சாபத்தால் பூமியில் குமுதவல்லி நாச்சியார் என்ற பெயரில் வளர்ந்து வந்தாள். இவளது புகழையும், அறிவையும் கேள்விப்பட்ட திருமங்கைஆழ்வார் இவளைத்திருமணம் செய்ய விரும்பினார்.
விஷ்ணுவின் பக்தையான குமுதவல்லியோ தன்னை திருமணம் செய்ய வேண்டுமானால் தினமும் ஆயிரத்தெட்டு வைணவர்களுக்கு அமுது படைக்க வேண்டும் என்ற நிபந்தனை விதித்தாள்.
நிபந்தனையின் பேரில் அமுது படைத்து, படைத்து அரண்மனையின் நிதி நிலை சரிந்தது. வழக்கமாக சோழமன்னனுக்கு கப்பம் கேட்டு வந்த ஏவலர்களிடம் தன் நிலையை கூறி அனுப்பி விட்டார்.
கோபமடைந்த மன்னன் அமைச்சர்களுடன் தன் படையை அனுப்பி ஆழ்வாரை பிடித்து வரும்படி கூறினான். ஆனால் அனைவரும் விரட்டியடிக்கப்பட்டனர். எனவே மன்னனே பெரும் படையுடன் சென்றான். ஆனாலும் ஆழ்வார் அவர்களை புறமுதுகிட்டு ஓடச்செய்தார்.
ஆழ்வாரின் வீரத்தில் மகிழ்ந்த மன்னன் அவரிடம் நேரில் சென்று பேச்சுப்படி கப்பம் கட்டுவதே சிறந்தது. அதுவரை என் கைதியாக கோயிலில் தங்கியிரு என்றார். மன்னன் கூறியபடி ஆழ்வாரும் மூன்றுநாட்கள் எதுவும் சாப்பிடாமல் கோயிலில் தங்கியிருந்தார்.
பசி மயக்கத்தில் தூங்கிய ஆழ்வாரின் கனவில் தோன்றிய காஞ்சிபுரத்து தன் சேவைக்கு வந்தால் அவரது கடன் தீர்க்கும் வகையில் பொருளுதவி செய்வதாக கூறினார்.
மன்னனின் அனுமதிபெற்று படையினருடன் காஞ்சிபுரம் சென்ற ஆழ்வார், பெருமாள் கூறிய இடத்தில் தோண்டவும், பெரும் புதையல் இருந்தது. அதை எடுத்து மன்னனுக்குரிய கடனை அடைத்து விட்டு மீதியை அமுது படைக்க வைத்துக்கொண்டார்.
இதையறிந்த மன்னன் ஆழ்வாரைப் பணிந்து, பணத்தை திருப்பிக்கொடுத்து அமுது படைக்கவைத்துக் கொள்ள கூறினார். இந்தப்பணமும் தீர்ந்து போகவே, ஆழ்வார் தன் அமைச்சர்களுடன் பணக்காரர்களிடம் கொள்ளையடித்து அமுதுபடைத்து வந்தார்.
ஒரு முறை நாராயணன் லட்சுமி தேவியுடன் மணக்கோலத்தில் வந்தார். ஆழ்வார் தன் படையினருடன் அவர்களை மிரட்டி அவர்களது நகைகளை பெற்றுக்கொண்டார். ஆனால் தன் கால் விரல் மோதிரத்தை மட்டும் நாராயணன் கழட்டவில்லை. ஆழ்வாரும் மோதிரத்தை கழட்டும்படி கூறியதற்கு, என்னால் முடியவில்லை முடிந்தால் நீயே கழட்டிக்கொள் என்றார் நாராயணன்.
அதேபோல் ஆழ்வாரும் குனிந்து தன் பற்களால் விரலைக்கடித்து மோதிரத்தை இழுத்தார். அப்போது நாராயணன் ஆழ்வாரின் காதுகளில் நாராயண மந்திரத்தை உபதேசித்தார்.
வந்திருப்பது நாராயணன் என்பதை அறிந்த ஆழ்வார் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டார். ஆழ்வார் திருடனாக இருந்தாலும் தன் உணவுக்கு கூட அதை எடுக்காமல் யாசித்து சாப்பிட்டார்.
பெருமாளின் 108 திருப்பதிகளில் இவர் தனியாக சென்று 46 கோயில்களையும், மற்ற ஆழ்வார்களுடன் சேர்ந்து 36 கோயில்களையும் என மொத்தம் 82 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.
12 ஆழ்வார்களில் இவர்தான் அதிக பெருமாள் திருத்தலங்களை மங்களாசாசனம் செய்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது வரலாற்றில் ஒரு சிறப்பு என்னவென்றால் இவர் மொத்தம் 82 பெருமாள் கோயில்களை மங்களாசாசனம் செய்திருந்தாலும், தான் பிறந்த சொந்த ஊரான திருக்குறையலூரில் உள்ள பெருமாள் கோயிலை மங்களாசாசனம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
திருமங்கை ஆழ்வார் தனியாக சென்று மங்களாசாசனம் செய்த கோயில்கள்-46
----------------------------------------------------------------------
1. திருப்புல்லாணி (அருள்மிகு கல்யாண ஜகன்னாதர் திருக்கோயில், திருப்புல்லாணி, ராமநாதபுரம்)
2. திருமயம் (அருள்மிகு சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோயில், திருமயம், புதுக்கோட்டை)
3. திருக்கரம்பனூர் (அருள்மிகு புரு÷ஷாத்தமன் திருக்கோயில், உத்தமர் கோயில், திருச்சி)
4. கண்டியூர் (அருள்மிகு ஹரசாப விமோசனர் திருக்கோயில், கண்டியூர், தஞ்சாவூர்)
5. நைமிசாரண்யம் (அருள்மிகு தேவராஜர் திருக்கோயில், நைமிசாரண்யம், உ.பி.)
6. ஜோதிஷ்மட், திருப்பிரிதி(அருள்மிகு பரமபுருஷர் திருக்கோயில், நந்தப்பிரயாக், உ.பி.)
7. சிங்கவேள்குன்றம் (அருள்மிகு பிரகலாத வரதன்,நரசிம்மர் திருக்கோயில், அகோபிலம், கர்நூல், ஆந்திரா)
8. திருஎவ்வுள் (அருள்மிகு வீரராகவ பெருமாள் திருக்கோயில், திருவள்ளூர்)
9. தின்னனூர் (அருள்மிகு பக்தவத்சல பெருமாள் திருக்கோயில், திருநின்றவூர், திருவள்ளூர் மாவட்டம்)
10. திருத்தண்கா (அருள்மிகு விளக்கொளி பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்)
11. திருப்பரமேஸ்வர விண்ணகரம் (அருள்மிகு பரமபதநாதன் திருக்கோயில், திருப்பரமேஸ்வர விண்ணகரம், காஞ்சிபுரம்)
12. திருப்பவள வண்ணம் (அருள்மிகு பவள வண்ணர் திருக்கோயில், திருப்பவள வண்ணம், காஞ்சிபுரம்)
13. திரு நீரகம் (அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில்) காஞ்சிபுரம்
14. திரு காரகம் (அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில்) காஞ்சிபுரம்
15. திருக்கார் வானம் (அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில்) காஞ்சிபுரம்
16. திருக்கள்வனூர் (அருள்மிகு ஆதிவராக பெருமாள், கள்வப்பெருமாள் திருக்கோயில்கள், திருக்கள்வனூர், காமாட்சி அம்மன் கோயிலுக்குள் உள்ள சன்னதி, காஞ்சிபுரம்)
17. நிலாத்திங்கள் துண்டான் (அருள்மிகு சந்திர சூடப் பெருமாள் திருக்கோயில், நிலாத்திங்கள் துண்டான், ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குள் உள்ள சன்னதி, காஞ்சிபுரம்)
18. திருப்புட்குழி (அருள்மிகு விஜய ராகவப் பெருமாள் திருக்கோயில், திருப்புட்குழி, காஞ்சிபுரம்)
19. திருவஹீந்தபுரம் (அருள்மிகு தெய்வநாயகன் திருக்கோயில், திருவகிந்திபுரம், கடலூர்)
20. காழிச்சீராம விண்ணகரம் (அருள்மிகு திரிவிக்ரமன் திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம்)
21. திருக்காவளம்பாடி (அருள்மிகு கோபாலகிருஷ்ணன் திருக்கோயில், திருக்காவளம்பாடி, திருநாங்கூர், நாகப்பட்டினம்)
22. திருவெள்ளக்குளம் (அருள்மிகு ஸ்ரீ நிவாசன் திருக்கோயில், திருவெள்ளக்குளம், திருநாங்கூர், நாகப்பட்டினம்)
23. கீழைச்சாலை (அருள்மிகு தெய்வநாயகன் திருக்கோயில், திருத்தேவனார் தோகை, திருநாங்கூர், நாகப்பட்டினம்)
24. திருப்பார்த்தன் பள்ளி (அருள்மிகு தாமரையாள் கேள்வன் திருக்கோயில், திருப்பார்த்தன் பள்ளி, திருநாங்கூர், நாகப்பட்டினம்)
25. திருமணிக்கூடம் (அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயில், திருமணிக்கூடம், திருநாங்கூர், நாகப்பட்டினம்)
26. மணிமாடக் கோயில் (அருள்மிகு நாராயணன் திருக்கோயில், மணிமாடக் கோயில், திரு நாங்கூர், நாகப்பட்டினம்)
27. அரியமேய விண்ணகரம் (அருள்மிகு குடமாடு கூத்தன் திருக்கோயில், அரியமேய விண்ணகரம், திரு நாங்கூர், நாகப்பட்டினம்)
28. வன் புருத்÷ஷாத்தமம் (அருள்மிகு புருத்÷ஷாத்தமன் திருக்கோயில், வன் புருத்÷ஷாத்தமம், திரு நாங்கூர், நாகப்பட்டினம்
29. திருத்தேற்றி அம்பலம் (அருள்மிகு செங்கண்மால் திருக்கோயில், திருத்தேற்றி அம்பலம், திரு நாங்கூர், நாகப்பட்டினம்)
30. வைகுந்த விண்ணகரம் (அருள்மிகு வைகுண்டநாதன் திருக்கோயில், வைகுந்த விண்ணகரம், திரு நாங்கூர், நாகப்பட்டினம்
31. செம்பொன் சேய் கோயில், (அருள்மிகு பேரருளாளன் திருக்கோயில், செம்பொன்சேய் கோயில், திரு நாங்கூர், நாகப்பட்டினம்)
32. தலைசிங்க நான்மதியம் (அருள்மிகு நாண்மதியப் பெருமாள் திருக்கோயில், தலைச்சங்காடு, நாகப்பட்டினம்)
33. இந்தளூர் (அருள்மிகு பரிமள ரங்கநாதர் திருக்கோயில், திருஇந்தளூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம்)
34. தேரழுந்தூர் (அருள்மிகு தேவதிராஜன் திருக்கோயில், தேரழுந்தூர், நாகப்பட்டினம்)
35. திருச்சிறுபுலியூர் (அருள்மிகு அருள் மாகடல் திருக்கோயில், திருச்சிறுபுலியூர், திருவாரூர்)
36. நாகை (அருள்மிகு நீலமேகப் பெருமாள் திருக்கோயில், நாகபட்டினம்)
37. திருக்கண்ணங்குடி (அருள்மிகு லேகநாதப் பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணங்குடி, திருவாரூர்)
38. திருக்கண்ண மங்கை (அருள்மிகு பக்தவத்ஸலப் பெருமாள் திருக்கோயில், திருக்கண்ண மங்கை, திருவாரூர்)
39. திருச்சேறை (அருள்மிகு சாரநாதன் திருக்கோயில், திருச்சேறை, தஞ்சாவூர்)
40. திருநறையூர் (அருள்மிகு திருநறையூர் நம்பி திருக்கோயில், திருநறையூர், தஞ்சாவூர்)
41. திருவெள்ளியங்குடி (அருள்மிகு கோலவல்வில்லி ராமன் திருக்கோயில், திருவெள்ளியங்குடி, தஞ்சாவூர்)
42. நந்திபுர விண்ணகரம் (அருள்மிகு ஜகந்நாதன் திருக்கோயில், நந்திபுர விண்ணகரம், நாதன் கோயில், தஞ்சாவூர்)
43. ஆதனூர் (அருள்மிகு ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில், ஆதனூர், தஞ்சாவூர்)
44. திருப்புள்ளபூதங்குடி (அருள்மிகு வல்வில் ராமன் திருக்கோயில், திருப்புள்ளபூதங்குடி, தஞ்சாவூர்)
45. திருக்கூடலூர் (அருள்மிகு வையம் காத்த பெருமாள் திருக்கோயில், திருக்கூடலூர், தஞ்சாவூர்)
46. திருக்கோழி (அருள்மிகு அளகிய மணவாளர் திருக்கோயில், உறையூர், திருச்சி)
திருமங்கை ஆழ்வார் மற்ற ஆழ்வார்களுடன் சென்று மங்களாசாசனம் செய்த கோயில்கள்-36
----------------------------------------------------------------------
திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் (4)
----------------------------------------------------------------------
1. திருநீர்மலை (அருள்மிகு நீர்வண்ணன் திருக்கோயில், திருநீர்மலை, சென்னை, காஞ்சிபுரம் மாவட்டம்)
2. திருவிடந்தை (அருள்மிகு லட்சுமி வராகர் திருக்கோயில், திருவிடந்தை, காஞ்சிபுரம் மாவட்டம்)
3. திருக்கடல் மல்லை (அருள்மிகு ஸ்தல சயன பெருமாள் திருக்கோயில், மகாபலிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம்)
4. அத்திகிரி (அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்)
திருமங்கை ஆழ்வார், பொய்கையாழ்வார் (1)
----------------------------------------------------------------------
1. காஞ்சிபுரம் (அருள்மிகு ஆதி கேசவ பெருமாள் திருக்கோயில், அஷ்டபுஜம், காஞ்சிபுரம்)
திருமங்கை ஆழ்வார், திருமழிசை ஆழ்வார் (1)
1. திரு ஊரகம் (அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்)
திருமங்கையாழ்வார், பேயாழ்வார் (1)
----------------------------------------------------------------------
1. திருக்கடிகை (அருள்மிகு யோக நரசிம்மர் திருக்கோயில், சோளிங்கபுரம், வேலூர் மாவட்டம்)
திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் (5)
----------------------------------------------------------------------
1. திருமோகூர் (அருள்மிகு காளமேகப் பெருமாள் திருக்கோயில், திருமோகூர், மதுரை)
2. திருப்புலியூர் (அருள்மிகு மாயப்பிரான் திருக்கோயில்,திருப்புலியூர்,ஆழப்புழா, கேரளா மாநிலம்)
3. திருவல்லவாழ் (அருள்மிகு திருவாழ்மார்பன் திருக்கோயில், வல்லப ÷க்ஷத்திரம், பந்தனம் திட்டா, கேரளா மாநிலம்
4. திருமூழிக்களம் (அருள்மிகு லெட்சுமணப்பெருமாள் திருக்கோயில், திருமூழிக்களம்,எர்ணாகுளம், கேரளா மாநிலம்)
5. திருநாவாய் (அருள்மிகு நாவாய் முகுந்தன் திருக்கோயில், திருநாவாய்,மலப்புரம், கேரளா மாநிலம்)
திருமங்கை ஆழ்வார், பெரியாழ்வார் (3)
----------------------------------------------------------------------
1. பத்ரிநாத் (அருள்மிகு பத்ரிநாராயணர் திருக்கோயில், பத்ரிநாத், உ.பி,)
2. சாளக்கிராமம், முக்திநாத் (அருள்மிகு மூர்த்தி திருக்கோயில், சாளக்கிராமம், நேபாளம்)
3. திருக்கூடல் (அருள்மிகு கூடல் அழகர் பெருமாள் திருக்கோயில், திருக்கூடல், மதுரை)
திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார் (2)
----------------------------------------------------------------------
1. திருச்சித்ர கூடம் (அருள்மிகு கோவிந்த ராஜ பெருமாள் திருக்கோயில், சிதம்பரம், கடலூர் மாவட்டம்)
2. திருவாழித் திருநகரி, (அருள்மிகு லட்சுமி நரசிம்மர், தேவராஜன் திருக்கோயில், திருவாழித் திருநகரி, நாகப்பட்டினம்)
திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் (1)
----------------------------------------------------------------------
1. திருத்தங்கல் (அருள்மிகு குண்றின்மேல் நின்ற நாராயணன் திருக்கோயில், திருத்தங்கல், விருதுநகர்)
திருமங்கை ஆழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார் (1)
----------------------------------------------------------------------
1. திருஆய்பாடி (அருள்மிகு நவமோகனகிருஷ்ணன் திருக்கோயில், கோகுலம், உ.பி.)
திருமங்கை ஆழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார் (1)
----------------------------------------------------------------------
1. திருவல்லிக்கேணி (அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில், திருவல்லிக்கேணி, சென்னை)
திருமங்கை ஆழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் (1)
----------------------------------------------------------------------
1. திருக்கோயிலூர் (அருள்மிகு திரிவிக்கிரமர் திருக்கோயில், திருக்கோயிலூர், விழுப்புரம்)
திருமங்கையாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார் (1)
----------------------------------------------------------------------
1. திரு விண்ணகர் (அருள்மிகு ஒப்பிலியப்பன் திருக்கோயில், ஒப்பிலியப்பன்கோவில், தஞ்சாவூர்)
திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார்(1)
----------------------------------------------------------------------
1. வெண்ணாற்றங்கரை (அருள்மிகு நீலமேகப் பெருமாள், மணிக்குன்ற பெருமாள் திருக்கோயில்கள், தஞ்சைமாமணி கோயில், தஞ்சாவூர்)
திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார் (2)
----------------------------------------------------------------------
1. துவாரகை (அருள்மிகு கல்யாண நாராயணன் திருக்கோயில், துவாரகை, குஜராத்)
2. திருவடமதுரை (அருள்மிகு கோவர்த்தனன் திருக்கோயில், மதுரா, உ.பி.)
திருமங்கை ஆழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார் (1)
----------------------------------------------------------------------
1. திருவெக்கா (சொன்ன வண்ணம் செய்த பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம் மாவட்டம்)
திருமழிசையாழ்வார், பெரியாழ்வார், நம்மாழ்வார் (2)
----------------------------------------------------------------------
1. திருப்பேர் நகர் (அருள்மிகு அப்பக்குடத்தான் திருக்கோயில், கோயிலடி, தஞ்சாவூர்)
2. திருக்குறுங்குடி (அருள்மிகு நின்ற நம்பி திருக்கோயில், திருக்குறுங்குடி, திருநெல்வேலி)
திருமங்கை ஆழ்வார், திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார் (1)
----------------------------------------------------------------------
1. திருப்பாடகம் (அருள்மிகு பாண்டவ தூதப் பெருமாள் திருக்கோயில், திருப்பாடகம், காஞ்சிபுரம்)
திருமங்கை ஆழ்வார் ,பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகர ஆழ்வார், நம்மாழ்வார் (1)
----------------------------------------------------------------------
1. திருக்கண்ணபுரம் (அருள்மிகு நீலமேகப் பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணபுரம், திருவாரூர்)
திருமங்கை ஆழ்வார், பெரியாழ்வார், குலசேகர ஆழ்வார், தொண்டரடி பொடியாழ்வார், நம்மாழ்வார் (1)
----------------------------------------------------------------------
1. அயோத்தி (அருள்மிகு ரகுநாயகன் (ராமர்) திருக்கோயில், சரயு, அயோத்தி,பைசாபாத், உ.பி)
திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், பெரியாழ்வார், திருமழிசையாழ்வார், பேயாழ்வார் (1)
----------------------------------------------------------------------
1. திருக்கோஷ்டியூர் (அருள்மிகு சவுமிய நாராயணப்பெருமாள் திருக்கோயில், திருக்கோஷ்டியூர், சிவகங்கை)
திருமங்கை ஆழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார் (1)
----------------------------------------------------------------------
1. திருமாலிருஞ்சோலை (அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், அழகர் கோவில், மதுரை
திருமங்கை ஆழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்,திருமழிசை ஆழ்வார், நம்மாழ்வார் (1)
----------------------------------------------------------------------
1. கும்பகோணம் (அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில், கும்பகோணம், தஞ்சாவூர்)
திருமங்கை ஆழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார் (2)
----------------------------------------------------------------------
1. திருவேங்கடம் (அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில், திருப்பதி, சித்தூர், ஆந்திரா)
2. திருப்பாற்கடல்
திருமங்கை ஆழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார்,திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார், தொண்டரடி பொடியாழ்வார் (1)
----------------------------------------------------------------------
1. ஸ்ரீரங்கம் (அருள்மிகு ரங்கநாதன் திருக்கோயில், ஸ்ரீரங்கம், திருச்சி)
➡️➡️➡️➡️➡️➡️➡️⬆️⬅️⬅️⬅️⬅️⬅️⬅️⬅️ #பெருமாள் #ராமாநுஜர்
ஸ்ரீ (969)🏹🚩 #ராமாநுஜர்
ஸ்ரீ (969)🏹🚩 #ராமாநுஜர்
ஸ்ரீ (969)🏹🚩அடையார் சீயமும்,வலி மிக்க சீயமும்!!--பாகம் 1/3.
🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁
நாளை மறு நாள் (04/12/2025), கார்த்திகையில் கார்த்திகை-
திருமங்கை ஆழ்வார் திருநட்சத்திரம்.ஆழ்வார்களில் இளையவரான இவர் பயமறியாத இளங்கன்றாக பல ஆச்சர்ய மூட்டும் கைங்கர்யங்களைச் செய்துள்ளார்.
இவரே தம்மைப் பற்றி பல பட்டங்களைக் கட்டியங்களாகப் பாடியுள்ளார். அவற்றுள் ஒன்று, 'அடையார் சீயம்'--சத்ருக்களுக்கு சிம்மம் போன்றவர்.
அந்த 'அடையார் சீயம்' பாடிய பாசுரங்களை அனுபவித்து, நெஞ்சம்
பூரிக்க, அதனால் வலி(மை) மிக்க சிம்மமாய் ஆனார் ராமாநுஜர், என்கிறார் அமுதனார்.
"கலிமிக்க செந்நெற் கழனிக் குறையல் கலைப் பெருமாள்,
ஒலிமிக்க பாடலையுண்டு, தன்னுள்ளம் தடித்து அதனால்,
வலிமிக்க சீயம் இராமானுசன் மறை வாதியராம்,
புலிமிக்கதென்று இப்புவனத்தில் வந்தமை போற்றுவனே!"
அந்த அடையார் சீயத்துக்கும், இந்த வலிமிக்க சீயத்துக்கும் உள்ள உன்னதத் தொடர்பைப் பார்ப்போம்.
1.வேந்தரைப் பாடிய வேந்தர்:
✡☸⚛⚛🕎🔱🔱✡☸
எதிகளின்(சாதுக்களின்) வேந்தரான
(எதிராஜர்),குறையலூர் வேந்தரை (திருமங்கை மன்னன்)ப் போற்றிப் பாடிய தனியன்:
"வாழி பரகாலன்,வாழி கலிகன்றி,
வாழி குறையலூர் வாள் வேந்தன் -வாழியரோ
மாயோனை வாள்வழியால் மந்திரங்கொள் மங்கையர்கோன்
தூயோன் சுடர்மான் வேல்."
இந்த வேந்தர், மேலும் இரண்டு வேந்தர்களுக்கு மட்டுமே பாடியுள்ளார். ஆழ்வார்களின் வேந்தர் நம்மாழ்வாருக்கும்,( 'முந்துற்ற நெஞ்சே')சேரநாட்டு வேந்தர்,
குலசேகரஆழ்வாருக்கும்('இன்னமுதம் ஊட்டுகேன் இங்கே வா பைங்கிளியே!').
2.இமயத்தை வென்ற இன்னருளாளர்கள்:
🔔🔈🔉🔊📢📣🔔
86 திவ்ய தேசங்களைப் பாடிய திருமங்கை ஆழ்வார் முதலில் பாடியது இமயத்தில் உள்ள திருப்பிரிதி (1-1,2),திருவதரிபத்ரிநாத்(1-1-3,4),
திருசாளக்கிராமம்(1-1-5)நைமிசாரண்யம்(1-1-6)திவ்ய தேசங்கள்.
ராமாநுஜர் இமயத்தில் இருக்கும் காஷ்மீரம் சென்று தம் சாஸ்திர ஞானத்தால் அங்குள்ள பண்டிதர்களை வென்றார்.
அவருடைய மேன்மையை ஸ்ரீசரஸ்வதி தேவியே அங்கீகரித்து "ஸ்ரீபாஷ்யகாரர்"என்று அழைத்தார்.அவர் இயற்றிய ஸ்ரீபாஷ்ய சாரம் சுவடிகளைத் தம் சிரசில் வைத்து மரியாதை செய்தார்.
3.மாறன் அடிபணிந்து உய்ந்தவர்கள்:
🙏🙏🙏🙏🙏🙏
பரகாலன்,பராங்குசரின் நான்கு தமிழ் வேதங்களுக்கு ஆறு அங்கம் இயற்றினார். ஸ்ரீரங்கத்தில் பத்து நாட்கள் அத்யயன உற்சவம் ஆரம்பித்து நாளும் திருவாய்மொழி சேவிக்கச் செய்தார்.
ராமாநுஜர்
"உறுபெருஞ் செல்வமும், தந்தையும்,தாயும்,உயர்குருவும்,வெறிதரு பூமகள் நாதனும், மாறன் விளங்கியசீர்,
நெறி தரும் செந்தமிழ் ஆரணமே என்று இந்நீணிலத்தோர் அறிதரநின்றார்"
தம் காலட்சேபத்தில் திருவாய் மொழிக்கு பல அரிய அர்த்தங்கள் சாதித்தார். திருக்குருகைப் பிரான் பிள்ளான் மூலம் திருவாய் மொழிக்கு முதல் வ்யாக்யானம் -ஆறாயிரப்படி-இயற்றச் செய்தார்.
4.ஸ்ரீரங்கத்தில் அத்யயன உற்சவம் நடத்தி, நம்மாழ்வார் புகழ்பாடிய புண்ணியர்கள்:
👏👌👏👌👏👌👏👌
ஒரு கார்த்திகையில் கார்த்திகை
யன்று, நம்பெருமாள் சந்தனு மண்டபத்தில் எழுந்தருளியிருந்த போது, திருமங்கை ஆழ்வார் நம்பெருமாள் உகக்கும் வண்ணம் 'திருநெடுந் தாண்டகம்'என்னும் பிரபந்தம் பாடினார்.அவ்வமயம் திருமங்கையாழ்வார், பெருமாளிடம் 10 நாட்கள் திருவாய் மொழி உற்சவத்தை நடத்த வேண்டும் என்று விண்ணப்பித்தார்.
அரங்கரும் இசைந்து,உடனே ஆழ்வார் திருநகரியிலிருக்கும் நம்மாழ்வாருக்கு,ஸ்ரீரங்கம் வந்து அத்யயன உற்சவம் நடத்தித் தருமாறு ஒரு ஸ்ரீமுகம்(கடிதம்) அனுப்பச் செய்தார்.ஆழ்வார் திருநகரியிலிருந்து நம்மாழ்வார் ஒவ்வோர் ஆண்டும் ஸ்ரீரங்கம் எழுந்தருளி, வைகுண்ட ஏகாதசியிலிருந்து 10 நாட்கள் திருவாய்மொழி உற்சவம் நடத்தி வைத்தார்.திருமங்கை ஆழ்வார் கட்டிய நூற்றுக்கால் மண்டபத்தில் இந்த உற்சவம் நடந்தது.
நாதமுனிகள் காலத்தில் பகல் பத்து, இராப்பத்து என்று நாலாயிரத்துக்கும் விமரிசையாக நடந்த இந்த உற்சவம் சில ஆண்டுகளுக்குப் பின் பல தடைகளைக் கண்டது. ராமாநுஜர் காலத்தில் மீண்டும் இந்த உற்சவம் சிறப்பாக-நாலாயிரத்து
க்கும் ஆன முத்தமிழ் விழாவாக-இருபது நாட்கள் நடக்க ஏற்பாடு செய்தார்.ஆழ்வார்திருநகரியிலிருந்து,நம்மாழ்வாரை எழப்பண்ணுவதில் பல சிரமங்கள்/எதிர்ப்புக்களை எதிர் கொள்ள வேண்டியிருந்ததால்,
ஸ்ரீரங்கத்திலேயே நம்மாழ்வாருக்கு சந்நிதி அமைத்து,நம்மாழ்வார்,
மதுரகவியாழ்வார்,திருமங்கை ஆழ்வார் விக்ரகங்களை அந்த சந்நிதியில் பிரதிஷ்டை செய்வித்தார்.
பரமபத நாதர் சந்நிதிக்கு எதிரில் உள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் இந்த உற்சவம் நடந்தது. ஸ்ரீரங்கத்தில் மட்டுமல்லாது மற்ற திவ்ய தேசங்களிலும் இந்த உற்சவம் நடக்க ஏற்பாடு செய்தார்.
5.வேதத்தை விரித்துரைக்கும் கிரந்தங்களை இயற்றிய விற்பன்னர்கள்:
📖📃📓📔📖📃
தமிழ் வேதங்களாகிய நம்மாழ்வாரின் நான்கு பிரபந்தங்களை விரித்துரை க்கும் வண்ணம் ஆறு(6) அங்கங்களாக
"பெரிய திருமொழி,
சிறிய திருமடல்,
பெரிய திருமடல்,
திருக்குறுந்தாண்டகம்,
திருநெடுந்தாண்டகம்,
திருவெழு கூற்றிருக்கை"
என்னும் ஆறு பிரபந்தங்களைப் பாடினார் மங்கைமன்னன்.
வேதங்களை(வடமொழி) விரித்துரை
க்கும் வண்ணம் எம்பெருமானார் செய்த கிரந்தங்கள்:
"ஸ்ரீபாஷ்யம்
வேதார்த்த ஸங்ரஹம்,
வேதாந்த தீபம்,
வேதாந்த ஸாரம்,
கீதாபாஷ்யம்,
நித்ய கிரந்தம்"
என்னும் ஆறு கிரந்தங்களை இயற்றினார்('கத்யதிரயம்'இந்த வரிசையில் கொள்ளவில்லை.)
6.அரங்கருக்கு மதிள்கட்டிய மகான்கள்:
🏛🏛🏛🏛🏛🏛🏛🏛
திருமங்கை ஆழ்வார் அரங்கருக்கு நான்காம் சுற்று மதிளாக 'ஆலிநாடன் திருச்சுற்று' (கொட்டாரம்,களஞ்சியம்,மேல/கீழப்பட்டாபிராமர் சந்நிதி,
உள்மணல்வெளியை அடக்கியது) கட்டினார்.
ராமாநுஜர் நியமனமாக அவர் சீடர், சிற்றரசர் 'அகளங்க நாட்டாழ்வான்' ஐந்தாம் சுற்று மதிளைக் கட்டினார் (ரங்கா, ரங்கா கோபுரம்,வடக்கு
வாசல்,வெள்ளைகோபுரம் ஆகியவற்றை வாயில்களாகக் கொண்டது).
7 அரசர்கள் ஆஸ்ரயித்த ஆழ்வார்/ஆசார்யர்:
👍👍👍👍👍👍👍
திருவாலி நாட்டை ஆண்ட குறுநில மன்னர், திருமங்கை மன்னர் சோழப்பேரரசுக்குக் கட்ட வேண்டிய கப்பத்தொகையைக் கட்டாமல், அதை பகவத், பாகவத கைங்கர்யங்க
ளுக்குச் செலவிட்டார்.அரசு ஊழியர்கள் கப்பம் வசூலிக்க வந்த போது,அவர்களோடு போரிட்டு விரட்டி அனுப்பி விட்டார்.
அரசன் திருமங்கை மன்னரை சிறையில் அடைத்து விட்டான்.
அப்போது தேவப்பெருமாள் திருமங்கையார் கனவில் தோன்றி காஞ்சியில் வேகவதி நதிக்கரையில் செல்வம் இருப்பதாகவும் அதை எடுத்து அரசனுக்குக் கொடுக்கு மாறும் சொன்னார்.அரசனின் படை வீரர்களைத் தம்முடன் கூட்டிச் சென்ற பரகாலன், வேகவதிக் கரையில் ஆற்று மண்ணை அளந்து கொடுத்தார். முதலில் கோபித்த அவர்கள்,அளந்து கொடுத்த மண் நெல்லானது கண்டு வியந்தார்கள்.
அரசனிடம் சென்று நடந்ததைச் சொன்னார்கள்.ஆழ்வாரின் பெருமையறிந்த அரசன் அவருக்கு தண்டம் சமர்ப்பித்து, அவருக்கு மேலும் பல தனங்களைக் கொடுத்ததோடு, தானும் பலதான,தர்மங்களைச் செய்தான்.
ராமாநுஜரை பல பேரரசர்கள்-சோழ மன்னர்கள்,பல்லவராயன்,(ஆந்திரா)
பிட்டிதேவராயன்(விஷ்ணுவர்த்தன்-கர்நாடகா),சோடகங்கதேவன் (கலிங்கம்-ஒரிஸ்ஸா), காஷ்மீரமன்னன்,அகளங்கன் முதலானோர் ஆஸ்ரயித்து அவருடைய கைங்கர்யங்களுக்கு பெரும்தனம் கொடுத்து உதவினர்.
சிலர் அவரிடம் சீடர்களாகி ஸ்ரீவைஷ்ணவர்களாக மாறினர்.
8.காஞ்சி வரதர் அருளிய காருண்யம்:
🤚🤚🤚🤚🤚🤚🤚🤚
ராஜ தண்டனையிலிருந்து திருமங்கை ஆழ்வாரைக் காப்பாற்றுவதற்காக வரதர் மண்ணை நெல்லாக்கிய வைபவத்தை மேலே பார்த்தோம்.ராமாநுஜருக்கு,பல கட்டங்களில் வரதர் கருணை பொழிந்தார்.ஆறுவார்த்தை அருளியது, துறவறம் தந்தது, எதிராஜர் நாமம் சாற்றியது, ஸ்ரீவைஷ்ணவ சாம்ராஜ்யத்தின் தலைமைப் பொறுப்பேற்க ஸ்ரீரங்கம் அனுப்பி வைத்தது, திருவாராதனைப் பெருமாளாக வழி காட்டியது, யக்ஞமூர்த்தியை வாதத்தில் வெல்ல உதவியது,
ஆழ்வானுக்குக் கண் பார்வை அருளியது எனப்பல!!
......தொடரும்.
(அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்)
படங்கள்:
1.பரகாலன்.
2.திருமங்கை ஆழ்வார் வெண்ணெய்க்கு ஆடும் கண்ணனாக திரோவாலி திருநகரி
3,4:திருமங்கை ஆழ்வார் கட்டிய ஆலிநாடன் திருச்சுற்றில் உள்ள தானியக் களஞ்சியங்கள் (ஸ்ரீரங்கம்).
5.திருமங்கை ஆழ்வார் நான்காம் சுற்று மதிள் கட்டும் போது,தொண்டரடிப் பொடியாழ்வார் மாலை கட்டும் இடத்தை விட்டு வளைத்துக் கட்டியது(கோதண்டராமர் சந்நிதிக்குப் பின்புறம்).
6.பகல்பத்து உற்சவத்துக்கு எழுந்தருளும் நம்பெருமாள்.
7,8:நம்பெருமாளை வரவேற்கக் காத்திருக்கும் நம்மாழ்வார்,திருமங்கையாழ்வார்,ராமாநுஜர்;பெருமாள் புறப்பாட்டைத் தொடர்ந்து மூவரும்.
9,10,11,12.அத்யயன உற்சவம்-அர்ச்சுன மண்டபத்தில் நம்பெருமாள்,நம்மாழ்வார்
திருமங்கையாழ்வார்,உடையவர். #பெருமாள்








