ஐயனே…ஓம் ஸ்ரீ ராகவேந்திரா பெருமானே. போற்றி 🙏
விடியலில் எழ வேண்டும்.
விளக்கு ஏற்ற வேண்டும்.
திருநீறு பூச வேண்டும்.
ராகவேந்திரர் திருவடிகள் துதிக்க வேண்டும்.
திருவார்த்தை பேச வேண்டும்.
குரு நாமம் சொல்ல வேண்டும்.
கூடாததை தள்ள வேண்டும்.
தன் சுத்தம் பேண வேண்டும்.
தவறுக்கு நாண வேண்டும்.
மிதமான உணவு வேண்டும்.
முன்னேறும் கனவு வேண்டும்.
பெண்களை மதிக்க வேண்டும்.
பெற்றோரை துதிக்க வேண்டும்.
சனாதனம் போற்ற வேண்டும்.
சந்ததியை மாற்ற வேண்டும்.
உண்மையை பேச வேண்டும்.
பொய் சொல்ல கூச வேண்டும்.
அன்னதானம் செய்ய வேண்டும்.
ராயரின் கருணை போல அன்பு மழையாய் பெய்ய வேண்டும்.
அமைதியாய் வாழ வேண்டும்.
ஆன்மீகத்தில் ஆழ வேண்டும்.
எளிமையாய் இருக்க வேண்டும்.
இயன்றதை கொடுக்க வேண்டும்.
பேச்சில் தெளிவு வேண்டும்.
செயலில் வலிவு வேண்டும்.
தன்னை அறிதல் வேண்டும்.
தன் வலிமை புரிதல் வேண்டும்.
ராகவேந்திரர் பாதம் தேட வேண்டும்.
குரு கீர்த்தி பாட வேண்டும்.
இன்னும் எத்தனையோ வேண்டுதல்கள் உள்ளத்தில்,
என்ன செய்வது ஐயனே…
வேண்டத்தக்கது அறிவோய் ராயரே!
வேண்ட முழுதும் தருவோய் நீ.
#அர்ச்சனா ஆன்மீக சிந்தனைகள் & ஜோதிடம் 💝🙏 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏ஆன்மீகம் #✡️ஜோதிட பரிகாரங்கள் #ARCHANA EdITZ.
